தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது கடந்த 2018-ஆம் ஆண்டு மே-22 மற்றும் மே-23 ஆகிய தினங்களில் பொதுமக்கள் 13 பேர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையானது தமிழக அரசின் உத்தரவின்கீழ் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணைய தலைவர் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், அதன் விரிவான விசாரணை அறிக்கை 18.05.2022 அன்று தமிழக முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது. விசாரணைக் கமிஷன் சட்டம் 3(4) 1952-ன் படி விசாரணை அறிக்கையானது சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பிறகே வெளியிடப்படும். இந்நிலையில், மறைக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் உள்ள விவரங்கள் கசிந்தது அதிர்வலைகளை மக்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது.
"மொத்தமாக ஐந்து தொகுப்புகளுடன் 3000 பக்கங்களை உள்ளடக்கிய ஒரு நபர் கமிஷனின் விசாரணை அறிக்கையில் முதல் மூன்று தொகுப்புகள் விசாரணைகள் குறித்தும், நான்காவது தொகுப்பில் இனிமேல் இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நிகழாதிருப்ப தற்கான ஆலோசனை குறித்தும், ஐந்தாவது தொகுப்பில் விசாரணையில் கிடைக்கப் பெற்ற சான்றாவணங்கள் மற்றும் யார்? யார்? இந்த சம்பவத்தில் ஈடுபட்டது என்பது குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தி படு கொலைக்கான சூத்திரதாரிகள் பட்டியலில் காவல்துறை தரப்பில் அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் (தற்ப
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது கடந்த 2018-ஆம் ஆண்டு மே-22 மற்றும் மே-23 ஆகிய தினங்களில் பொதுமக்கள் 13 பேர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையானது தமிழக அரசின் உத்தரவின்கீழ் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணைய தலைவர் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், அதன் விரிவான விசாரணை அறிக்கை 18.05.2022 அன்று தமிழக முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது. விசாரணைக் கமிஷன் சட்டம் 3(4) 1952-ன் படி விசாரணை அறிக்கையானது சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பிறகே வெளியிடப்படும். இந்நிலையில், மறைக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் உள்ள விவரங்கள் கசிந்தது அதிர்வலைகளை மக்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது.
"மொத்தமாக ஐந்து தொகுப்புகளுடன் 3000 பக்கங்களை உள்ளடக்கிய ஒரு நபர் கமிஷனின் விசாரணை அறிக்கையில் முதல் மூன்று தொகுப்புகள் விசாரணைகள் குறித்தும், நான்காவது தொகுப்பில் இனிமேல் இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நிகழாதிருப்ப தற்கான ஆலோசனை குறித்தும், ஐந்தாவது தொகுப்பில் விசாரணையில் கிடைக்கப் பெற்ற சான்றாவணங்கள் மற்றும் யார்? யார்? இந்த சம்பவத்தில் ஈடுபட்டது என்பது குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தி படு கொலைக்கான சூத்திரதாரிகள் பட்டியலில் காவல்துறை தரப்பில் அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் (தற்போது காவலர் நலத்துறையின் ஆஉஏட), அன்றைய திருநெல்வேலி மண்டல டி.ஐ.ஜி. கபில்குமார் சரட்கர் (தற்போது சென்னை நகர உதவி ஆணையராகவும்), எஸ்.பி.யாக இருந்த மகேந்திரன் (தற்போது சென்னை துணை ஆணையராகவும்), அன்றைய டி.எஸ்.பி. லிங்கதிருமாறன் (இன்றைய ஏ.டி.எஸ்.பி.), இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், பார்த்தீபன் மற்றும் திருமலை (இன்று டி.எஸ்.பி. ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு), எஸ்.ஐ.-க்கள் ரென்னீஸ் மற்றும் சொர்ணமணி, போலீஸார் சுடலைக்கண்ணு (3200), ராஜா (1160), சங்கர், டி.ஐ.ஜி.யின் காவலர் தாண்டவமூர்த்தி (1158), சதீஷ்குமார், ஏ.ராஜா (மஞ்சள் கலர் டீசர்ட்), கண்ணன், மதிவாணன் (அண்ணா நகரில் சுட்டவர்) உள்ளிட்ட 17 நபர் களும், வருவாய்த்துறை தரப்பில் துணை தாசில் தாராக பணியாற்றிய சேகர், ஆயத்துறை மண்டல அலுவல ராகப் பணியாற்றிய கண்ணன் மற்றும் மண்டல துணை தாசில் தாராக பணியாற்றிய சந்திரன் உள்ளிட்டோருடன் இந்தப் படுகொலைகளுக்கெல்லாம் காரணமாக, படுகொலையின் போது பொறுப்பற்ற தனமாய் எதனையும் கண்டுகொள்ளாமல் கோவில்பட்டியில் ஜமாபந்தியும், ஒட்டப்பிடாரத் தில் ஆய்வும் நடத்திய அன்றைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் (தற்போது இந்திய மீன்வளத்துறை ஆணையம்- ஹைதராபாத்) ஆகியோரும் குற்றவாளிகளே.! இவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டு மென்கிறது அவ்வறிக்கை.
