நடிகையின் வாழ்த்து!

cc

ஜியோபேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘"காதல்: தி கோர்'’ படம் பார்த்து, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டுள்ள பதிவில், ‘"மம்மூட்டி தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். வலி, தனிமை, பயம், அவர் எடுக்க வேண்டிய முடிவுகளின் கணம்' என்று... இப்படத்தின் ஒவ்வொரு பார்வையும் என்னை மிகவும் பாதித்தது. இரண்டாம் பாதியில் வரும் ‘"என்டே தெய்வமே'’ என்ற காட்சி, படத்தின் சிறப்பான ஒரு பகுதியாக இருந்தது. தியேட் டரில் ஒரு குழந்தையைப் போல் "ஓ'வென்று அழுதேன். ஜியோ பேபி'யின் ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. "ஓமனா' என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஜோதிகா நீண்ட நாட்களுக்கு எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்''’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வருத்தத்தில் வினோத்!

"துணிவு' படத்தைத் தொடர்ந்து கமலின் 233-வது படத்தில் கமிட்டானார் இயக்குநர் வினோத். ஆரம்பகட்டப் பணிகளும் விறுவிறுப்பாக தொடங்கியது. கமல் இப்படத்திற்காக துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டார். படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்ட நிலையில் கமலின் கால்ஷீட்டில் சிக்கல் ஏற்பட்டது. "இந்தியன் 2' படத்தில் நடித்து வந்த கமல், அடுத்து "இந்தியன் 3' என தொடர்ந்ததையடுத்து... அதற்காக கூடுதல் கால்ஷீட் கொடுக்க, அதன் படப்பிடிப்பு இன்னும் நீண்டு கொண்டு வருகிறது. இதனால் வினோத் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில் கமலின் 234வது படம் டேக்ஆஃப் ஆனது. அப்படத்திற்கான டைட்டில் ப்ரோமோ படப்பிடிப்பில் கமல் கலந்துகொண்டார். அந்த ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்க வினோத் படம் காணாமல் போனது. மேலும் பாலிவுட்டில் உருவாகும் "கல்கி 2898 ஏடி' படத்திற்கு டேட் கொடுத்து கமல் நடித்துவருகிறார். இது வினோத்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக் கிறதாம். அதோடு படப்பிடிப்பும் தாமதமாகி வருதால், கமலுடன் பேச்சுவார்த்தை நடத்த வினோத் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த சிக்கலுக்கான தீர்வை கமல் முடித்து, தனது அடுத்தடுத்த படங்களை பற்றிய தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படு கிறது.

சேரன் நம்பிக்கை!

கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரு படம் இயக்க வுள்ளார் சேரன். சத்யஜோதி தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இதனிடையே ‘"ஜர்னி'’ என்ற தலைப்பில் ஒரு வெப் சீரிஸ் இயக்கியிருந்தார். வெளிநாடு களிலும் இதன் படப்பிடிப்பு நடந்தது. இது தற்போது அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இதில் சேரன் விவசாயம் பற்றி அதிகம் பேசியிருக்கிறார். அது நன்றாக வந்துள்ளதால் நல்ல வரவேற்பு பெறும் என நம்புகிறார். சோனி லைவ் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளது.

குழப்பத்தில் வெற்றிமாறன்!

அடுத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஓ.கே. சொல்லியுள்ளார் அஜித். இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இதில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்களாம். அதனால் எல்ரெட் குமாருக்கு அடுத்த படத்தை தயாரிக்க டேட் கொடுக்கவுள்ளதாக அஜித் முடிவெடுத்துள்ளார். மேலும் இப்படத்திற்கான இயக்குநரை தயாரிப்பாளரே தேர்வு செய்ய ஆஃபரும் வழங்கியுள்ளார். எல்ரெட் குமார் தற்போது "விடுதலை 2' படம் தயாரித்து வருவதால், வெற்றிமாறனிடம் இந்த ஆஃபரை கூறியுள்ளார். இதைக்கேட்ட வெற்றிமாறன், உடனே அஜித்தை சந்திக்க கேட்டுள்ளார். அதன்படி அஜித்தை சந்தித்த வெற்றிமாறன், ஒரு லைனை சொல்லியுள்ளார். அது அஜித்திற்கு பிடித்துப்போக... முழு கதையை ரெடிபண்ணச் சொல்லியுள்ளார் அஜித். ஆனால் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவை வைத்து "வாடிவாசல்' எடுக்க திட்டமிட்டிருந்தார். இந்த சூழலில் இப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட... தற்போது என்ன செய்வதென்று யோசித்து வருகிறார்.

டப்பிங் தலைவலி!

ddf

Advertisment

பா.ரஞ்சித் -விக்ரம் கூட்டணியில் உருவாகிவரும் "தங்கலான்' படத்தை பெரிதும் நம்பியுள்ளார் மாளவிகா மோகனன். சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார். மாளவிகாவிற்கு பெரும் தலைவலியாக அமைவது டப்பிங் பணிதான். இதை அவரே வெளிப்படையாக சொல்லிவரும் நிலையில்... "தங்கலான்' படத்தில் சொந்த குரலில் பேசிவருகிறார். முதல்முறையாக அவர் நடித்த தமிழ் படங்களில் டப்பிங் பேசுகிறார். இதனால் டப்பிங்கிற்கே நிறைய டைம் எடுத்துக்கொள்கிறார். இருப்பினும் எந்தப் படத்திற்கும் இல்லாத அலவிற்கு இந்தப்படத்தில் கடும் உழைப்பைக் கொடுத்துவருவதால், நிச்சயம் தனக்கு ஒரு திருப்புமுனை படமாக அமையும் என ஆசையாக உள்ளார். விக்ரம், மாளவிகா மோகனனை தவிர்த்து பார்வதி, பசுபதி என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் தயரிக்கும் இப்படம் ஜனவரி 26ல் திரைக்கு வருகிறது.

-கவிதாசன் ஜெ.