ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வைகைப்புயல் வடிவேலு மீது மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் என்ற தகவலைக் கேள்விப்பட்டதும் பரபரப்பானோம்.

vv

வடிவேலுவை வைத்து "எலி' என்ற திரைப்படத்தை தயாரித்த மதுரை சதீஷ்குமார் என்பவர், தன்னை நடிகர் வடிவேலு வில்லனைப்போல மிரட்டுவதாக புகார் கொடுத்திருப்பதாக தெரிந்தது. இதையடுத்து, நடிகர் வடிவேலுவைத் தொடர்பு கொண்டோம்…

""அதெல்லாம் ஒண்ணு மில்லை. இந்தப் புகாருக்குப் பின்னணியில் பெரிய நெட்வொர்க்கே இருக்கு. எனக்கு சினிமா வாய்ப்பு கள் மீண்டும் வரத் தொடங்கியிருப்பதால், சதீஷ்குமாரை தூண்டிவிட்டி ருக்கிறார்கள். நான் மற்ற வர்களைச் சிரிக்க வைத்து சந்தோஷப்படுகிறவனே தவிர, அடியாட்களை வைத்து மிரட்டும் அளவுக்கு நான் வொர்த் கிடையாது'' என்று முடித்துக் கொண்டார்.

Advertisment

"இதென்னடா இது... வைகைப்புயலுக்கு வந்த சோதனை' என்று நாம் குழம்பிப் போனோம். இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்று அறிந்துகொள்ள "எலி' திரைப் படத் தயாரிப்பாளர் சதீஷ்குமார் என் பவரை சந்தித்து விளக்கம் கேட்டோம்.

""பில்டிங் காண்ட்ராக்டராக இருக்கிறேன். வடிவேலுவும் என்னிடம் இடம் வாங்கியிருக்கிறார். ஒருநாள் பேச்சுவாக்கில், "எலி' என்ற திரைப் படம் 90 லட்சம் செலவு செய்து எடுத்த நிலையில் நின்றுவிட்டதாக கூறினார். என்னை பணம் முதலீடு செய்யும்படியும், எனது பெயரிலேயே படத்தை எடுக்கலாம் என்றும் கூறினார். "எலி' படத்தின் தயாரிப்பாளர் ராம்குமா ருக்கு 90 லட்சத்தைக் கொடுத்துவிடலாம் என்றார். படத்தை முடித்தால் நல்ல லாபத்துக்கு விற்கலாம். தொலைக்காட்சி உரிமையே நல்ல விலைக்கு போகும் என்றெல்லாம் சொன்னார். ஆனால், படம் வெளிவந்து எனக்கு 9 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில்தான் சமீப நாட்களாக வடிவேலு பெயரைச் சொல்லிக்கொண்டு, என்னை பலரும் மிரட்டுகிறார்கள். நான் வீட்டில் இல்லாத நேரத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி எனது உதவியாளரை மணிகண்டன் என்பவர் அடியாட்களுடன் வந்து தாக்கி மிரட்டியிருக்கிறார்'' என்றார்.

vv

Advertisment

அதைத்தொடர்ந்து அவருடைய வழக்கறிஞர் சரவணன், ""மதுரை பொய்கைக்கரைபட்டி அருகே சதீஷ்குமார், சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நடிகர் வடிவேலு ஆகியோர் கூட்டாக சேர்ந்து 100 ஏக்கர் பரப்பில் உலகத்தரமான ஆயுர்வேத மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்கள். ஒருநாள் மணிகண்டன் என்பவர் அந்த அடிக்கல்லை இடித்துவிட்டு, "எங்க அண்ணனை ஏமாத்திட்டீங்கடா என்று சத்தம் போட்டார்' என்றார்.

""கல்வெட்டை ஏன் உடைத்தார்?'' என்றோம். ஆனால் வழக்கறிஞரோ, ""அதுவல்ல பிரச்சினை... தாக்கி மிரட்டியதுதான் பிரச்சினை'' என்று மழுப்பினார்.

இந்த விவகாரத்தின் பின்னணி புரியாத நிலையில், சினிமா தொடர்புள்ள பாரதி என்பவரிடம் பேசினோம். ""வடிவேலுவின் சினிமா ரீ-என்ட்ரியை தடுக்கத்தான் இவ்வளவும் செய்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இல்லாவிட்டாலும் அவர்தான் இப்போதும் காமெடி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். பெரிய நடிகர்களுடன் புதிய படங்கள் ஒப்பந்தமாகி யிருக்கின்றன. சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பெயர் அடிபடுதுன்னா நிச்சயமா இதில் அரசியல் இருக்கும்'' என்றார்.

-அண்ணல்