டி.வி ரிலீஸ்!
"இயக்குநர் முத்தையா, கடைசியாக ஆர்யாவை வைத்து காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கியிருந் தார். இந்தப் படம் சரியாகப் போகாததால் தொடர்ச்சியாக பெரிய ஹீரோவுடன் அவரால் பயணிக்க முடியவில்லை. இதனால் தனது மகனை வைத்து ஒரு படம் ஆரம் பித்தார். அதன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதையடுத்து அவரே ஹீரோவாக நடிக்கும் முயற்சிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இதனிடையே புது முயற்சியாக அவரது பாணியிலிருந்து விலகி, வித்தியாசமான ஒரு கதைக்களத்தை கையில் எடுத்திருக்கிறார். இதை பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என பட அறிவிப்பை படப்பிடிப்பு முடிந்ததும் வெளியிட லாம் என முடிவெடுத் துள்ளார். அதன்படி படத்தின் படப் பிடிப்பை சமீபத்தில் தொடங்கி முழு வீச்சில் நடத்தி வருகிறார். இதில் கதாநாயகனாக அர
டி.வி ரிலீஸ்!
"இயக்குநர் முத்தையா, கடைசியாக ஆர்யாவை வைத்து காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கியிருந் தார். இந்தப் படம் சரியாகப் போகாததால் தொடர்ச்சியாக பெரிய ஹீரோவுடன் அவரால் பயணிக்க முடியவில்லை. இதனால் தனது மகனை வைத்து ஒரு படம் ஆரம் பித்தார். அதன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதையடுத்து அவரே ஹீரோவாக நடிக்கும் முயற்சிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இதனிடையே புது முயற்சியாக அவரது பாணியிலிருந்து விலகி, வித்தியாசமான ஒரு கதைக்களத்தை கையில் எடுத்திருக்கிறார். இதை பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என பட அறிவிப்பை படப்பிடிப்பு முடிந்ததும் வெளியிட லாம் என முடிவெடுத் துள்ளார். அதன்படி படத்தின் படப் பிடிப்பை சமீபத்தில் தொடங்கி முழு வீச்சில் நடத்தி வருகிறார். இதில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வருகிறார். இந்தப் படத்தை விக்ரம் பிரபுவை வைத்து அவர் இயக்கிய "புலிக்குத்தி பாண்டி' படத்தை போல், திரையரங்கிலும் அல்லாமல் ஓ.டி.டி.யிலும் அல்லாமல் நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.
டாப் ஜோடி!
மலையாளத்தில் முன்னணி மற்றும் மூத்த நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி - மோகன்லால் இருவரும் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘பஜ்ங்ய்ற்ஹ்:20’ படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது 16 ஆண்டு களுக்கு பிறகு கைகோர்த்துள்ளனர். இந்தப் படத்தை "டேக் ஆஃப்', "சி யூ சூன்', "மாலிக்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கவிருக்கிறார். படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவிருக்கிறது. அதற்காக தற்போது லொகேஷன் பார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. பெரும் பொருட் செலவில் இந்தப் படம் உரு வாகும் நிலையில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெற்றிமாறனின் ஹீரோ!
காமெடி நடிகர் டூ கதையின் நாயகனாக தன்னை மெருகேற்றிக் கொண்ட சூரி, அதற்கு முக்கிய காரணமாக அமைந்த வெற்றிமாறன் எப்போது அழைத்தாலும் போய்விடும் மன நிலையில் உள்ளார். "விடுதலை பாகம் 2'-க்கு பிறகு மீண்டும் அவருடன் கூட்டணி வைக்கவுள்ளார். அதாவது வெற்றிமாறன் கதையில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை விடுதலை பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இயக்கவுள்ளார். இவர் தயாரிப்பது மட்டுமல்லாமல் "முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். இதையடுத்து இரண்டாவது படமாக சூரி படத்தை இயக்கவிருக்கிறார். அதோடு தயாரிக்கவும் செய்கிறார். இது குறித்தான பேச்சு வார்த்தை "விடுதலை பாகம் 1' அப்போதே நடந்து முடிந்துவிட்டது. அதன்பிறகு அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருந்த நிலையில் தற்போது எழுத்துப்பூர்வ மாக உறுதி செய்யப்பட்டுள்ளது. "விடுதலை பாகம் 2'-வின் ரிலீஸுக்குப் பிறகு அறிவிப்பு வெளியாகவுள் ளது. சூரி தற்போது "விலங்கு' வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதால் அதை முடித்துவிட்டு எல்ரெட் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கெனவே வெற்றிமாறன் கதையில் சூரி நடித்த "கருடன்' படம் பி மற்றும் சி சென்டரில் நன்கு கல்லா கட்டியது குறிப்பிடத்தக்கது.
டபுள் சந்தோஷம்!
கீர்த்தி சுரேஷ் தற்போது திருமணத் துக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது. அடுத்த மாதம் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்ற தொழிலதிபரை கரம் பிடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது. டிசம்பர் மாதத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் கீர்த்தி சுரேஷ், திரை வாழ்க்கையிலும் அடுத்த கட்டம் செல்லவுள்ளார். இதுவரை தென்னிந்திய சினிமாவில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர், முதன்முதலாக பாலிவுட்டில் நடித்துள்ள "பேபி ஜான்' படமும் டிசம்பர் 25ஆம் தேதி வெளி யாகிறது. இரு முக்கியமான நிகழ்வுகளும் ஒரே மாதத்தில் நடக்கவிருப்பதால் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், நிச்சயம் இரண்டும் வெற்றிகரமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு வழக்கம் போல் எந்தத் தடையும் இல்லாமல் திரைத்துறையில் பயணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சில மாதங்கள் மட்டும் நடிப்பிற்கு பிரேக் விடுக்க முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படு கிறது.
-கவிதாசன் ஜெ.