ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு கொலை வழக்குகள் ஐந்தாக பிரிக்கப்பட்டு மதுரை சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. மாரிராஜா தலைமையில் டி.எஸ்.பி.கள் அனில்குமார், கலிமுல்லானிஷா, ரமேஷ்பாபு, சரவணன், விஜயராகவன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். பலியான 13 உயிர்களில் அதிகளவான 9 உயிர்களைப் பலி கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டப் பகுதிகளின் காவல்துறை எல்கை சிப்காட் காவல் நிலையத்திற்குள் வருகின்றது. இங்கு பதியப்பெற்ற 191/18 எண் கொண்ட வழக்குத்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலையின் அவல நிலையைக் கூறும் முக்கிய வழக்கே.!
நானே பதவியை எடுத்துக்கொண்டேன்.!
""தூத்துக்குடி பனிமய மாதா கோவில் பகுதிகளில் நிர்வாக நடுவராகப் பணியாற்றத் தான் என்னை மாவட்ட நிர்வாகம் நியமித்தது. 144 தடை உத்தரவு இருக்கின்றது. யாரும் இப்படி செல்லக்கூடாது என அறிவுறுத்தியும் பனிமய மாதா கோவிலிலிருந்து புறப்பட்டு சென்றார்கள் பொதுமக்கள். வி.வி.டி. சிக்னலில் போலீஸ் பார்ட்டியினர் பேரிகார்டுகளை வைத்து தடுக்க, அதனை மீறி கல் வீசிக்கொண்டே முன்னேறி வந்தனர். அதன்பின் எஈஒ ரவுண்டானா, நான்கு வழிச் சாலையிலுள்ள டிக் அலுவலகம் ஆகியவற்றின் மீது கல்லெறிந்து கொண்டே கலவரத்தில் ஈடுபட்டனர். இறுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இருசக்கர வாகனங்களையும், ஆட்சியர் அலுவலகத்தினையும் அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு நிர்வாக நடுவராக இருக்க வேண்டிய ராஜ்குமார் தர்மசீலன் அங்கு இல்லாததால், அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலையை கருதி, நானே அங்கு நிர்வாக நடுவர
ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு கொலை வழக்குகள் ஐந்தாக பிரிக்கப்பட்டு மதுரை சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. மாரிராஜா தலைமையில் டி.எஸ்.பி.கள் அனில்குமார், கலிமுல்லானிஷா, ரமேஷ்பாபு, சரவணன், விஜயராகவன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். பலியான 13 உயிர்களில் அதிகளவான 9 உயிர்களைப் பலி கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டப் பகுதிகளின் காவல்துறை எல்கை சிப்காட் காவல் நிலையத்திற்குள் வருகின்றது. இங்கு பதியப்பெற்ற 191/18 எண் கொண்ட வழக்குத்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலையின் அவல நிலையைக் கூறும் முக்கிய வழக்கே.!
நானே பதவியை எடுத்துக்கொண்டேன்.!
""தூத்துக்குடி பனிமய மாதா கோவில் பகுதிகளில் நிர்வாக நடுவராகப் பணியாற்றத் தான் என்னை மாவட்ட நிர்வாகம் நியமித்தது. 144 தடை உத்தரவு இருக்கின்றது. யாரும் இப்படி செல்லக்கூடாது என அறிவுறுத்தியும் பனிமய மாதா கோவிலிலிருந்து புறப்பட்டு சென்றார்கள் பொதுமக்கள். வி.வி.டி. சிக்னலில் போலீஸ் பார்ட்டியினர் பேரிகார்டுகளை வைத்து தடுக்க, அதனை மீறி கல் வீசிக்கொண்டே முன்னேறி வந்தனர். அதன்பின் எஈஒ ரவுண்டானா, நான்கு வழிச் சாலையிலுள்ள டிக் அலுவலகம் ஆகியவற்றின் மீது கல்லெறிந்து கொண்டே கலவரத்தில் ஈடுபட்டனர். இறுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இருசக்கர வாகனங்களையும், ஆட்சியர் அலுவலகத்தினையும் அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு நிர்வாக நடுவராக இருக்க வேண்டிய ராஜ்குமார் தர்மசீலன் அங்கு இல்லாததால், அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலையை கருதி, நானே அங்கு நிர்வாக நடுவராகப் பொறுப்பேற்றுக்கொண்டு, அங்கிருந்த புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலையிடம் கூட்டத்தினை கலைக்க உத்தரவிட்டேன்.
