காத்மா காந்தி தேசத்துரோகி, பகத்சிங் தேசத்துரோகி, நேதாஜி தேசத்துரோகி, வ.உ.சி. தேசத்துரோகி, பாரதியார் தேசத் துரோகி...'

"என்ன இது அபத்தமாக இருக்கிறதே' என்று கேட்கத் தோன்றுகிறதா? வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் அவர்களின் கொடூர சட்டத்தின்படி, சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர் கள் எல்லாருமே தேசத்துரோகிகள்தான். இன்று அவர்கள் நமக்குத் தலைவர்கள். முன்னோடிகள். ஆனால், அந்த காலனிய காலத்துச் தேசத்துரோகச் சட்டம் தற்காலத்திலும் தொடர்வதை யும், அரசை விமர்சனம் செய்யும் நபர்கள் மீதும், குறிப்பாக பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மீதும் இச்சட்டம் dஅதிகளவில் பயன்படுத்தப்படுவது குறித்தும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரமணா கேள்வியெழுப்பியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் எஸ்.ஜி. வோம்பாட்கெரே, பேச்சுரிமைக்கு எதிராக தேசத் துரோகச் சட்டம் ஏற்படுத்தியிருக்கும் விளைவு குறித் தும் இதை நீக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கறிஞர்கள் பி.பி. சுரேஷ், பிரசன்னா மூலம் 124 ஏ சட்டப்பிரிவை நீக்கவேண்டுமென தாக்கல் செய்த புகார் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வின்கீழ் ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “தேசத்துரோகச் சட்டம் காலனிய காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர் போன்றோருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. சுதந்திர மடைந்து 75 வருடங்கள் ஆன நிலை யிலும் அந்தச் சட்டம் தேவை தானா?” என கேள்வியெழுப்பினார்.

தேசத்துரோகச் சட்டம் உண்மை நிலை என்ன?

Advertisment

dd

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் 559 பேர் மீது இச் சட்டம் பாய்ந்துள்ளது. 337 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. 10 பேர் குற்றவாளி யென நிரூபிக்கப் பட்டு தண்டனை பெற்றுள்ளனர். 73 பேர் நிரபராதி யென விடுவிக்கப் பட்டுள்ளனர்.

2019-ல் முஸ்லிம்கள், தலித் உள்ளிட்டோர் கும்பலாகத் தாக்கப் படுவது அதிகரித்து வருவதாக, இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் 49 பேர் பிரதமர் மோடிக்குக் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினர். இதற்கு எதிராக பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் புகார் கொடுக்க, பீகார் காவல்துறை 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தது. பின் வழக்கு விசாரணை யின்போது, இவர்கள் எழுதிய கடி தத்தைத் தவிர்த்து கூடுதல் ஆதா ரங்களைத் தாக்கல் செய்யாத நிலை யில் அவர்கள் மீது பதிவுசெய்யப் பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.

Advertisment

பத்திரிகையாளர்கள் சித்திக் கப்பன், வினோத் துவா, லட்சத்தீவைச் சேர்ந்த இயக்கு நர் ஆயிஷா சுல்தானா, சமூகச் செயல்பாட் டாளர் திஷா ரவி ஆகியோரும் தேசத்துரோ கச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவில்லை.

மிகச் சமீபத்தில் கொரோனா அலையின்போது, கொரோனாவை மத்திய, மாநில அரசுகள் நிர்வகித்தது தொடர்பாக வும், மருத்துவ வசதி, மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்காதது தொடர்பாகவும் கேள்வியெழுப்பியவர்கள், விமர்சித்தவர்கள் மீதும் தேசத்துரோக வழக்குகள் பாய்ச்சப்பட்டன.

“தேசத்துரோகச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அரியானா துணை சபாநாயகர் ரன்பீர் காங்வாவின் வாகனத்தை உடைத்துச் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்துக்காக அரியானா போலீசாரால் 100 விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவரான யோகந்திர ஜாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தலைமை நீதிபதி ரமணாவின் கருத்தை உறுதிசெய்துள்ளார்.

என்ன சொன்னார் தலைமை நீதிபதி?

dd

"தேசத்துரோகச் சட்டமான இந்தியன் பீனல் கோடு சட்டத்தின் 124 ஏ, பிரிவு விசாரணை அமைப்புகளால் தவறாகப் பயன்படுத்தப்படுப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மரம் ஒன்றை வெட்ட கையில் வாள் கொடுக்கப்பட்ட தச்சன், மொத்த காட்டையும் அழிப்பதைப் போன்றது இது'' என்றும் குறிப்பிட்டார்.

