சிக்கிய கூலிப்படை! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சாமி ரவியா?

a

மிழ்நாடு முழுவதும் ரவுடிகள், கூலிப்படையினருக்கு எதிரான நடவடிக்கைகள் விறுவிறுப் படைந்துள்ளன. அதையடுத்து திருச்சி சாமி.ரவி உள்பட பல ரவுடிகள் தாங்களாகவே முன்வந்து சரணடைய, சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். மேலும், திருச்சி ரவுடி துரை கடந்த மாதம் புதுக்கோட்டையில் என்கவுண் டர் செய்யப்படார். அடுத்த சில நாட்களில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சென்னையில் சுடப்பட்ட சம்பவமும் ரவுடிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. மேலும் பல ரவுடிகளுக்கு கைக்கட்டு, கால்கட்டும் போடப்பட்டுள்ளது.

aa

இந்நிலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த 5ஆம் தேதி முதல் சந்தேகப் படும்விதமாக 5 பேர் தங்கி யிருப்பதாக புதுக்கோட்டை டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி தகவலையடுத்து, தனிப்படை போலீசார் சோதனையிட்ட தில், கூலிப்படையினர் பயன்படுத்தும் 5 அரிவாள்கள், பெட்ரோல் குண்டு தயாரிக்கப் பயன்படுத்தும் பாலித்தீன் பைகளுடன், மிளகாய்த்தூள் பாக்கெட்டுகளுடன் 5

மிழ்நாடு முழுவதும் ரவுடிகள், கூலிப்படையினருக்கு எதிரான நடவடிக்கைகள் விறுவிறுப் படைந்துள்ளன. அதையடுத்து திருச்சி சாமி.ரவி உள்பட பல ரவுடிகள் தாங்களாகவே முன்வந்து சரணடைய, சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். மேலும், திருச்சி ரவுடி துரை கடந்த மாதம் புதுக்கோட்டையில் என்கவுண் டர் செய்யப்படார். அடுத்த சில நாட்களில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சென்னையில் சுடப்பட்ட சம்பவமும் ரவுடிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. மேலும் பல ரவுடிகளுக்கு கைக்கட்டு, கால்கட்டும் போடப்பட்டுள்ளது.

aa

இந்நிலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த 5ஆம் தேதி முதல் சந்தேகப் படும்விதமாக 5 பேர் தங்கி யிருப்பதாக புதுக்கோட்டை டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி தகவலையடுத்து, தனிப்படை போலீசார் சோதனையிட்ட தில், கூலிப்படையினர் பயன்படுத்தும் 5 அரிவாள்கள், பெட்ரோல் குண்டு தயாரிக்கப் பயன்படுத்தும் பாலித்தீன் பைகளுடன், மிளகாய்த்தூள் பாக்கெட்டுகளுடன் 5 இளைஞர்களையும், காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பழைய பிரபல ரவுடி மணல்மேடு சங்கர் டீம் ஆட்களென்று கூறியுள்ளனர். மேலும் நடந்த விசாரணையில், சிதம்பரம் தாதம்பேட்டையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், மலவராயன் நல்லூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டபிரபு, திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ் பாண்டியன், ராஜவல்லிபுரத்தை சேர்ந்த மகாதேவன், ஆலங்குளத்தை சேர்ந்த இசக்கி பாண்டியன் என்பது தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த கொலைச் சம்பவத்துக்கு பழிதீர்க்க வந்ததாக போலீசாரின் விசாரணையில் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் சொன்ன பதில் போலீசாருக்கு நம்பகமாக இல்லை. போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, "புதுக்கோட் டையில் பெரிய அளவில் ரவுடியிசம் இல்லாதசூழலில், வெளியூர்களில் சம்பவம் செய்யும் ரவுடிகள் புதுக்கோட்டையில் அடைக்கலமாகிறார்கள். கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு போலீசார் தேடத் தொடங் கியதும் தப்பிச் சென்றுவிடுகின்றனர். அதேபோல யாரேனும் புதுக்கோட்டையில் பதுங்கியிருப்பது தெரிந்து அவர்களைக் கொல்ல வந்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது'' என்றனர். இன்னும் சில போலீசாரோ, "எதிர் குரூப் ரவுடியைப் போட வருபவர்கள் இப்படியெல்லாம் லாட்ஜில் தங்கமாட்டார்கள். ஒதுக்குப்புறமாகவே பதுங்கி வேவு பார்த்து வேலையை முடித்துக் கிளம்புவார்கள். ஆனால் இப்போது பிடிபட்டவர்கள், திருநெல்வேலி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே ஜாதியினர். அப்படியானால் இவர்களின் எதிரி மாற்று ஜாதிக்காரர் தான். இவர்கள் வேண்டுமென்றே தங்கி, விஷயத்தை போலீசாருக்கு கசியவிட்டு, போலீசார் பிடிக்கும்போதும் மறுப்பு சொல்லவில்லை. இவர்களனைவருக்கும் சிறைக்கு செல்லவேண்டுமென்பதே நோக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. அதற்கான ஸ்கெட்சாகவே தெரிகிறது.

