மேகா... ஆஹா!
கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என பேசப்பட்ட நடிகை மேகாஆகாஷ். ரஜினி படம், தனுஷ் படம், சிம்பு படம் என அடுத்தடுத்து நடித்திருந்தும், அவருக்கு பெரிதளவில் எதுவும் கைகொடுக்கவில்லை. தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகளும் வரவில்லை. இதனால் அப்செட்டில் இருந்து வந்த மேகாஆகாஷ், இப்போது உறுதியாக வெற்றிக்கனியை பறித்துவிடும் உற்சாகத்தில் உள்ளார். கடைசியாக அவர் நடித்த "சபாநாயகன்' படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக பிப்ரவரி 2-ல் வெளியாகவுள்ள "வடக்குபட்டி ராமசாமி' படமும் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இதனிடையே அவர் நடித்துள்ள "மழை பிடிக்காத மனிதன்' படமும் ரிலீஸுக்குத் தயாராகிவருவதால், கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார் மேகா ஆகாஷ்.
பழைய ஃபார்முலா!
"சிவா மனசுல சக்தி', "பாஸ் என்கிற பாஸ்கரன்', "ஒரு கல் ஒரு கண்ணாடி' என காமெடி ஜானரில் கலக்கியவர் இயக்குநர் எம்.ராஜேஷ். ஆனால் தொடர்ந்து அதே ஃபார்முலாவில் படம் எடுத்து வந்ததால் அது பெரிதாக் க்ளிக் ஆகவில்லை. எனவே ராஜேஷ், தனது ஃபார்முலாவில் இருந்து கொஞ்சம் ரூட்டை மாற்றி த்ரில்லர் ஜானரில் விக்டிம் என்ற ஆந்தாலஜி படத்தில் ஒரு தொகுப்பும், சைன்ஸ் ஃபிக்சன் ஜானரில் "மை 3' என்ற வெப் சீரீஸையும் இயக்கினார். அதுவும் சொல்லிகொள்ளும்படியான வெற்றியை அவருக்கு பெற்றுத் தரவில்லை. இதனால் வருத்தத்தில் இருக்கும் ராஜேஷ், இப்போது ஜெயம்ரவியை வைத்து "பிரதர்' என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்துவரு கிறார். இது அண்ணன்-தங்கை சென்டிமெண்ட் என கூறப்படுகிறது. இதை முடித்துவிட்டு, அடுத்ததாக மீண்டும் தனது வெற்றி ஃபார்முலாவான காமெடி ஜானருக்கே திரும்பியுள்ளார். அடுத்ததாக அதர்வாவை வைத்து முழுக்க, முழுக்க காமெடி கலந்த பொழுதுபோக்கு படம் ஒன்றை எடுக்க கமிட்டாகியுள்ளார். இதன் பணிகளைத் தொடங்கிய ராஜேஷ், தற்போது துணை நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது ஆஸ்தான ஃபார்முலா வெற்றி பெறும் என நம்புகிறார்.
நட்புக்காக!
"ஜப்பான்' படத்தை தொடர்ந்து நலன் குமாராசாமி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் கார்த்தி. படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், ‘"வா வாத்தியாரே'’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து "96' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க அரவிந்த்சாமியும் நடிக்கிறார். மேலும் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக சின்னத்திரை நடிகை சுவாதிகொண்டே நடிக்கிறார். ‘"மெய்யழகன்'’என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம், நட்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.
தியேட்டர் ஃபர்ஸ்ட்!
ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "சைரன்'. சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்தும் ப்ளான் பண்ணியபடி ரிலீஸ்பண்ண முடியவில்லை. ஓ.டி.டி. தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில்... "ஓ.டி.டி.யெல் லாம் இல்லை, அடுத்த மாதம் பிப்ரவரி யில் எப்படியாவது படத்தை தியேட் டர்களில் வெளியிட்டுவிட வேண்டும்' என கடுமையாக முயற்சித்து வருகிறதாம் தயாரிப்பு நிறுவனம்.
-கவிதாசன் ஜெ.