பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்காவுக்கு சென்றி ருந்தார். இந்தியாவில் ஜெட் என்ஜின்களை உற்பத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தம், அமெரிக்காவிடமிருந்து ஙண-9இ ஆயுதமேந்திய ட்ரோன் களை வாங்குவது உள்ளிட்ட சில ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகின. இம்முறை மோடியின் அமெரிக்கப் பயணம் அவ்வளவு இனிதானதாக அமையவில்லை. ஒருபுறம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தரப் பின் உற்சாகமான வரவேற்பு இருந்தபோதிலும், ஆங்காங்கே மோடிக்கு எழுந்த எதிர்ப்பலை, பலராலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில், கிறிஸ் தவ, இஸ்லாமிய, தலித் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான அரசின் செயல்பாடு களால், அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு ஏற்பட்ட மன நெருக்கடியே மோடி விசிட்டில் எதிர்ப்பாக வெளிப்பட்டது.
"மனித உரிமைகளுக்கான இந்துக்கள்' என்ற அமைப்பின் தலைவரான மனித உரிமை ஆர்வலர் சுனிதா விஸ்வநாத், மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில், "பிரதமர் மோடி பற்ற
பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்காவுக்கு சென்றி ருந்தார். இந்தியாவில் ஜெட் என்ஜின்களை உற்பத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தம், அமெரிக்காவிடமிருந்து ஙண-9இ ஆயுதமேந்திய ட்ரோன் களை வாங்குவது உள்ளிட்ட சில ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகின. இம்முறை மோடியின் அமெரிக்கப் பயணம் அவ்வளவு இனிதானதாக அமையவில்லை. ஒருபுறம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தரப் பின் உற்சாகமான வரவேற்பு இருந்தபோதிலும், ஆங்காங்கே மோடிக்கு எழுந்த எதிர்ப்பலை, பலராலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில், கிறிஸ் தவ, இஸ்லாமிய, தலித் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான அரசின் செயல்பாடு களால், அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு ஏற்பட்ட மன நெருக்கடியே மோடி விசிட்டில் எதிர்ப்பாக வெளிப்பட்டது.
"மனித உரிமைகளுக்கான இந்துக்கள்' என்ற அமைப்பின் தலைவரான மனித உரிமை ஆர்வலர் சுனிதா விஸ்வநாத், மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில், "பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டதற் காக இந்திய அதிகாரிகள், பி.பி.சி.யின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் பழிவாங்கும் சோதனைகளை நடத்தினர். புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்படவிருந்த நிலையில், முக்கிய எதிர்க் கட்சித் தலைவரான ராகுல் காந்தியை பாராளுமன்றத்தி லிருந்தே வெளியேற்றினார்கள். மணிப்பூரில் வகுப்புவாத வன்முறைகள் தலைவிரித்தாடும் நிலையில் பிரதமர் மோடியை இங்கு வரவேற்கிறீர்கள். பைடன் நிர்வாகத்திலிருந்து ஒருவர் கூட இதுகுறித்தெல்லாம் மோடியிடம் கேள்வி எழுப்பவில்லை'' என்றெல்லாம் குறிப்பிட்டு மோடியை வரவேற்ற பைடனுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
அமெரிக்கா முழுக்க ஆங்காங்கே மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டங்களில் ஈடு பட்டனர். "நாங்கள் இந்தியர்கள். குறிப்பாக இந்துக்கள். இந்தியா வில் சிறுபான்மையினரை கொடூரமாக நடத்துவதை எங்களால் சகிக்க முடியவில்லை. இந்தியாவில் முஸ்லீம்களை மிக மோச மாக நடத்துவதைப்போல் இங்கே எவரேனும் எங்களை நடத்தி னால், உடனே இந்தியாவிற்கே திரும்பிவிடுவோம். மோடியோ, இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல், இந்தியாவில் ஜனநாயகத் தை காலில் போட்டு மிதித்து, சிறுபான்மையினர், தலித்துக் களுக்கு எதிராக மிகவும் வன்மத்தோடு செயல்படுகிறார். அமெரிக் கர்கள் இந்தியர் களுடன் நல்லதொரு உறவோடு வாழவே விரும்புகிறார்கள். ஆனால் இந்தியாவில் சிறுபான்மை மதங்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்கள், எங்களுடைய உறவைச் சிதைக்கக்கூடிய வகையில் இருப்பதால் நாங்கள் எங் கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக் கிறோம்'' என்று போராட்டக்காரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில், அமெரிக்க நாடாளுமன்றத் தில் உரையாற்றிய மோடி, பின்னர் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, செய்தி யாளர் சபரினா சித்திக், "இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளை வலுப்படுத்தவும், கருத்துரிமையை உறுதி செய்யவும் உங்கள் அரசும், நீங்களும் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?'' எனக் கேள்வியெழுப்பினார். இந்த கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய மோடி, பொத்தாம்பொதுவாக, "நாங்கள் ஜனநாயக நாடு. இங்கே ஜாதி, மதம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தியாவில் மத ரீதியிலோ, ஜாதி ரீதியிலோ எந்தவொரு பாரபட்சமும் பார்க்கப்படுவதில்லை'' என மதங்களின் பெயரையே உச்சரிக்காமல் பேசிச் சமாளித்தார்.
மோடியின் அமெரிக்க விசிட்டின் போது, அமெரிக்கா வின் பிரபல பிரச்சார யுக்தியான டிஜிட்டல் ட்ரக் முலம் மோடிக்கு எதிரான பிரச்சாரம் நடந்தது. "க்ரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா' என எழுதப்பட்ட டிஜிட்டல் திரையுடன், "இந்தியாவில் ஒலிம்பிக் வென்ற மல்யுத்த வீரர்கள் ஏன் போராடு கிறார்கள், 2005-2014 வரை மோடிக்கு அமெரிக்கா வர தடைவிதித்ததேன், மாணவர் அமைப்பின் தலைவர் உமர் காலித், விசாரணையின்றி 1000 நாட் களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பி பிரச்சாரம் நடந்தது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, "மோடியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்திருந்தால், இந்தியாவில் சிறுபான் மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் படி கூறியிருப்பேன்'' என்றார். இந்தியாவில் மோடி ஆட்சியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய விரிவான கடிதம் ஒன்றை அதிபர் ஜோ பைடனுக்கு பராக் ஒபாமா, பெர்னி சாண்டர்ஸ் உள்பட ஜனநாயகக் கட்சியின் 75 தலைவர்கள் கூட்டாக எழுதி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மோடி குறித்த ஒபாமாவின் விமர்சனத்துக்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "முன்னாள் அமெரிக்க அதிபரின் இந்திய முஸ்லீம்கள் குறித்த கருத்து ஆச்சரியமாக இருந்தது. ஒபாமா ஆட்சியில்தான் 6 இஸ்லாமிய நாடுகள் மீது சுமார் 26,000க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன'' என பதிலடி தந்தது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்கவாழ் மணிப்பூர் மக்களின் அமைப்புகள் பலவும் அமெரிக்காவில் மோடிக்கு எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், இந்தியாவுக்கு திரும்பியதுமே மணிப்பூர் விவகாரம் குறித்து தன் அமைச்சரவையுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் மோடி! எதிர்ப்புக்கள் தந்த பயமோ? பாடமோ?!