ad

ராமஜெயம் கொலை வழக்கு உட்பட பல கொலை வழக்குகளில் பரபரப்பாக பேசப்பட்ட திருச்சி ரவுடி சாமி.ரவி, திருக்காட்டுப்பள்ளியில் செந்தில் என்பவரின் கொலை வழக்கில் பல நாட்களாகத் தேடப்பட்டு பிடிபடவில்லை.

திருவையாறு டி.எஸ்.பி. ஆஜராகச் சொல்லி அழுத்தம் கொடுத்தும் அரசியல் செல்வாக்கால் ஆஜராகவில்லை. இந்த நிலையில்தான் அடுத்தடுத்த என்கவுண்டர் களால் பீதியடைந்து, தனக்கு வேண்டிய போலீசார் மற்றும் மாஜி அரசியல்வாதிகளின் ஆலோசனைப்படி திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் சென்று சரணடைந்தார். சாமி. ரவியிடம் விசாரணை செய்த ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனிடம் (தற்போது எஸ்.பி.), திருவையாறு டி.எஸ்.பி. தான் ஆஜராக வேண்டாமென்று சொன்னதாகக் கூறி, தன்னை கைது செய்ய துடித்த டி.எஸ்.பியை போட்டுக் கொடுத் துள்ளார். அதை நம்பி டி.எஸ்.பி.க்கு இடமாறுதல் போட்டதால், அந்த டி.எஸ்.பி. மன உளைச்சலில் விடுப்பில் சென்றுவிட்டார்."

சரணடைந்த சாமி.ரவிக்கு ஆபத்து அதிகமென்பதால், அவருக்கு வேண்டிய போலீசாரே குண்டாஸை தயாரித்து குண்டர் சட்டத்தில் புதுக்கோட்டை சிறையிலடைத் தனர். சாமி.ரவியை இதே மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி ஒருவர் வந்து பார்த்துச் சென்றுள்ளார். தினசரி வீட்டுச் சாப்பாடும், 2 செல்போன்களும் கிடைக்கச் செய்திருக்கிறார். இதே சிறையில் தான் தீபக் ராஜா டீமிலிருந்த சன்னாசி பாண்டியும் இருக்கிறார். சாமி.ரவி உள்ளே வந்ததும், சன்னாசி பாண்டி தான் வெளியிலிருக்கும் டீமுக்கு தகவலனுப்பி, சாமி ரவி கதையை முடிக்க கூடுதல் ஆட்களை உள்ளே அனுப்பக் கேட்க, அதன்படி 5 பேர் போலீசில் சிக்கியிருப்பதாக தெரிகிறது'' என்றார்கள்.

சேலம் சிறையிலுள்ள மறைந்த மணல்மேடு சங்கருக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர்தான் இந்த அசைன்மெண்ட் டையும் செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் சாமி ரவியின் பங்கிருக்குமோ எனச் சந்தேகப்பட்டுதான் இப்படி தானாகச் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. இந்த 5 பேரோடு, இவர்களுக்கு உதவிய மேலும் மூவரையும் விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால் சுதாரித்துக்கொண்ட புதுக்கோட்டை போலீசார், கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருச்சி சிறைக்கு அனுப்பிவிட்டனர். அதேபோல சாமி.ரவியையும் இங்கிருந்து வேறு சிறைக்கு மாற்றியனுப்பத் திட்ட மிட்டுள்ளனர். சாமி. ரவி எந்த சிறைக்கு போனாலும் சொகுசு வாழ்க்கை தான்!

nkn140824
இதையும் படியுங்கள்
Subscribe