வெளிநாடுகளுக்கு வேலைகளுக்குச் சென்று சரியான வேலை கிடைக்காமல் அல்லாடும் தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதாக கூறி தங்கம் கடத்த, குருவிகளாக பயன்படுத்தும் கும்பல் கடலூர் மாவட்டத்தில் சிக்கியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், “கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த தே.புடையூரை சேர்ந்த பாலையா(40), கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு துபாய்க்கு வேலைக்குச் சென்றார். அங்கு அவருக்கு ஏஜென்ட் கூறியபடி வேலை கிடைக்கவில்லை. அதனால் கட்டட வேலை உள்பட கிடைத்த வேலைகளைச் செய்து வந்துள்ளார். ஆனால் அவரால் தொடர்ந்து வேலைசெய்ய முடியாததாலும், போதுமான சம்பளம் கிடைக்கவில்லை என்பதாலும் ஊருக்குச் செல்ல நினைத்துள்ளார். அவரை வேலைக்கு எடுத்தவர்கள் பாஸ்போர்ட், விசாவை தராமல் அலைக்கழித்துள்ளனர்.
அப்போது இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த நம்புதாலை கிராமத்தைச் சேர்ந்த குமரேசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாலையாவை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்ட குமரேசன் பாலையாவிடம் ஊருக்குப் போவதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, தான் ஒரு பார்சல் தருவதாகவும், அதைப் பிரிக்காமல் விமான நிலைய வாயிலில் தமது ஆட்களிடம் கொடுக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். அதற்குச் சம்மத்தித்த பாலையா பார்சலை பெற்றுக்கொண்டு கடந்த 14-ஆம் தேதி காலை துபாயிலிருந்து மதுரை ஏர்போர்ட்டில் இறங்கியுள்ளார்.
ஆனால் சுதந்திர தினத்திற்கு முதல் நாள் என்பதால் விமான நிலையத்தில் கெடுபிடி அதிகமாக இருக்கவே பாலையாவிடம் பெட்டியை வாங்க குமரேசன் குறிப்பிட்ட நபர் வரவில்லை. இதனால் பெட்டியுடன் ஊருக்குக் கிளம்பிய பாலையா விருத்தாசலம் அடுத்த பேரலையூரிலுள்ள தனது மாமியார் ராணியின் வீட்டிற்கு வந்தார். பார்சல்களை மாமியாரிடம் கொடுத்த பாலையா தான் இங்கு வந்ததை யாரிடமும் கூறவேண்டாம் என கூறிவிட்டு தலைமறைவாகினார்.
குமரேசன் குறிப்பிட்டவர் களிடம் பார்சல் சேராததால் குமரேசன் அனுப்பிய ஆட்கள் பாலையாவின் சொந்த ஊரான தே.புடையூர் வீட்டிற்கு வந்தனர். அவரது மனைவி முத்துலட்சுமி யிடம் பார்சல் குறித்து கேட்டனர். அவரது மனைவி இன்னும் தனது கணவர் இங்கு வரவில்லை என கூறவே, அந்த கும்பல் தகராறு செய்துள்ளது.
இதனிடையே பாலையா ஏமாற்றிவிட்டதாக நினைத்த குமரேசன் உடனடியாக துபாயி லிருந்து புறப்பட்டு 15-ஆம் தேதி காலை மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்தார். மதுரை விமான நிலையத் திலுள்ள டாக்ஸி ஸ்டேண்ட் டிரைவர்களிடம் பாலையாவின் படத்தைக் காட்டி விசாரித்துள்ள னர். அப்போது அங்கிருந்த டாக்ஸி டிரைவர் ஒருவர் தான் விருத்தாசலம் அருகே பேரலை யூரில் இறக்கிவிட்டதைச் சொல்லி யிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நேராக பேரலையூர் சென்ற குமரேசனும் அவரது ஆட்களும் அங்கு விசாரித்திருக்கின்றனர். மாமியார் ராணி, பாலையாவின் வீட்டில் இருப்பதாகத் தெரிந்து தே.புடையூருக்கு வந்தனர்.
அங்கு ஊராட்சி தலைவர் சமரசம் செய்து, பாலையாவின் மாமியார், மனைவியிடம் விசாரிக்க, பேரலையூரில் பெட்டி ஒன்று இருப்பதாகக் கூற அதை எடுத்துவர அனுப்பினார். அவர் கள் எடுத்துவரும் வழியிலேயே சினிமா பாணியில் பெட்டியை பறித்துக்கொண்ட ஒரு கும்பல், அங்கிருந்து எஸ்கேப் ஆகியது. அதேசமயம் தே.புடையூரிலிருந்த குமரேசன் மற்றும் அவரது ஆட்களான அரியலூர் மாவட்டம், பெரிய காடுவெட்டி சின்னராசு (24), திருச்சி மாவட்டம் கல்நாகக்கோட்டை விக்னேஷ் (27), திருச்சி பாலக்கரை சாகுல்ஹமீது (40), விருத்தாசலம் அடுத்த கீனணூரைச் சேர்ந்த செல்வமணி (35) ஆகிய 5 பேரையும் போலீஸ் மடக்கிப் பிடித்து கைது செய்தது.
