ம்ஸ்ட்ராங் படுகொலையையடுத்து தமிழகத்தில் ரவுடிகளின் வேட்டையைக் காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். அதுபோன்ற ஆபரேஷனில் போலீசாரிடம் விலாங்கு மீன் போல் சிக்கியவர் தான் தூத்துக்குடி மாநகரின் கிரிமினல் ப்ளஸ் ரவுடியான ஐகோர்ட் மகாராஜன். அண்மையில் மதுரையில் மாணவன் ஒருவனை கடத்திச்சென்று இரண்டு கோடி கேட்டு மிரட்டிய வழக்கில், மதுரை காவல் துறையால் சலித்தெடுக்கப்பட்ட ரவுடிதான் ஐகோர்ட் மகாராஜன்.

தூத்துக்குடியின் சுந்தரவேல்புரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஐகோர்ட் மகாராஜனுக்கு படிப்பு 10ஆம் வகுப்பிற்கு மேல் ஏறவில்லையாம். சின்னச் சின்ன குற்றச்செயல்களில் சிக்கி வெளியே வரும் மைனர் குற்றவாளிகளைத் தனது அல்லக்கைகளாகச் சேர்த்துக்கொண்டு தூத்துக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் திருட்டு, வழிப்பறிகளை நடத்திய ஐகோர்ட் மகாராஜன், அவ்வப்போது அரசு விருந்தாளியாகவும் உள்ளே போய் வந்ததில் பிரபலமானான்.

s

நெல்லை புறநகர்ப் பகுதியில் ஐகோர்ட் சாமி கோவில் என்று ஒன்று உண்டாம். ஒரு சாராருக்கு அக்கோவில் குலதெய்வம் என்பதால் ஐகோர்ட் என்ற பெயரையே பலர் தங்களின் பெயரோடு இணைத்துக் கொண்டனராம். அந்த வகையில் மகாராஜனும் தனது பெயரை ஐகோர்ட் மகாராஜன் என்று மாற்றிக்கொண்டு கெத்தாக வலம் வருவார் என்கிறார்கள்.

Advertisment

தொடக்கத்தில் சின்னச் சின்ன குற்றங்களில் ஈடுபட்டுவந்த ஐகோர்ட் மகாராஜன், 2020களில் தன் சகாக்களோடு சேர்ந்து, தூத்துக்குடி தாளமுத்து நகர் ஏரியாவில் ஆள் கடத்தலில் ஈடுபட்டு 10 லட்சம் ரூபாயை மிரட்டிவாங்கிய பின்னரே, நொட்டோரியஸ் ரவுடி ப்ளஸ் கிரிமினல் என்று லைம் லைட்டிற்கு வந்து, தூத்துக்குடி ரவுடிகளையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறான். ஆள் கடத்தலுக்குப் பின்பு போலீஸில் சிக்காத ஐகோர்ட் மகாராஜன், தனது கிரிமினல் ஆபரேஷன்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்து அல்லக்கைகளை ஈடுபடுத்தி வந்திருக்கிறான்.

கடந்த 2022-ல் பசுவந்தனை நகரைச்சேர்ந்த பெண்ணோடு பழக்கமாகியதில், அவளது காதலன் ஐகோர்ட் மகாராஜன் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில் அவளை விளாத்திகுளம் பக்கமுள்ள சூரங்குடிக்கு அழைத்து வந்தபோது, அவனுக்கும் அவளுக்குமிடையே வாக்குவாத மானதில், அவளைக் கொலை செய்து, நகைகளை அபகரித்த ஐகோர்ட் மகாராஜன், உடலை அங்கேயே எரித்திருக்கிறான்.

இந்த சம்பவத்தில் எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணை அடையாளம் காண்பதற்கே போலீசாருக்கு ஒரு வருடமாகியிருக்கிறதாம். ஒருவழியாக கொலைசெய்த ஐகோர்ட் மகாராஜனை கைது செய்த போலீசார், கடந்த மார்ச் 5ல் அவனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைப்பதற்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் பேரூரணி சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தபோது, திட்டப்படி தூத்துக்குடி பஸ் நிலையத்தில் காத்திருந்த ஐகோர்ட் மகாராஜனின் மனைவி பிரியதர்ஷினி மற்றும் அல்லக்கைகள், போலீசார் மீது மிளகாய்ப்பொடியைத் தூவி அவர்களைத் தாக்கிவிட்டு ஐகோர்ட் மகாராஜனை மீட்டு தப்பிச் சென்றது பரபரப்பு விஷயமாயிற்று. இதில் தப்பிய ஐகோர்ட் மகாராஜன், மதுரையில் பதுங்கியபடி அங்கே ஸ்பா ஒன்றையும் நடத்திவந்திருக்கிறான்.

Advertisment

ssமதுரையில் பதுங்கி பினாமியாக ஸ்பா நடத்திவந்த ஐகோர்ட் மகாராஜனுக்கு, அங்கு பியூட்டி பார்லர் மற்றும் காம்ப்ளக்ஸ் நடத்திவந்த விளாத்திகுளம் பக்கமுள்ள துளசிப்பட்டியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மாஜி மனைவியான சூர்யா, பல வகையிலும் உதவி செய்து வந்திருக்கிறாராம்.

இந்த நிலையில் தான் சூர்யாவின் கடனுக்காக அவரது அழகு நிலையத்தையும் வீட்டையும் மைதிலி ராஜலட்சுமி என்பவரின் தலைமையிலான சிலர் மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டார்களாம். இதனை மீட்பதற்காக ஐகோர்ட் மகாராஜனின் உதவியை சூர்யா நாட, சூரியாவிற்கு ஆதரவாக ஐகோர்ட் மகாராஜன் ஜூன் 11 அன்று மைதிலியின் 15 வயது சிறுவனை, ஆட்டோ டிரைவருடன் கடத்திச் சென்றதோடு, 2 கோடி கேட்டு மிரட்டியிருக்கிறார். அதுசமயம் விரைந்து செயல்பட்ட போலீசார், மாணவனை மீட்டபோது போலீசின் பிடியிலிருந்து லாவகமாகத் தப்பி யிருக்கிறார் ஐகோர்ட் மகாராஜன். சிறுவன் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா, குஜராத்தி லுள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த போது தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதியிருந்த கடிதத்தில், மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. சிறுவன் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் ஐகோர்ட் மகாராஜன் கைது செய்யப்பட்டால் அதில் பல உண்மைகள் வெளியே வருமென்று தெரிவித்திருப்பதாகச் சொன்னார் தனிப்படையின் அந்த அதிகாரி.

இந்த நிலையில்தான் தூத்துக்குடி எஸ்.ஐ. பிரட்ரிக் தலைமையிலான போலீசார், ஜூலை 31 அன்று கோவையில் பதுங்கியிருந்த ஐகோர்ட் மகாராஜனை வளைத்தபோது அவர்களிட மிருந்து தப்பிச் செல்வதற்காக காம்பவுண்ட் சுவரில் ஏறிக் குதித்ததில் தவறி கீழே விழுந்து, வலது கை எலும்பில் முறிவு ஏற்பட்டதால் அவருக்கு கட்டுப் போடப்பட்டுள்ளது. அவரிடமிருந்த ஏர்கன் வகையைச் சேர்ந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள் தனிப்படையினர். மர்மங்களையும், புதிர்களையும் உள்ளடக்கியிருக்கிறது ஐகோர்ட் மகாராஜனின் மறுபக்கம்.

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்