அவர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசுமாறு அங்கிருந்த எஸ்.ஐ.யிடம் கூற, 2 கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. பிரயோஜனமில்லை. அதன் பிறகு அதே எஸ்.ஐ. மூலம் ஏஹள் ஏன்ய்ஐ பிரயோகிக்க கூற அதுவும் பிரயோஜனமில்லை என்பதால், அங்கிருந்த டி.ஐ.ஜி. கபில் சாரட்காரிடம் துப்பாக்கி பிரயோகம் செய்துகொள்ள உத்தரவிட்டேன். அவரோ, முதலில் இன்ஸ்ரீந் நட்ர்ற் தோட்டாக்களை பிரயோகிக்க உத்தரவிட்டார். அதன்பின் தனது அதிரடிப்படையிலிருந்து ஒரு காவலரைக் கூப்பிட்டு சுடச் சொன்னார். அதுவும் எடுபடவில்லை. இவ்வேளையில், இன்ஸ்பெக்டர் திருமலை, தட்டப்பாறை எஸ்.ஐ. ரென்னீஸைக் கூப்பிட்டு சுட உத்தரவிட்டார். கலெக்டர் அலுவலக போர்டிகோவிலிருந்த எஸ்.ஐ. ரென்னீஸ் தனது கைத்துப்பாக்கியால் ஒன்றன் பின் ஒன்றாக பிரயோகம் செய்தார். அதன்பின் 9 பேர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்தது'' என்றிருக்கின்றார் தனித்துணை வட்டாட்சியரான சேகர்.
உத்தரவிட்டது நானே..!
புதுக்கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டரான திருமலையோ, "" இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள், எஸ்.எஸ்.ஐ.க்கள் ஆகியோருடன் ஆயுதப்படைக் காவலர்கள் 30, பெண் காவலர்கள் 21 உள்ளிட்ட 121 போலீஸாருடன் மாவட்ட ஆட்சியர் வளாக பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தேன். மாதா கோவிலில் கிளாஸ்டன், மணிராஜ், தமிழரசன், வாஞ்சி நாதன், பொன்பாண்டி, ராஜேஷ்குமார், தமிழரசன், அரிராகவன், மகேஸ், வாழாவெட்டி, செல்வம் மற்றும் புகைப்படம் வீடியோவில் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய பல நபர்களும் "கலெக்டர் ஆபீஸை கொளுத்துங்கடா' என்ற கோஷத்துடன் முன்னேறி வந்து கலவரத்தில் ஈடுபட்டனர். டி.ஐ.ஜி. உத்தரவின் பேரில் முதலில் எஸ்.ஐ. பூமிபாலனும், அதிரடிப்படைக் காவலர் ராஜா (1160) இன்ஸ்ரீந் நட்ர்ற்களை உபயோகித்தனர். இதில், டி.ஐ.ஜி.யின் காவலர் தாண்டவமூர்த்தி (1158) 303 வகை துப்பாக்கியினையும் மற்றொரு காவலரான அதிரடிப்படைக் காவலர் ராஜா (1160) 410 வகை துப்பாக்கியினையும் பிரயோகித்தனர். இருப்பினும் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, நான் தான் தட்டப்பாறை எஸ்.ஐ.ரென்னீஸிற்கு கைத் துப்பாக்கியால் சுட உத்தரவிட்டேன். அதன்பிறகு தாண்டவமூர்த்தியும் (1158), சுடலைக்கண்ணுவும் (3200) மாவட்ட ஆட்சியர் வளாக ஆர்ச்சின் மேற்குப்பக்கம் 303 வகை துப்பாக்கிகளைப் பிரயோகித்தனர். இதன் பலனாக வன்முறைக்கும்பல் நாலாபுறமும் சிதறி வெளியேறியது. அதன்பின் குண்டடிப்பட்டு 9 நபர்கள் இறந்துவிட்டனர்'' என்றிருக்கின்றார் அவர்.
ஐ.ஜி.யும் உத்தரவிட்டார்..!
""மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாக்கப்படும் பொழுது, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஆயுதப்படைக்காவலர் சுடலைக்கண்ணுவைக் (3200) கூப்பிட்டு, சுட உத்தரவிட்டேன். அதன்பின் அங்கு வந்த ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் தனது போலீஸ் பார்ட்டியில் இருந்த எஸ்.ஐ. சொர்ண மணியைக் கூப்பிட்டு சுட உத்தரவிட்டார். இதனால் பலருக்கு குண்டடி காயங்கள் பட்டன. காயத்தால் அவதிப்பட்டவர்களை மீட்க ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸை கலவரக்காரர்கள் கைப்பற்றி வைத்துக்கொள்ள, அதனை மீட்க ஐ.ஜி.போலீஸ் பார்ட்டியிலிருந்த சதீஷ்குமார் என்ற காவலருக்கு உத்தரவிட்டு 410 ரக துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டு மீட்டோம்'' என ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கின்றார் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. லிங்க திருமாறன்.
