ருகின்ற 2026-ஆம் ஆண்டு தமிழகம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப்போகிறது. தமிழகத்தைச் சேர்ந்த மாநில கட்சிகள், தேசிய அளவிலான கட்சிகள் அதற்கான பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், யாரை வேட்பாளர்களாக தேர்வு செய்யவேண்டும், கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கவேண்டும், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று பல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிகளின் நிலை, தற்போது பொறுப்பிலிருக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

திருச்சி மாவட்டத்திற்கு என்று எப்போதும் அரசியலில் ஒரு தனிச்சிறப்பும், இடமும் உண்டு, கட்சிகளுக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் பல மாறுதல்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு..வின் நிலைப்பாட்டில் திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் அனைத்து தொகுதிகளும் கவனம் ஈர்க்கக்கூடிய தொகுதிகளாக உள்ளன. திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் கே.என்.நேருவின் கையில்தான் இந்த ஒட்டுமொத்த திருச்சி சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.

Advertisment

அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென் றால், ஸ்ரீரங்கம், லால்குடி போன்றவை நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகள், தற்போது ஸ்ரீரங்கம் எம்.எல்..வான பழனியாண்டிக்கும், அமைச்சர் கே.என்.நேருவிற்கும் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இந்த முறை அவருக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதில் இழுபறி ஏற்படுமென்றும், அந்த தொகுதியில் ஏற்கனவே ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனந்திற்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் லால்குடி எம்.எல். .வாக இருக்கும் சௌந்தரபாண்டி யன் ஏற்கனவே இந்தத் தொகுதியில் 4 முறை தி.மு.. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். கே.என்.நேருவின் ஆதரவாளராக இருந்த அவருக்கும், அமைச்சர் கே.என்.நேருவுக்கும் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், வருகின்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை தலைமை முடிவு செய்யும். இருப்பினும் அந்தத் தொகுதியில் வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால்     தனித்துப் போட்டியிடவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் கிழக்குத் தொகுதியில் எம்.எல்..வாக இருக்கும் இனிகோ இருதயராஜ் மீண்டும் திருச்சி மாவட்டத்தில் போட்டி யிடப்போவதில்லை என்று திட்டவட்டமாக இருந்துவருகிறார். தனித்தொகுதியான துறையூரில் ஸ்டாலின்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்போவதில்லை. அதேபோல் மணப்பாறையை மீண்டும் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்குவதற்கான வாய்ப்புள்ளது. முசிறி தொகுதி எம்.எல்..வான காடுவெட்டி தியாகராஜனுக்கும் அமைச்சர் நேருவுக்கும் இடையில் கொஞ்ச காலம் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் தற்போது அவர் அமைச்சருடன் நெருங்கிவிட்டதால், மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த முறை அந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்றும், அவர் சென்னையிலுள்ள தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் திருவெறும்பூர் தொகுதியில் பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவந்துள்ளார். இந்த தொகுதியில் அவர் போட்டியிட்டாலும் மீண்டும் அவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புள்ளது. முனைப்புடன் பல திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டுவந்துள்ளதால், அவர் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறுகிறார்கள்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி நேருவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மீண்டும் கதிரவனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தமுறை சட்டமன்ற வேட் பாளர்கள் துணைமுதல்வர் கையிலிருப்பதால், திருச்சி சட்டமன்றத் தொகுதியில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வருகின்ற தேர்தலில் திருச்சி சட்டமன்றத் தொகுதிகளில் கிழக்கு, துறையூர், ஸ்ரீரங்கம் போன்ற தொகுதிகளுக்கு புதுமுகங் களை எதிர்பார்க்கலாம்.

அதேபோல் .தி.மு.. தொடர்ந்து இந்த முறையும் பா...வுடன் இணைந்து பயணிக்க ஆரம்பித்துள்ளது. எனவே இந்த முறை திருச்சி மாவட்டத்தில் கிழக்குத் தொகுதியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரான சீனிவாசன் போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சீனிவாசன் மீது பெரும் அதிருப்தி இருந்துவரும் நிலையில், அவருக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கப் பட்டால் .தி.மு..வினரே அவருக்கு தேர்தல் பணிசெய்ய முன்வரப்போவதில்லை என்று கூறுகிறார்கள்.

