புத்தாண்டு மூன்று மாநில தேர்தல் அறிவிப்புடன் தொடங்கியிருக்கிறது. இதில் திரிபுராவுக்கு பிப்ரவரி 16-ஆம் தேதியிலும், மேகாலயா, நாகலாந்துக்கு பிப்ரவரி 27-ஆம் தேதியும் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மேகாலயாவில் பாரதிய ஜனதா, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட ஆறு கட்சிக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. 60 இடங்களைக் கொண்ட மேகாலயா சட்டசபைக்கு 2018-ல் நடந்த தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸின் முகுல் சங்மா 21 இடங்களில் வெற்றிபெற்றார். மாறாக, தேசிய மக்கள் கட்சியின் கான்ராட் சங்மா 20 இடங்களில் வெற்றிபெற்றார்.
யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலேறு வதைத் தடுக்க தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி யமைத்து ஆட்சியமைத்தது பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள், சுயேட்சைகளின் ஆதரவோடு கான்ராட் சங்மா முதல்வ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொது சிவில் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஆயுதப்படை சட்டம் வாபஸ் இவற்றில் இரு கட்சி களுக்கிடையே முரண், பா.ஜ.க. துணைத் தலைவர் பெர்னான்ட் மரக்கை அவரது விடுதியில் விபச்சாரத் தொழிலை மேற்கொண்ட வழக்கொன்றில் கைதுசெய்தது கூட்டணி முறிவுக்கு வழிவகுத்தது.
ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலை, ஊழல் போன்றவை தேசிய மக்கள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
மாறாக, கடந்த தேர்தலில் பா.ஜ.க. தனியாக வென்றது இரண்டே தொகுதிகளில் மட்டும்தான். தவிரவும், க
புத்தாண்டு மூன்று மாநில தேர்தல் அறிவிப்புடன் தொடங்கியிருக்கிறது. இதில் திரிபுராவுக்கு பிப்ரவரி 16-ஆம் தேதியிலும், மேகாலயா, நாகலாந்துக்கு பிப்ரவரி 27-ஆம் தேதியும் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மேகாலயாவில் பாரதிய ஜனதா, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட ஆறு கட்சிக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. 60 இடங்களைக் கொண்ட மேகாலயா சட்டசபைக்கு 2018-ல் நடந்த தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸின் முகுல் சங்மா 21 இடங்களில் வெற்றிபெற்றார். மாறாக, தேசிய மக்கள் கட்சியின் கான்ராட் சங்மா 20 இடங்களில் வெற்றிபெற்றார்.
யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலேறு வதைத் தடுக்க தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி யமைத்து ஆட்சியமைத்தது பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள், சுயேட்சைகளின் ஆதரவோடு கான்ராட் சங்மா முதல்வ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொது சிவில் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஆயுதப்படை சட்டம் வாபஸ் இவற்றில் இரு கட்சி களுக்கிடையே முரண், பா.ஜ.க. துணைத் தலைவர் பெர்னான்ட் மரக்கை அவரது விடுதியில் விபச்சாரத் தொழிலை மேற்கொண்ட வழக்கொன்றில் கைதுசெய்தது கூட்டணி முறிவுக்கு வழிவகுத்தது.
ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலை, ஊழல் போன்றவை தேசிய மக்கள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
மாறாக, கடந்த தேர்தலில் பா.ஜ.க. தனியாக வென்றது இரண்டே தொகுதிகளில் மட்டும்தான். தவிரவும், கிறித்துவர்கள் அதிக முள்ள மாநிலமான மேகாலயா, கிறித்துவத் துக்கு எதிரான கட்சியாகவே பா.ஜ.க.வைப் பார்க்கிறது. எனவே வலுவான உள்ளூர் கட்சிகளைப் பிடித்து கூட்டணி அமைக்காமல் பா.ஜ.க.வுக்கு வெற்றி சாத்தியமில்லை.
