கங்கனா ஆதங்கம்!
சினிமா மட்டுமின்றி சமூக நிகழ்வுகள் குறித்த தகவல்களையும், சர்ச்சைக் கருத்துக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருபவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். அப்படிப்பட்டவர், குஜராத் பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது குறித்து எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. இதையடுத்து, "பில்கிஸ்பானு வாழ்க்கையை படமாக எடுக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?' என இணையவாசிகள் கேள்வி எழுப்ப... "பில்கிஸ்பானு கதையை படமாக எடுக்க விரும்புகிறேன். கதையும் தயார். 3 ஆண்டுகளாக இது குறித்த ஆய்வு செய்துள் ளேன். நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற நிறுவனங்கள் "நாங்கள் அரசியல் ரீதியிலான படங்களை எடுப்பதில்லை' என்று கூறிவிட்டன. "பா.ஜ.க. ஆதரவாளர் என்பதால் உங்களுடன் சேர்ந்து பணி யாற்ற முடியாது' என ஜியோ அறிவித்து விட்டது. எனக்
கங்கனா ஆதங்கம்!
சினிமா மட்டுமின்றி சமூக நிகழ்வுகள் குறித்த தகவல்களையும், சர்ச்சைக் கருத்துக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருபவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். அப்படிப்பட்டவர், குஜராத் பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது குறித்து எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. இதையடுத்து, "பில்கிஸ்பானு வாழ்க்கையை படமாக எடுக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?' என இணையவாசிகள் கேள்வி எழுப்ப... "பில்கிஸ்பானு கதையை படமாக எடுக்க விரும்புகிறேன். கதையும் தயார். 3 ஆண்டுகளாக இது குறித்த ஆய்வு செய்துள் ளேன். நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற நிறுவனங்கள் "நாங்கள் அரசியல் ரீதியிலான படங்களை எடுப்பதில்லை' என்று கூறிவிட்டன. "பா.ஜ.க. ஆதரவாளர் என்பதால் உங்களுடன் சேர்ந்து பணி யாற்ற முடியாது' என ஜியோ அறிவித்து விட்டது. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது?'' என்று ஆதங்கப்பட்டுள்ளார் கங்கனா.
அஜித் வருத்தம்!
மகிழ்திருமேனி இயக்கும் "விடாமுயற்சி' படத்தில் நடித்துவரும் அஜித் அதன் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இதை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட செலவில் தயாரிக்கிறது. இப் படத்தின் அலுவலக பூஜை கடந்த பொங்கலன்று சிம்பிளாக நடைபெற்றுள்ளது. அதனால் ஆரம்பகட்ட பணிகளில் பிஸியாக உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். துணிவு படத்தை தொடர்ந்து "விடாமுயற்சி' படத்தை ஆரம்பிக்க, கிட்டத்தட்ட ஒரு வருடம் அளவிற்கு இடைவெளி விழுந்துவிட்டதால் அஜித்திற்கு சின்ன மன வருத்தமாம். அதனால் அடுத்த படத்திற்கு அதைத் தொடராமல் இருக்க அஜித் முடிவெடுத்துள்ளாராம். அதனால்தான் "விடாமுயற்சி' படம் நடக்கும்போதே, ஆதிக் ரவிச்சந்திரனை அழைத்து உடனே பட வேலைகளை ஆரம்பிக்கச் சொல்லியுள்ளாராம். இதனிடையே விடாமுயற்சி படத்தை அஜித் பிறந்தநாளான மே 1 வெளியிட படக்குழு பிளான் போட்டுள்ளது.
சீமான் என்ட்ரி!
இயக்குநர் விக்னேஷ்சிவன், பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்.ஐ.சி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) படத்தை தொடங்கினார். அஜித் பட வாய்ப்பு நழுவிப்போனதால் இப்படத்தை எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என மும்முரமாக செயல்பட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். அதற்காக ஆர்டிஸ்ட்களையும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார். இதுவரையில் கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி, முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோரை கமிட் செய்து வைத்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானை தற்போது படத்திற்காக அணுகியுள்ளார். அரசியலில் தற்போது தீவிரமாக செயல்பட்டுக்கொண்டே அவ்வப்போது சினிமா விலும் கவனம் செலுத்திவரும் சீமான், விக்னேஷ்சிவன் அழைப்பிற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சீமான் நடிக்கவுள்ளாராம்.
வரவேற்கும் ஜோடி!
2019 ஆம் ஆண்டு வெளியான "தும்பா' படம் மூலம் சினிமா துறையில் காலடி வைத்தார் கீர்த்தி பாண்டியன். தொடர்ந்து 2021இல் "அன்பிற்கினியாள்', 2023 "கண்ணகி' ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த மூன்று படங்களுமே அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் தற்போது அவர் நடித்துள்ள "ப்ளூ ஸ்டார்' படம் வருகிற 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். காரணம், இப்படத்தில்தான் அசோக்செல்வனுடன் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகி அது திருமணத்தில் முடிந்ததாம். அதுபோல் அவருடன் இணைந்து நடித்த படமும் தனது கரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும் என நம்புகிறார். அசோக்செல்வனும் அவரது நம்பிக்கை வெற்றி பெறும் என அவரது நெருங்கிய வட்டாரங்களில் கூறி வருகிறார். ஜெய்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்க பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகிறது.
போலீஸ்காரர் மகள்!
கவனம் ஈர்த்த இயக்குனர் கணேஷ் கே.பாபு அடுத்ததாக இரண்டு படங்களை இயக்க கமிட்டானார். த்ருவ் விக்ரமை வைத்து ஒரு படமும், ஜீவாவை வைத்து ஒரு படமும் இயக்க கமிட்டான நிலையில்... ஜீவா படத்தைத்தான் தற்போது தொடங்கவுள்ளார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக தவ்தி ஜுவால் என்பவர் புக் செய்யப்பட்டுள்ளார். இவர் டி.ஜி.பி. சங்கர்ஜுவாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மாரி செல்வராஜ் லித்ருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகி யாக நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் முன்னரே வெளி யானது. ஆனால் இப்போது ஜீவாவுக்கு ஜோடியாக கோலிவுட்டில் களமிறங்கவுள்ளார்.
-கவிதாசன் ஜெ.