வீரப்பன் பேசுகிறேன்!
வீரப்பனின் வாழ்க்கையை பற்றிப் பல்வேறு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர் வந்துள்ளது. ஆனால் அவரே தனது வாழ்க்கை யில் நடந்ததை விவரிக்கும் விதமாக ஒரு டாக்குமெண்டரி சீரிஸ் உருவாகியுள்ளது. ‘கூஸ் முனுசாமி வீரப்பன்... (Koose Munisamy Veerappan) இந்த சீரிஸின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ட்ரைலரில், வீரப்பன் பேசும், "என்ன நடந்ததுனு என்னுடைய வாழ்க்கை வரலாறை அப்படியே எடுத்து சொல்றேன். தப்பு என்னுடையதா இல்ல அரசாங்கத்துதா...''’எனும் ஒரிஜினல் வீடியோ இடம்பெற்றுள்ளது எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதை தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார்.
வீரப்பன் பேசுகிறேன்!
வீரப்பனின் வாழ்க்கையை பற்றிப் பல்வேறு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர் வந்துள்ளது. ஆனால் அவரே தனது வாழ்க்கை யில் நடந்ததை விவரிக்கும் விதமாக ஒரு டாக்குமெண்டரி சீரிஸ் உருவாகியுள்ளது. ‘கூஸ் முனுசாமி வீரப்பன்... (Koose Munisamy Veerappan) இந்த சீரிஸின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ட்ரைலரில், வீரப்பன் பேசும், "என்ன நடந்ததுனு என்னுடைய வாழ்க்கை வரலாறை அப்படியே எடுத்து சொல்றேன். தப்பு என்னுடையதா இல்ல அரசாங்கத்துதா...''’எனும் ஒரிஜினல் வீடியோ இடம்பெற்றுள்ளது எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதை தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஷரத்ஜோதி இயக்கியுள்ளார். அவரோடு ஜெயச்சந்திர ஹாஷ்மியும், வசந்த் பாலகிருஷ்ணனும் இணைந்து கதை எழுதியுள்ளனர். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற் கொண்டுள்ளார். இத்தொடரில், நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், வழக்கறிஞர் ப.பா.மோகன், சுப்பு என்ற சுப்ரமணி யன், அலெக்சாண்டர் ஐ.பி.எஸ்., நடிகை ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன்குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப் பனை பற்றிய அனுபவங்களையும், அவர்களது கருத்து களையும் பகிர்கின்றனர். இந்த சீரிஸ் டிசம்பர் 8ஆம் தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பாக வுள்ளது.
த்ரிஷா சீசன்!
த்ரிஷாவின் மார்க்கெட் தற்போது பீக்கில் இருக்கும் நிலையில் பெரிய ஹீரோக்களின் படங்களில் அவரது பெயர் கட்டாயமாக இடம் பெறுகிறது. அந்த வகையில் விஜய்யின் "லியோ' படத்தை தொடர்ந்து அஜித்தின் ‘"விடாமுயற்சி'’ படத்தில் நடித்து வருகிறார். கமலின் ‘"தக் லைஃப்'’ படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த வரிசையில் தற்போது இன்னொரு டாப் ஹீரோ படத்தில் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது. அது அல்லு அர்ஜுன் படம் என்று கூறப்படுகிறது. "புஷ்பா 2' படத்தில் நடித்துவரும் அல்லு அர்ஜுன் அடுத்ததாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கதில் நான்காவது முறையாக நடிக்கவுள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக "அலா வைகுண்டபுரம்' படத்தில் நடித்த நிலையில் அது நல்ல வரவேற்பு பெற்றது. அதை பூர்த்தி செய்யும் வகையில் த்ரிஷா பொருத்தமாக இருப்பதாக படக்குழு நினைக்கிறது. அவர்களின் எண்ணத்தை புரிந்துகொண்ட த்ரிஷா, அவர்களுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.
கீர்த்தி என்ட்ரி!
"தெறி' பட இந்தி ரீமேக்கில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதையடுத்து மீண்டும் அவர் இந்தியில் ஒரு புராஜக்ட்டில் கையெழுத்திட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ், ‘"அக்கா'’என்ற தலைப்பில் ஒரு வெப் தொடர் தயாரிக் கிறது. இதை அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார். இதில் இரண்டு பெண் முதன்மை கதாபாத்திரம் இருக்கும் நிலையில், அதில் ஒன்றில்தான் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். மற்றொரு கதபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடிக்கிறார். பீரியட் த்ரில்லர் ஜானரில் இத்தொடர் உருவாகிறது.
டைரக்ஷன் தேடல்!
கௌதம் மேனன் "துருவ நட்சத்திரம்' படத்தை தொடர்ந்து முழு கவனத்தையும் இயக்கத்தில் செலுத்த முடிவெடுத்துள்ளார். அதற்காக பல்வேறு நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். வடிவேலுவை ஹீரோவாக வைத்து ஒரு படம் தொடங்கத் திட்டமிட்டார். பின்பு "துருவ நட்சத்திரம் பார்ட் 2' எடுக்க விக்ரமிடம் பேசினார். இது எதுவுமே இப்போதைக்கு டேக் ஆஃப் ஆகவில்லை. இந்த சூழலில் மீண்டும் சூர்யாவை சந்தித்து ஒரு படத்திற்காக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். சூர்யாவும் செவி சாய்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் அந்த பட ஸ்கிரிப்டிலும் நேரம் ஒதுக்கி வருகிறார் கௌதம் மேனன்.