ஹீரோக்களுக்கு முன்னுரிமை!
தமிழ் நடிகைகளில் தற்போது படுபிசியாக வலம் வருபவர் த்ரிஷா. அஜித்துடன் அஜர்பைஜானில் "விடா முயற்சி' படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவரும் அவர், இதை முடித்து விட்டு மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் "ஐடென்டிட்டி' படத்தில் நடிக்கவுள்ளார். இதை யடுத்து மீண்டும் "விடாமுயற்சி' படத்தின் மூன்றாம்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். பின்பு தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படி சக்கரமாக சுழன்றுவரும் த்ரிஷா, கதை கேட்பதிலும் கவனம் செலுத்திவருகிறார். லீட் ரோலில் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு சிறிது பிரேக் போட்டுவிட்டு, முன்னணி ஹீரோ படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறாராம்.
தெலுங்கில் ஸ்ருதி!
ஸ்ருதிஹாசன், பிரபாஸின் "சலார்', "தி ஐ' என்ற ஹாலிவுட் படம் உள்ளிட்டவைகளை கைவசம் வைத்துள்ளார். இதில் "சலார்' படம் வருகிற 22ஆம் தேதி வெளியாகிறது. சமீபகாலமாக தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்திவரும் ஸ்ருதி ஹாசன், தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத் தில் கமிட்டாகியுள்ளார். ஆனால் இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் பட மாக்கப்படுகிறது. பான் இந்தியா படமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதிவிசேஷ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஷேன்யில்டியோ இயக்குகிறார்.
தேடுதல் வேட்டை!
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 68வது படத்திற்கு ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. ஏற்கனவே சென்னை, தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்த நிலையில் ஹைதராபாத்தை, முடித்துவிட்டு மீண்டும் சென்னை மற்றும் இலங்கை, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். இந்த நிலையில் இப்படத்தில் பாடகர் மற்றும் நடிகர் யுகேந்திரன் இணைந்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் கமிட்டாகியுள் ளார். இதனிடையே விஜய்யின் தங்கை கதாபாத்திரத்தில் இவானா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் தற்போது விலகியுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதில் ஒரு புதுமுகம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் பேய்!
கடந்த சில வருடங்களாக லாரன்ஸின் படங்கள் சரியாக போகவில்லை. அவர் இயக்கத்தில் நடித்ததும் மற்ற இயக்குநர்களின் இயக்கத்திலும் அவர் நடித்தது தோல்வியை சந்தித்தது. ஆனால் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அவரது நடிப்பிற்கும் நல்ல பெயர் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ராகவா லாரன்ஸ், மீண்டும் தனது பேய் சீரிஸின் கதையை கையில் எடுத்துள்ளார். வழக்கம்போல் இதை அவரே நடித்து இயக்கவும் திட்டமிட்டுள்ளார். கதை எழுதும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் ரத்னகுமார் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் பற்றிய அப்டேட்டுகள் இன்னும் வெளிவரவில்லை.
டைரக்டர் தனுஷ்!
தனுஷ், "ப.பாண்டி' மூலம் இயக்குநராக அறிமுகமான நிலையில் இரண்டாவது படமாக 'நான் ருத்ரன்' என்ற தலைப்பில் ஒரு படம் தொடங்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து, பின்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது தனது 50வது படத்தை இயக்கி, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது. இந்த நிலையில், தனுஷ் மீண்டும் மூன்றாவது முறையாக இயக்கம் பக்கம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திலும் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது. ஏற்கனவே சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் "தேரே இஷ்க் மெய்ன்' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள "கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் 2024 பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.
-கவிதாசன் ஜெ.