இந்த தேசத்துரோக சட்டத் தின்கீழ் குற்றம் சுமத்தும் விகிதம் அதிகரித்து வருவது குறித்து ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞ ரான அட்டர்னி ஜெனரலின் கவனத்தில் பதியும் விதத்தில், “"இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படுபவர்களின் விகிதம் மிகக்குறைவாக இருந்தது. அந்நிலைமை தற்போது மாறியுள் ளது. சட்டப் புத்தகத்திலிருந்து நூற்றுக்கணக்கான தவறான சட்டங்கள் நீக்கப்பட்டதுபோல தேசத் துரோகச் சட்டம் ஏன் நீக்கப்படவில்லை. இந்த தேசத் துரோகச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் மக்கள் பயந்தும் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட அரசையும் குறை சொல்வதற்காக இதைச் சொல்ல வில்லை. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவு நீக்கப்பட்ட பின்னும் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்பட்டிருப்பது எப்படி எனப் பாருங்கள்.

ஒரு காவல்துறை அதிகாரி விரும்பினால் ஒரு கிராமத்திலுள்ள யார் மீதும் 124 ஏ சட்டத்தைப் பயன்படுத்தலாம். சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்தும், பொறுப்பேற்க யாரும் முன்வராதது குறித்துமே எங்கள் கவலை. சுதந்திரமாக இயங்குவதற்கு அச்சுறுத்தலாக இச்சட்டம் திகழ்கிறது''’என அவர் குறிப்பிட்டார்.

ddd

ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால், "இந்த சட்டப் பிரிவை நீக்கவேண்டியதில்லை. அதன் உண்மையான நோக்கத்தைத் தாண்டி இந்தச் சட்டம் அளவுக்கு அதிகமாகவோ வரம்பு மீறியோ பயன்படுத்தப்படுகிறதா என பார்ப்பதே போதுமானது. அதற்கான வரையறைகளை உருவாக்கிக்கொள்ளலாம்''’ என வாதிட்டார்.

இதனையடுத்து தேசத்துரோக வழக்கு பதிவுசெய்வது தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய விரிவான அறிக்கையை தாக்கல் செய் யும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ரமணா உத்தரவிட்டார்.

தீர்வு என்ன?

இது ஒருபுறமிருக்க, முன்னாள் அமைச்சரும் மூத்த பத்திரிகையாளருமான அருண் ஷோரியும் தன்னார்வ அமைப்பொன்றும் கைகோத்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மூலம் 124-ஏ பிரிவை நீக்க வேண்டுமென மற்றொரு தனி வழக்கொன்றைத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை யு.யு. லலித் தலைமையிலான அமர்வு விசாரித்துவருகிறது

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு அமர்வை உருவாக்கி, இந்தச் சட்டம் நீடிப்பதா… வேண் டாமா… என முடிவுசெய்யவேண்டும். குறைந்தபட்சம், எது தேசத்துரோ கம் என்பது முதன்மையாக வரையறுக்கப்படவேண்டும். அதிகாரத்தி லிருப்பவர்களை எதிர்ப்பதோ விமர்சிப்பதோ தேசத்துரோகமாகி விடாது. தேசத்துரோக வழக்கைப் பதிவுசெய்யும் முன் விசாரணை அமைப்புகள் பின்பற்றுவதற்கான விதிமுறைகளையாவது வகுத்தளிக்கவேண்டும்.

அப்போதுதான் தேச அபிமானிகள் தேசத்துரோகிகளாக மாறுவ திலிருந்து தப்பிக்க முடியும். தேசம் தழுவிய போராட் டம் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தனிநபர் குறிவைக்கப்படுவதை மாற்றமுடியும். ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டவர், ஜாமீன் மறுக்கப்பட்டு சிறைக்குள் அடைபடுவதிலிருந்து தப்பிக்கமுடியும். நக்கீரன் போன்ற முதுகெலும்புள்ள பத்திரிகைகள், தேசத்துரோக வழக்குகளை சந்திக்காமல் தங்கள் இதழியல் அறம் சார்ந்த புலனாய்வு செய்திகளை வெளியிட முடியும். ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் களைத் தியாகிகளாகவும், தேசத்தந்தையைக் கொன்ற கும்பலை ஆராதனைக்குரியவர்களாகவும் வரலாற்றைத் திரிபு செய்யும் நாட்டில், உண்மையைப் பேசுபவர்களை தேசதுரோகிகளாக சித்தரிக்கும் வழக்குகள் அத்தனை எளிதாக ஒழிந்துவிடுமா?