மேலும், "இதில் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் அதிக அப்பாவி மக்களைக் கொன்றது சுடலைக்கண்ணுவே (3200). இவர் மட்டும் மாவட்ட ஆட்சியரின் வளாகத்தில் 20 ரவுண்டுகளும், எப்.சி.ஏ. குடோன், மூன்றாவது மைல் மற்றும் திரேஸ்புரத்தில் 10 ரவுண்டு குண்டுகளும் பிரயோகித்து 6 அப்பாவி மக்களைக் கொன்றுள்ளார். இவரைத் தவிர்த்து மடத்தூரில் பாதுகாப்புப் பணியில் இருக்கவேண்டிய எஸ்.ஐ. ரென்னீஸும் யாருடைய அனுமதியும் பெறாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் கிளாஸ்டன், மணிராஜ், தமிழரசன், ரஞ்சித், கந்தையா, செல்வராஜ், ஜெயராமன் ஆகியோரும், ஆட்சியர் அலுவலக வாயிலில் ஸ்நோலின் மற்றும் சண்முகமும் கொல்லப்பட்டிருக் கின்றனர்.
அதற்கடுத்தது எப்.சி.ஏ. ரவுண்டானாவில் கார்த்திக், மூன்றாவது மைலில் செல்வசேகர் மற்றும் திரேஸ்புரத்தில் ஜான்சி (இவரை தலைசிதற கொன்றது சுடலைக்கண்ணுவே), அதற்கடுத்த நாளில் அண்ணா நகரில் காளியப்பன் (இவரைக் கொன்றது எஸ்.பி. மகேந்திரன்.) இத்தனை கொலைகளுக்கும் 410, 303 நகத மற்றும் கைத்துப்பாக்கிகளை பிரயோகித்துள்ளனர். இதில் பாதிக்கு மேற்பட்ட கொலையுண்டவர்களின் பின் தலையிலும், முதுகுப்பக்க பகுதியிலும் குண்டு பாய்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சிதறி ஓடிய மக்களையே சுட்டிருக்கின்றனர் அனைவரும். போலீஸ் தரப்பில் மணிகண்டன் உள்ளிட்ட இருவர் மட்டுமே காயமடைந்துள்ளனர். தொடர்ந்து, "இத்தனை படுகொலை நடந்து கொண்டிருந்த வேளையில் அரசு ஆம்புலன்ஸ் கள் எங்கோ உறங்கிக் கொண்டிருக்க, நல்லதம்பி மருத்துவமனையின் மினி ஆம்புலன்ஸீம், த.மு.மு.க.வின் மினி ஆம்புலன்ஸுகளுமே களத்தில் இறங்கி போட்டி போட்டு காயம்பட்ட பிற உயிர்களைக் காத்து இறப்பு எண்ணிக்கையை குறைத்தது'' என இருவருக்கும் பாராட்டும் தெரிவித்திருக்கின்றார் நீதிபதி அருணா ஜெகதீசன்.
