அ.தி.மு.க. தலை மைக்கான மோதலில், 'கட்சிக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும். எடப்பாடி தான் பொதுச்செயலாளராக வேண்டும்' என்பதை ஆதரித்து கட்சியினர் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என்று, தனது ஆதரவு மா.செ.க்களிடம் பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த தீர்மானங்களை தேர்தல் கமிசனிடம் சமர்ப்பித்து தனக்கே பெரும்பான்மையான ஆதரவு இருக்கிறது என்று காட்டமுனைகிறார் அவர்.

அதேசமயம், தென்மாவட் டங்களில் எடப்பாடிக்கு டஃப் கொடுக்கும் வகையில் தென்காசி மாவட்டத்தின் மா.செ.வான கிருஷ்ணமுரளி, நெல்லையின் தச்சை கணேசராஜா, தூத்துக்குடி யின் எக்ஸ் அமைச்சரும் அ.தி. மு.க.வின் அமைப்புச் செயலாளரு மான சி.த.செல்லப்பாண்டியன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஓ.பி.எஸ். தனக்கான ஆதரவைத் திரட்டிவருகிறார்.

tuty

Advertisment

இந்த நிலையில், கடந்த ஜூன் 29 அன்று, தூத்துக்குடி அ.தி.மு.க.வின் தெற்கு மாவட்ட மா.செ.வான சண்முகநாதன், தூத்துக்குடியில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கொண்ட கூட்டத்தை மாவட்டக் கழகத்தில் கூட்டியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் சண்முகநாதன் எடுத்த எடுப்பிவேயே, "கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும். எடப்பாடிதான் பொதுச்செயலாளராக வேண்டும் என ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது" என்றிருக்கிறார்.

உடனடியாக, ஒற்றைத் தலைமைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாவட்டக் கழக மினிட்டில் ஏற்றி, அதில் பொதுக்குழு உறுப் பினர்கள் சிலரிடம் மட்டும் கையெழுத்தைப் பெற்ற சண்முக நாதன், தூத்துக் குடி தெற்கு மாவட்டக் கழகத் தின் சார்பில் நிறைவேற்றப் பட்ட அந்த தீர்மானத்தை எடப்பாடியிடம் கொடுத்து விட்டுத் திரும்பியிருக் கிறார். சண்முகநாதனின் ஆதரவாளரும் தூத்துக்குடி எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளருமான ஏசாதுரை, எடப்பாடிக்கான ஆதரவுத் தீர்மானத்தை எதிர்க்கிற வகையிலும், மா.செ. சண்முகநாதனுக்கு சவாலாகவும், ஓ.பி.எஸ். ஆதரவு போஸ்டரை நகரெங்கும் ஒட்டிவிட்டார்.

Advertisment

இதுகுறித்து ஏசாதுரையிடம் பேசியபோது, "தொடக்கத்திலிருந்தே தொண்டருக்கு அறிமுகமானவர் ஓ.பி.எஸ். 2016-க்குப் பிறகு இ.பி.எஸ். முதலமைச்சரான பிறகுதான் எடப்பாடி பழனிசாமி யார்னு தொண்டர்களுக் குத் தெரியவந்தது. இங்கே நான்தான் கட்சி, நம்ம கையில்தான் கட்சின்னு நினைக்கிறார் மா.செ. சண்முகநாதன். அவர் போட்ட தீர்மானத்தை யாரும் எதிர்க்கமாட்டாங்கன்னு நினைக்கிறார். மாநகரத்தில் கீழ்மட்டத் தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ்ஸ தான் தெரியும். அதனால தொண்டர்களின் எதிர்ப்பு இப்போ கிளம்பியிருக்கு" என்றார். தீர்மானம் எதிர்ப்பு குறித்து மா.செ. சண்முகநாதனின் கருத்தையறிய நாம் பலமுறை தொடர்பு கொண்டும் நமது அழைப்பை ஏற்கவில்லை.

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்

மனு கொடுக்க வந்தவர்களை கட்சிக் கணக்கில் சேர்த்த அண்ணாமலை!

காத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் மனு அளிக்கச் சென்ற 16 பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு, பா.ஜ.க. துண்டு போட்டு, தங்களது கட்சியில் இணைந்துள்ளதாக அறிக்கையை வெளியிட்டது பா.ஜ.க. "இல்லையில்லை, நாங்கள் மனு கொடுக்கத்தான் அங்கு சென்றோம்" என கனிமொழி எம்.பி. முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர் 16 பஞ்சாயத்துத் தலைவர்களும்.

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி என்றாலே அ.தி.மு.க. கோட்டை என்றே சொல்வார்கள். ஏனெனில் இங்கு அதிக முறை அ.தி.மு.க. தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், இந்த முறை தி.மு.க. வெற்றிபெற்று மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். (இவரும் முன்பு அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்). தி.மு.க., அ.தி.மு.க. என 2 கட்சிகளும் சம பலம் காட்டும் இந்த தொகுதியில், இப்போது, சத்தமில்லாமல் பி.ஜே.பி. காலூன்ற முயற்சித்து வருகிறது.

yy

இதன் ஒரு கட்டமாக, அண்மையில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 16 ஊராட்சி மன்றத் தலைவர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று அண்ணாமலையைச் சந்திக்க வைத்து, மாலை மரியாதை செய்து, 'மோடியின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, சென்னையில் அண்ணாமலை முன்னிலையில் பி.ஜே.பி.யில் தங்களை இணைத்துக்கொண்டனர்' என தூத்துக்குடி மாவட்ட பி.ஜே.பி. தலைவர் வெங்கடேசன் செய்தி வெளியிட்டு, மாவட்ட அரசியலில் தன்னுடைய இருப்பை வெளிக்காண்பித்தார்.

தி.மு.க. தரப்பு தாமதமாகப் புரிந்துகொள்ள, சுதாரித்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், பா.ஜ.க. பட்டியலிட்ட 16 பஞ்சாயத்துத் தலைவர்களையும் தூத்துக்குடிக்கு வரவழைத்து கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவனிடம் ஒப்படைக்க, "நாங்க கட்சியில் சேர அங்கு போகலைங்க. 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண்களுக்கு முன்புபோல் வருகைப் பதிவேடு தற்போது கிடையாது. சில மணி நேரத்துக்கு ஒருமுறை புகைப்படத்துடன் கூடிய வருகைப் பதிவேடு அவசியம் என்கிற நடைமுறை தற்பொழுது வந்திருக்கிறது. இதனால் குடும்பத்தலைவிகள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.. மத்திய அரசுதான் அதனைச் சரிசெய்ய முடியும் என்று பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளார் செங்கல்படை ரவீந்திரன் கூறியதால், அவருடைய ஏற்பாட்டில் அண்ணாமலையைச் சந்திக்க சென்னைக்குச் சென்றோம். ஆனால் எங்களுக்கு கட்சித் துண்டு போட்டு கட்சியில் சேர்த்துட்டாங்க" என நடந்ததைக் கூறினர். பா.ஜ.க.வின் ஆள்பிடிக்கும் உத்திக்கு ஒரு அளவே யில்லையா? எனக் கேள்வி எழுப்புகின்றனர் உள்ளூர் அரசியல்வாதிகள்.

-நாகேந்திரன்