சுட உத்தரவிட்டது நானே..!
துப்பாக்கிச்சூடு படுகொலைகளுக்குப் பிந்தைய நாள்வரை சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்து, தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஹரிஹரனோ, "" மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டினால் தோட்டாக்கள் காலியானதால் தோட்டாக்களையும், துப்பாக்கிகளையும் ஆயுதப்படையிலிருந்து கொண்டுவர உத்தரவிட்டேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள தூத்துக்குடி- நெல்லை நெடுஞ்சாலைக்கு வாகனம் மூலம் கொண்டு வந்தனர் காவலர்களான ராஜாவும் முருகனும். அந்த நேரத்தில் எதிர்புறத்திலிருந்து கற்கள் விழுந்ததால் அவர்களை நோக்கி சுடுமாறு நான் ஆர்டர் போட, இருவரும் வாகனத்தின் மேற்கூரையில் ஏறி சுட்டனர்'' என தன்னுடைய வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார் அவர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டனோ, ""பொரி கடலை கொடுப்பது போல், தங்கள் இஷ்டம் போல் ஆளாளுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்ய உத்தரவிட்டுள்ளனர். மனித உயிர்களை துச்சமாக நினைத்துவிட்டது ஆளும் அரசு. மக்களை பறிகொடுத்த துக்கம் தீருமுன்னே இனிமேல் யாரும் போராடக்கூடாது என்பதற்காக தூத்துக்குடி போலீஸாரால் தற்பொழுது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 28-க்கும் அதிகமான நபர்கள் மீது, ஒவ்வொருவர் மீதும் தலா 80-க்கும் அதிகமான வழக்குகளைப் போட்டு சட்டத்தினை வளைக்கின்றது காவல்துறை. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தினை நாடியுள்ளோம்'' என்றார் அவர்.
அதிகார அத்துமீறலும் அடக்குமுறையும் அரசின் ஆயுதங்களாக இருக்கின்றன. மக்களின் கவசமான ஜனநாயக நெறிமுறைகளை துளைத்துக் கொண்டு ஊடுருவுகின்றன அந்த ஆயுதங்கள்.
- நாகேந்திரன்
வந்த செய்தி! விசாரித்த உண்மை!
வந்த செய்தி : ஓ.பி.எஸ். பெயரை ஸ்டிக்கரில் தவிர்க்கச் சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
விசாரித்த உண்மை : சமீபத்தில், தினகரன் ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி வந்த பலரையும் அ.தி.மு.க.வில் இணைக்கும் சம்பவத்தை தனது இல்லத்தில் வைத்து நடத்தினார் எடப்பாடி. பொதுவாக, மாற்றுக் கட்சியினரை இணைக்கும் நிகழ்வு, கட்சித் தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். முன்னிலையில் நடப்பது வழக்கம். இம்முறை ஓ.பி.எஸ்.ஸை தவிர்ப்பதற்காகவே தனது வீட்டில் நடத்தியிருக்கிறார் இ.பி.எஸ். அத்துடன், அரசு போக்குவரத்துக்கழகத்தின் 515 புதிய பேருந்துகளில் ஒட்டப் பட்ட ஸ்டிக்கரில் ஜெயலலிதா படமும் தனது படமும் மட்டுமே இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் தரப்பிலிருந்து கறாராக உத்தரவிட்டதால் அதன்படியே ஸ்டிக்கர் அச்சிடப்பட்டு ஒட் டப்பட்டிருக்கிறது. விழாவில் கலந்துகொண்ட ஓ.பி.எஸ்.ஸும் அவரது தரப்பினரும் இதனால் கடுப்படைந்துள்ளனர்.
–-சஞ்சய்
வந்த செய்தி : முரண்பட்டு நிற்கும் எம்.எல்.ஏ.வின் கோரிக் கைக்கு உடன்பட்ட முதலமைச்சர்.
விசாரித்த உண்மை : ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர் களுக்கான நிதி உதவியை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இது தொடர்பாக எடப்பாடி அரசு என்ன செய்யப்போகிறது என்ற பதட்டமான எதிர்பார்பபு நிலவியது. இந்நிலையில், அரசுடன் முரண்பட்டிருக்கும் எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரியை அழைத்துப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. அதில் ஒரு அம்சமாக, ஹஜ் பயணிகளுக்கான மாநில அரசின் நிதி உதவியை அன்சாரி வலியுறுத்த, அதற்கு உடன்பட்ட முதலமைச்சர், 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறார்.
-இளையர்