டூரிங் டாக்கீஸ்! துருவ் வெயிட்டிங்!

ss

துருவ் வெயிட்டிங்!

ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கிறார் துருவ் விக்ரம். இதுவரை அவர் நடித்த "ஆதித்ய வர்மா', "மகான்' உள்ளிட்ட படங்கள் அவர் எதிர் பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனி டையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். அதை பெரிதும் நம்பியிருந்தார்.

ஆனால் மாரி செல்வராஜ், உதயநிதி அழைத்ததால் "மாமன்னன்' படத்திற்கு சென்று விட்டார். துருவ் விக்ரம் படம் கிடப்பில் போடப் பட்டது. இப்படத்தை முடித்துவிட்டு ஆரம்பிக் கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்குள் "வாழை' என்ற தலைப்பில் ஒரு படத்தை தொடங்கி இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தை முடித்துவிட்டு துருவ்விக்ரம் படத்தை ஆரம்பிக்க வுள்ளார். இதனால் இப்படத்திற் காக நீண்ட மாதமாக தனது உடலை மெருகேற்றி வருகிறார் துருவ் விக்ரம். கபடியை மையப்படுத்தி இப்படம்

துருவ் வெயிட்டிங்!

ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கிறார் துருவ் விக்ரம். இதுவரை அவர் நடித்த "ஆதித்ய வர்மா', "மகான்' உள்ளிட்ட படங்கள் அவர் எதிர் பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனி டையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். அதை பெரிதும் நம்பியிருந்தார்.

ஆனால் மாரி செல்வராஜ், உதயநிதி அழைத்ததால் "மாமன்னன்' படத்திற்கு சென்று விட்டார். துருவ் விக்ரம் படம் கிடப்பில் போடப் பட்டது. இப்படத்தை முடித்துவிட்டு ஆரம்பிக் கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்குள் "வாழை' என்ற தலைப்பில் ஒரு படத்தை தொடங்கி இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படத்தை முடித்துவிட்டு துருவ்விக்ரம் படத்தை ஆரம்பிக்க வுள்ளார். இதனால் இப்படத்திற் காக நீண்ட மாதமாக தனது உடலை மெருகேற்றி வருகிறார் துருவ் விக்ரம். கபடியை மையப்படுத்தி இப்படம் உருவாகுவதால் கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்க வுள்ளார். இந்நிலையில் மாரி செல்வராஜ் படத்தை முடித்து விட்டு "டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார் துருவ் விக்ரம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மாரி செல்வராஜ் படமும் இப் படமும் நமக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் துருவ் விக்ரம்.

அட்டகத்தி கூட்டணி!

பா.ரஞ்சித், தற்போது விக்ரமை வைத்து "தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றது. சமீபத்தில் விக்ரமுக்கு படப்பிடிப்பு ஒத்திகை யின்போது அடிபட்டதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் குணமடைந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

cc

குறுகிய காலத்திலேயே ரஜினியை வைத்து 2 படங்கள் எடுத்த பா.ரஞ்சித், கடந்த ஆண்டு கமலை வைத்து ஒரு படம் எடுக்க கமிட்டானார். படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகள் நடைபெற்று வரு கிறது. ஆனால் கமல், அ.வினோத்துடன் ஒரு படம், மணிரத்னத்துடன் ஒரு படம் என பிசியாக இருப்பதால் இப்போதைக்கு இப்படம் டேக் ஆஃப் ஆக வாய்ப்பில்லை என முணுமுணுக்கப் படுகிறது. இந்நிலையில் "அட்டகத்தி' தினேஷை வைத்து மீண்டும் ஒரு படம் எடுக்க திட்ட மிட்டுள்ளார் பா.ரஞ்சித். இப்படம் கேங்ஸ் டர் ஜானரில் ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகிறது. இதனிடையே ஆர்யாவை வைத்து "சார்பட்டா 2' படத்தை எடுக்க வுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் போட்ட கண்டிஷன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் "லியோ' படத்தில் பிசியாக உள்ள விஜய், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக் கிறார். இப்படத்தின் பூஜையை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி நடத்த படக்குழு திட்ட மிட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியின் புகைப்படம் மற்றும் வீடியோவை 'லியோ' படம் வெளியீட்டுக்கு பிறகு தான் முறையாக வெளியிட வேண்டும் என்பது விஜய்யின் கண்டிஷன். ஏனெனில், இதே போல் 'வாரிசு' படம் வெளியாவதற்கு முன்பு "லியோ' பட பூஜை நடந்தது. அதில் ப்ரியா ஆனந்த், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டது வெளியில் கசிந்து விட்டது. இதனால் "வாரிசு' படத்தை விட "லியோ' படத்தின் பேச்சு அதிகமாகிவிட்டது. அதனால் வெங்கட்பிரபு இயக்கும் படத்தின் பூஜை "லியோ' படத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தி விடாதவாறு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். .

பொங்கிய பிரியங்கா!

ss

கோலிவுட்டில் அறிமுகமாகி, பாலிவுட்டில் பிரபல மாகி தற்போது ஹாலிவுட்டில் செட்டிலாகியுள்ளார் பிரியங்கா சோப்ரா. அண்மைக் காலமாக தனது திரைப் பயணத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை அவ்வப் போது வெளிப்படையாக பேசிவருகிறார். அந்த வகையில் சமீபத்திய நேர்காணலில் பேசிய பிரியங்கா சோப்ரா, "நான் நடிக்க வந்த புதிதில் 2002-2003 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ரகசிய ஏஜெண்ட் டாக ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வந்தேன். அப்போது ஒரு காட்சியில் ஒரு ஆணை வசியம் செய்யவேண்டும். அவரை மயக்கும் அதே சமயத் தில், என் ஆடையை கழற்ற வேண் டும். அதனால் ஸ்கின் ட்ரெஸ் அணிந்து கொண்டு நடிப்பதாகச் சொன்னேன். ஆனால் அந்த இயக்குநர் ஸ்கின் ட்ரெஸ் இல் லாமல் உள்ளாடை தெரியும் படி நடிக்க வற்புறுத்தினார். இதை அவர் என்னிடம் சொல்லாமல், என் எதிரில் இருந்த ஒப்பனையாளரி டம் சொன்னார். இது ஒரு மனிதாபிமானமற்ற தரு ணம்'' என தனது மனக் குமுறல்களை வெளிப் படுத்தியுள்ளார்.

-கவிதாசன் ஜெ.

nkn310523
இதையும் படியுங்கள்
Subscribe