திரிணாமுல் காங்கிரஸுக்கு மேகாலயாவில் ஆதரவே கிடையாது. இருந்தபோதும், 2021-ல் காங்கிரஸை உடைத்து அதன் 12 எம்.எல்.ஏ.க்களோடு பிரதான எதிர்க்கட்சியாக நாற்காலியில் அமர்ந்தது. ஆனால் இந்த ஓராண்டுக் காலத்தில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி, தேசிய மக்கள் கட்சியையும், பா.ஜ.க.வையும் சரணடைந்திருக்கிறார்கள்.
இருந்தும், “"என்.பி.பி.யின் பெயரில் பா.ஜ.க.தான் மேகாலயாவை ஆண்டுவருகிறது. தற்போதைய ஊழல் அரசு மாறவேண்டுமானால் திரிணாமுல்லுக்கு வாக்களியுங்கள்' என பிரச்சாரம் செய்துவருகிறார் மம்தா. மம்தாவின் செல்வாக்கு திரிபுராவில் செல்லுபடியாகுமா என்பது தற்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி.
கடந்த தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி காங்கிரஸ். ஆனால் 21 தொகுதிகளை வென்ற காங்கிரஸிடமிருந்து அதன் 12 எம்.எல்.ஏ.க்களையும் தலைவரான முகுல் சங்மாவையும் மம்தா அபகரித்து விட்ட நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் ஆவலில் களமிறங்குகிறது காங்கிரஸ். புதிய தலைவரான வின்சென்ட் பாலா, “"மேகாலயா தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸுக்கு பணம் தேவையில்லை. இத்தனை காலமாக மாநிலத்தின் உட்கட்டுமான வளர்ச்சிக்கும் சுகாதாரத்துக்கும் கல்விக்கும் செய்த பணிகளே போதும்'’ என மேடைகளில் பேசிவருகிறார். காங்கிரஸிடம் தேர்தலில் வெற்றிபெற வியூகம் இருக்கிறதா, இல்லை வெறும் வாய்வீச்சு மட்டும்தானா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
கடந்த தேர்தலில் வெறும் எட்டே எட்டு தொகுதிகளில் மட்டும் ஆழம்பார்த்த ஆம் ஆத்மி, இந்தத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பது தெளிவாகவில்லை.
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண் டாட்டம் என்பதுபோல் பலமுனைப் போட்டியின் சாதகத்தோடு, அமைப்பு பலம், பண பலத்தால் மேகாலயாவை வசப்படுத்துவதற்கான சாத்தியங்களை வேகமாக ஆராய்ந்துவருகிறது பா.ஜ.க.
வெற்றிக் கணக்கையே தொடங்கியிராத பா.ஜ.க., 2018-ல் திரிபுராவில் ஆட்சிக்கு வந்தது பலரது விழிகளையும் ஆச்சர்யத்தால் உயரச் செய்திருந்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 51 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. 36 இடங்களில் வெற்றிபெற்று, கூட்டணிக் கட்சிகளின் தயவு இல்லாமலேயே பெரும்பான்மை பெற்று ஆட்சியும் அமைத்தது.
திரிபுராவில் 2018-ல் பெற்ற வெற்றியின் மூலம் சி.பி.எம்.மின் 25 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன் மாணிக் சர்க்காரையும் முதல்வர் நாற்காலியிலிருந்து இறங்கவைத்தது. தேர்தலுக்கு முன்பே கம்யூனிஸ்ட்டு களுடன் மோதல் போக்கைக் கைக்கொண்ட பா.ஜ.க., வெற்றிபெற்ற கையோடு லெனின் சிலையைத் தகர்த்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2023, பிப்ரவரி 16-ஆம் தேதி தேர்தல் என்ற நிலையில் தேசியக் கட்சி கனவிலிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ், திரிபுராவில் தனித்துப் போட்டியிடும் முடிவில் இருக்கிறது. அறிந்த முகம் இருந்தால்தான் மக்களின் ஆதரவைப் பெறமுடியும். அதற்கு யார் யாரைப் பிடிக்கப்போகிறார், எந்தக் கட்சியி லிருந்து ஆட்களை இழுக்கப்போகிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
பா.ஜ.க.வை எதிர்கொள்ள தங்கள் கருத்துவேறுபாடுகளை மறந்து காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டும் கை கோர்த்து தேர்தலில் இறங்கியிருக் கின்றன. கடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு சதவிகிதம் 36. கம்யூனிஸ்ட்டின் வாக்கு சதவிகிதம் 33, காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 10. மூன்று கட்சிகளுக்கும் வாக்கு சதவிகிதத்தில் பெரிய மாறுதல் இல்லாதபட்சத்தில் காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்.
கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் உட்பட எதிர்க்கட்சியினர் தாக்கப்பட்ட நிகழ்வுகள் மட்டும் 700 நிகழ்வுகள் பதிவாயிருக்கின்றன. தேர்தல் தேதி அறிவித்தபின்பும், காங்கிரஸின் மோட்டார் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டவர்களும் பிரமுகர்களும் தாக்கப்பட்டிருக்கின்றனர். இது மக்களின் மத்தியில் பா.ஜ.க.வின் பிம்பத்துக்கு சேதாரத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆளும் கட்சிக்கு எதிரான இந்த மனநிலை கூட்டணிக்குச் சாதகம்.
பா.ஜ.க.வுடன் கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐ.பி.எஃப்.டி., மற்றொரு பூர்வகுடி கட்சியான டிப்ரா மோதாவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுகிறது. டிப்ரா மோதா கட்சியின் தலைவர் வேறு யாருமில்லை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான பிக்ரம் மாணிக்யா தேப் பர்மாதான். 2021-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கவனிக்கத்தக்க வெற்றியைப் பெற்றுள்ள இக்கட்சி, திரிபுராவின் மொத்தமுள்ள 60 தொகுதிகளில், பழங்குடிகளின் செல்வாக்கு மிகுந்த 20 தொகுதிகளில் வாக்குகளை அள்ளுமென எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த முறை பா.ஜ.க. முதல்வர் வேட்பாளராக தேர்தலை எதிர்கொள்ளப்போகிறார் மாணிக் சாஹா. சர்ச்சைக் கருத்துக்களுக்குப் பேர்போன பிப்லப் குமார் மீதான அதிருப்தி கட்சியின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்கக்கூடாது என அவரை முதல்வர் பதவியிலிருந்து மாற்றியதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.
மத்தியில் ஆட்சியிலிருப்பதால் தேர்தல் செலவுகளுக்கு நிதிப் பிரச்சனையில்லை, அமைச்சர்கள் முதல் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் வரை வாக்குச் சேகரிப்புக்கு உதவுவார்கள். சமூக ஊடகங்களில் எந்தக் கட்சியைவிடவும் பா.ஜ.க.வுக்கு வலுவான பிடியிருக்கிறது. அத்தோடு, பழங்குடியினரிடம் செல்வாக்குள்ள டிப்ரா மோதா கட்சியை தங்கள் கூட்டணிக்கு இழுக்க பா.ஜ.க. முயன்றுவருகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் திரிபுராவில் ஐந்து பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியிருக்கின்றனர். மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி யினரை ஒடுக்கும் பா.ஜ.க.வினரின் ஆக்ரோஷ போக்கு விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
காங் -கம்யூனிஸ்ட் புதிய கூட்டணி, திரிணாமுல் போன்ற புதிய வரவுகள் வாக்கைப் பிரித்து பா.ஜ.க.வுக்கு சாதகம் செய்யுமா… இல்லை பா.ஜ.க.வுக்கு வரவேண்டிய வாக்கை கபளீகரம் செய்யுமா என இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலவில்லை.
என்றாலும் திரிபுராவில் பா.ஜ.க. சறுக்கவே வாய்ப்புகள் அதிகம்!