குமரேசன் கொடுத்த வாக்குமூலத்தின்படி பாலையாவிடம் கொடுத்தனுப்பியது 100 கிராம் எடைகொண்ட 3 தங்கக் கட்டிகள் என தெரிய வந்தது. தங்கக் கட்டிகளை பறித்துச் சென்ற 4 பேர் கொண்ட கும்பல் தேடப்பட்டு வருகின்ற னர். தலைமறைவாக இருந்த பாலையாவும் கைது செய்யப்பட்டார்”.
தே.புடையூர் ஊராட்சித் தலைவர் பாண்டியன் கூறுகையில், "14-ஆம் தேதி மாலை பாலையாவின் வீட்டில் சிலர் தகராறு செய்வ தாகக் கேள்விப்பட்டு அங்கு போனேன். அவர் களிடம், ‘பெண்களிடம் தகராறு செய்யாதீர்கள். நான் விசாரித்துச் சொல்கிறேன்’ என கூறினேன். அடுத்த நாள் 15-ஆம் தேதி வேப்பூர் காவல் நிலை யத்தில் புகார் செய்தோம். மீண்டும் மாமியார் வீட்டில் சிலர் விசாரித்துவிட்டு இங்கு வந்தனர்.
நானும் பாலையாவின் மாமியாரிடம் விசாரித்தேன். அவர், பெட்டி கொடுத்தார். ஆனால் அதில் என்ன இருக்கிறது என தெரி யாது’ என கூறினார். அப்படியானால் அந்த பெட்டியை எடுத்துவாருங்கள் என கூறி பாலையாவின் மாமியாருடன், அவரது அண்ணன் மகனையும் இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைத்தோம். பின்னர் என்னையும், இன்னொரு வரையும் ஒரு காரில் ஏற்றிக்கொண்டு 4 பேர் பேரலையூர் நோக்கிச் செல்ல, பாலையாவின் மாமியார் பெட்டியை எடுத்துக்கொண்டு புடையூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வர, ஊருக்குள் வேண்டாம் என முடிவெடுத்து, தாழநல்லூர் - எரப்பாவூரிடையே ஒரு இடத்தில் காரை நிறுத்தினோம். ராணியிடம் பெட்டியை வாங்கிய எங்களுடன் வந்த கும்பல் எங்களை அங்கேயே இறக்கிவிட்டு, தப்பி தலைமறை வானார்கள். இதனால் சந்தேகமடைந்த நான் வேப்பூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். அவர்கள் இங்கு புடையூரில் இருந்தவர்களைக் கைது செய்தார்கள்''’என்றார்.
குமரேசன் துபாயில் தங்கக் கடத்தல் புரோக்கராக உள்ளார். பாலையாவைப்போல ஊருக்கு வரமுடியாமல் தவிப்பவர்களை அணுகி, அவர்களுக்கு உதவி செய்வதுபோல பேசி, அவர்களை ‘குருவிக ளாக்கி தங்க பிஸ்கட்டு கள், நகைகளை, ஏர் போர்ட் போலீசாரை ஏமாற்றி கடத்துவதாக கூறப்படுகிறது. காவல் துறை விசாரணையில் குமரேசன் அளித்த வாக்குமூலத்தில், “"மீன் பிடிக்கும் வேலைக்காக துபாய் சென்ற எனக்கு போதுமான வருமானம் இல்லை. அதனால் அங்கு குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி, அதனை தமிழகத்துக்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்தேன். இந்த நிலை யில் பாலையாவுடன் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் தங்கம் கடத்திவந்து விற்பனை செய்ய திட்டமிட் டேன். அதன்படி பாலையாவிடம் தங்க பிஸ்கெட்டு கள் கொண்ட பார்சலைக் கொடுத்து மதுரை ஏர் போர்ட்டில் எனது ஆட்களிடம் கொடுக்கும்படி கூறினேன். ஆனால் பாலையா கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். அதனால் அதனை வாங்கிச்செல் வதற்காக வந்த நாங்கள், எங்களது ஆட்கள் மூலம் அவரது மாமியார் ராணியிடமிருந்து பறித்து, விற்பனை செய்வதற்காக இப்ராஹிம் உள்ளிட்டோ ரிடம் கொடுத்தனுப்பினேன். அதன்பிறகு பாலையாவை தேடிக்கொண்டிருந்தபோதுதான் போலீசிடம் சிக்கிக் கொண்டோம்'’என கூறியுள் ளார். தங்க பிஸ்கட்டு களோடு தப்பித்த 4 பேர் எங்கிருக்கிறார்கள் என தெரியாமல் போலீஸ் திண்டாடுகிறது.
இதுபோல் வெளி நாடுகளில் குறிப்பிட்ட வேலைகிடைக்காமல் சிக்கிக்கொண்டுள்ள தமிழர்களை வலைவீசிப் பிடித்து, குருவிகளாக்கி தங்கம் உள்ளிட்ட விலை யுயர்ந்த பொருட்களை கடத்தும் கும்பல் வெளி நாடுகளிலும், தமிழ்நாட் டிலும் நிறைய உள்ள தாக தெரிகிறது. அயலக தூதரகங்களும், விமான நிலைய பாதுகாப்பு படை யினரும் தீவிர கவனம் செலுத்தி தங்க கடத்த லைத் தடுக்கவேண்டும்.