"ஒட்டுமொத்த கலவரத்திற்கும் காரணம் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் பொது மக்கள் ஆட்சியரை சந்தித்து சாத்வீக முறையில் மனு கொடுக்க வருகின்றார்கள் என்பது தெரிந்துகூட அதற்கு அனுமதி கொடுக்காமல், வரும் வழியை கணக்கிடாமல் சிப்காட் மற்றும் தெற்கு காவல் நிலைய எல்கைக்கு மட்டும் 144 தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தார்கள். அதுபோக, மே-22 க்கு முந்தி நடந்த அமைதிக் குழு கூட்டத்திற்கு ஆட்சியர் வெங்கடேசன் தலைமை ஏற்க வில்லை. சப் கலெக்டர் பிரசாந்த் மட்டுமே கூட்டத்தைக் கையாண்டுள்ளார். அந்த நேரத்தில் ஆட்சியர் வெங்கடேஷ் அவரது முகாம் அலுவலகத்தில் மிக வசதியாக இருந்துள் ளார். ஆட்சியரை சந்திக்க வருகின்றார் கள் என்ற பொழுதில், வீட்டிலேயே இருந்துகொண்டு இல்லை என மக்களை சந்திக்காமல் விட்டது, சம்பவத்தின் போது கோவில்பட்டியில் ஜமாபந்தியில் இருந்து கொண்டதும் அதன்பின் துப்பாக்கிச் சூடு குறித்து கேள்விப் பட்டும் ஒட்டப்பிடாரத்திலேயே இருந்து கொண்டதும் ஆட்சியரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றது.
பனிமய மாதா கோவிலிலிருந்து எஸ்.ஏ.வி. மைதானத்திற்கு ஒருங்கே அமர்ந்து இருப்பதுதான் பொதுமக்களின் எண்ணம். பனிமய மாதா கோவிலிலிருந்து திரண்டு வரும் மக்களின் வழியை மடை மாற்றாமல் கூட்டம் சேர வழிவகுத்தது மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே! அன்றைய நாளின் போது வி.வி.டி. சிக்னல், மூன்றாவது மைல் தாண்டி எப்.சி.ஏ. குடோன் அருகே மக்கள் திரண்டு வரும்போது வஜ்ரா வாகனம் கொண்டு 6 கண்ணீர் புகைக் குண்டுகளை மட்டுமே பிரயோகித்துள்ளது காவல்துறை. அதன் பின் அந்த வஜ்ரா வாகனம் 6 கி.மீ தொலைவில் மேற்குப் பக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. கண்ணீர் புகைக்குப் பிறகு தண்ணீர் பீய்ச்சியோ, தடியடி நடத்தியோ கூட்டத்தைக் கலைக்க விரும்பவில்லை. துப்பாக்கிச்சூடு ஒன்று தான் தீர்வு என துப்பாக்கிகளை பிரயோகித்து அப்பாவிகளைக் கொன்றுள்ளனர். முந்தையதாக எச்சரிக்கப் பட்ட உளவுத்துறையின் அறிக்கையையே இவர்கள் கண்டுகொள்ளவில்லை. அடிப்படை விதிகளை பின்பற்றாமல் பொறுப்புக்களை மறந்து வரம்புமீறிச் செயல்பட்டுள்ளனர் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும்'' என்கின்றது அவ்வறிக்கை.
ஏறக்குறைய 1200 சாட்சி விசாரணைகளில் விசாரணைக்காக கலந்து கொண்ட காவல்துறையினர் மட்டும் 300 நபர்கள். இதில், "சுட்டோம், யாருக்கும் காயம் ஏற்பட்டது எங்களுக்குத் தெரியாது! செத்ததும் தெரியாது'' நீதியரசர் அருணா ஜெகதீசன் முன்பு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததும் அவ்வறிக்கையில் பதிவானது குறிப்பிடத்தக்கது. கசிந்த இவ்வறிக்கையை உடனே சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டுமென்பது அ.தி.மு.க. தவிர்த்து அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கை.