திருச்சி மணப்பாறை தொகுதியை முன்னாள் எம்.பி. குமாருக்கு கொடுக்க வுள்ளதாகவும், கடந்த முறை அவர் திருவெறும்பூர் பகுதியில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை அவருக்கு மணப்பாறை தொகுதியை வழங்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப் படுகிறது. மண்ணச்ச நல்லூர் அல்லது முசிறி தொகுதியில் பரஞ் ஜோதி போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முசிறி தொகுதியில் முன்னாள் எம்.எல்.. செல்வராஜ் ரேஸில் உள்ளார். .தி.மு.. வழக்கம் போல் மீண்டும் ஸ்ரீரங்கம், உள்ளிட்ட சில தொகுதிகளை பா...வுக்கு விட்டுக்கொடுக்க தயாராகி வருகிறது. தி.மு..வை எதிர்த்துப் போட்டியிடும் அளவுக்கு வலிமையான வேட்பாளர்கள் யாரையும் களமிறக்கமுடியாத நிலையில் .தி.மு.. தற்போது உள்ளது.

இந்த முறை கூட்டணியில் பா...வுக்கு 50 தொகுதிகளை ஒதுக்க உள்ளதாகவும், 40 இடங்களில் பா... வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படு கிறது. அதில் முன்னாள் தலைமை அரசு கொறடாவாக இருந்த மனோகரன் இந்த முறை வாய்ப்பு கேட்க வில்லையாம். அவருடைய தரப்பில் வாய்ப்பு கேட்பதாக இருந்தால் திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடு வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளதாகவும், இந்தத் தொகுதி யில் ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேரு வலிமையான வாக்கு வங்கியுடன் இருப்ப தால், அவரை எதிர்த்துப் போட்டியிட மூத்த அர சியல்வாதி யாரும் இல்லாத நிலை உள்ளது.

லால்குடியில் கடந்த முறை .மா.கா.விற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் தர்மராஜ் போட்டியிட்டார். இந்த முறையும் லால்குடியை கூட்டணிக்கே ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜன் (தற்போது .பி.எஸ். அணியில் உள்ளார்) பெரிய அளவில் தொகுதிக்கு எந்தவிதத் திட்டங்களையும் செய்யவில்லை. இருப்பினும் தன்னுடைய மகனுக்கு இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்ற முனைப் புடன் செயல்பட்டுவருகிறார். திருச்சி மேற்கு தொகுதியில் இந்தமுறை தி.மு.. அறிவிக்கும் வேட்பாளரைப் பொறுத்துதான் தங்களுடைய வேட்பாளரை தேர்வு செய்வார்கள்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கு..கிருஷ்ணனுக்கு பதிலாக பா... நேரடியாகக் களத்திலிறங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மணப்பாறையில் .தி.மு.. நேரடியாகப் போட்டியிட்டது, சந்திரசேகர் என்ற வேட்பாளரை நிறுத்தி களம்கண்டது. மீண்டும் அவருக்கு அந்த தொகுதியில் வாய்ப்பு கிடைக்குமா அல்லது கூட்டணிக்கு வழங்கப்படுமா என்பதை சற்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

திருச்சி சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.. பலம்வாய்ந்ததாக இருந்தாலும், மற்ற தொகுதிகளில் அவற்றின் நிலை என்ன         என்பது கேள்விக்குறிதான், பெரும்பாலான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் .தி.மு.., தி.மு..வுக்கு இடையே பலத்த போட்டி நிலவும். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலைவிட இந்த தேர்தலில் பல புதுமுகங்களுடன் தி.மு.. தேர்தலை சந்திக்கப்போகிறது. அதேபோல் .தி.மு.. சார்பில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் பட்டாலும்,  பா...வுடனான கூட்டணி அவர்களின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தத்தில் மீண்டும் தமிழகத்தில் தி.மு.. ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பாக அமையும், அதற்கு திருச்சியின் 9 சட்டமன்றத் தொகுதிகள் பலம் சேர்க்கும்.