எல்லாமே புதுசு!
கார்த்தி நடிப்பில் "சர்தார் 2' படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் ஆரம் பிக்கப்பட்டது. அதில் எதிர்பாராதவிதமாக சண்டை கலைஞர் ஏழுமலை, 20 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள் ளார். இந்த சம்பவம் கோலிவுட்டில் அதிர்ச்சி யை ஏற்படுத்த... படப் பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்பு பாது காப்பு வசதியோடு தற் போது நடந்து வருகிறது. முதல் பாகத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந் தார். இரண்டாம் பாகத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசை யமைக்கிறார். முதல் பாகத் தில் நடித்த ராஷிகண்ணா, லைலா, ரஜிஷா விஜயன் ஆகியோர் இதில் ந
எல்லாமே புதுசு!
கார்த்தி நடிப்பில் "சர்தார் 2' படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் ஆரம் பிக்கப்பட்டது. அதில் எதிர்பாராதவிதமாக சண்டை கலைஞர் ஏழுமலை, 20 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள் ளார். இந்த சம்பவம் கோலிவுட்டில் அதிர்ச்சி யை ஏற்படுத்த... படப் பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்பு பாது காப்பு வசதியோடு தற் போது நடந்து வருகிறது. முதல் பாகத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந் தார். இரண்டாம் பாகத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசை யமைக்கிறார். முதல் பாகத் தில் நடித்த ராஷிகண்ணா, லைலா, ரஜிஷா விஜயன் ஆகியோர் இதில் நடிக்க வில்லை எனவும், அவர்களுக் குப் பதிலாக மாளவிகா மோக னன், பிரியங்கா மோகன், கன்னட நடிகை ஆஷிகா ரங்க நாத் நடிக்கவுள்ளார்கள். ஆஷிகா ரங்கநாத், அதர்வா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான "பட்டத்து அரசன்' படத்தில் நடித்திருந்தவர்.
கேத்ரின் பச்சைக்கொடி!
"மெட்ராஸ்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. தொடர்ந்து "கதகளி', "கணிதன்', "கடம்பன்' என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு பக்கம் சென்ற கேத்ரின் தெரசாவுக்கு அங்கும் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. இந்தச் சூழலில் தமிழில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். சுந்தர்.சி இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய "கலகலப்பு 2' படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.
மீண்டும் ரம்பா!
90-களில் தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் நடிகையாக வலம்வந்தவர் ரம்பா. 2010ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு கனடாவில் செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ரம்பா, சமீபகாலமாக லைம்லைட்டில் இருந்து வருகிறார். சமீபத்தில்கூட விஜய்யை தனது குடும்பத்துடன் சந்தித்தார். இதனால் அவர் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் பரவிய நிலையில்... கெஸ்ட் ரோல் என இல்லாமல் படம் முழுக்க வரும் அழுத்தமான கதாபாத்திரம் என்றால் நடிக்க ரெடி என்கிறார் ரம்பா. இதைக் கேட்ட கோலிவுட் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ரம்பாவை நடிக்க வைக்க ஆர்வம் காட்டுகிறார்களாம். இதனால் பல வருடம் கழித்து ரம்பாவை திரையில் பார்க்க ரசிகர்களும் ஆர்வமாய் உள்ளனர்.
அமீர் மகாராஜா!
வழக்கமான கதையை வித்தியாசமான திரைக்கதைமூலம் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தளித்த விஜய்சேதுபதியின் 50வது படமான "மகாராஜா', விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் அனுராக் கஷ்யப் நடித்திருந்ததால் பாலிவுட்டிலும் அது பலரது கவனத்தை ஈர்த் தது. இதனால் பல்வேறு மொழிகளில் ரீமேக் காகவுள்ளது "மகாராஜா. அந்த வகையில் முதலில் இந்தியில் ரீமேக்காகிறது. அதன் உரிமையை முன்னணி நடிகரான அமீர் கான் வாங்கியிருக்கிறார். விஜய்சேதுபதி கதா பாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப் போது அவர் "கல்யாண சமையல் சாதம்' படத் தை இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத் தில் ஒரு படம் நடித்துவருகிறார். இந்த படத் தை முடித்து விட்டு அடுத்ததாக உடனடியாக மகாராஜா படத்தை தொடங்க திட்டமிட் டுள்ளார்.
-கவிதாசன் ஜெ.