வில்லனுக்கு வெயிட்டிங்!
விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான "லியோ' படம் வசூல் ரீதியாக நல்ல வர வேற்பைப் பெற்று, சாதனை படைத்து வருகிறது. இதனால் படக்குழு ஹேப்பி மோடில் இருக்கிறது. இருப்பினும் சில நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்த தால் அதை அடுத்த படத் தில் சரி செய்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம் லோகேஷ். ரஜினியின் 171வது படத்தை அவர் இயக்கவுள்ள நிலையில் தற்போது அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணி களை தொடங்கிவிட் டார். தனது இயக்குநர் டீமுடன் ஸ்க்ரிப்ட் பணிகளிலும் நடிகர் கள் தேர்வுக்கான பேச்சுகளிலும் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த டிஸ்கஷனில் வில் லன் பற்றிய பேச்சுகள் எழ, அதற்கு நிறைய முன்னணி ஹீரோக்களின் பெயர்களை யோ சித்து வைத்துள்ள னர். இறுதியாக பிரித்விராஜ் பொருத்தமாக இருப்
வில்லனுக்கு வெயிட்டிங்!
விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான "லியோ' படம் வசூல் ரீதியாக நல்ல வர வேற்பைப் பெற்று, சாதனை படைத்து வருகிறது. இதனால் படக்குழு ஹேப்பி மோடில் இருக்கிறது. இருப்பினும் சில நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்த தால் அதை அடுத்த படத் தில் சரி செய்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம் லோகேஷ். ரஜினியின் 171வது படத்தை அவர் இயக்கவுள்ள நிலையில் தற்போது அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணி களை தொடங்கிவிட் டார். தனது இயக்குநர் டீமுடன் ஸ்க்ரிப்ட் பணிகளிலும் நடிகர் கள் தேர்வுக்கான பேச்சுகளிலும் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த டிஸ்கஷனில் வில் லன் பற்றிய பேச்சுகள் எழ, அதற்கு நிறைய முன்னணி ஹீரோக்களின் பெயர்களை யோ சித்து வைத்துள்ள னர். இறுதியாக பிரித்விராஜ் பொருத்தமாக இருப்பதாக முடிவெடுத்து அவரிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்துள் ளார்களாம் லோகேஷ் அன்ட் டீம். ரஜினி படம் என்பதால் அவரிடம் எப்படியும் க்ரீன் சிக்னல் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறாராம் லோகேஷ்.
தீரன் 2
"துணிவு' படத்திற்குப் பிறகு கமலை இயக்க கமிட்டான அ.வினோத், அதன் படப்பிடிப்பைத் தொடங்க தயாராகிவருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கத் திட்டமிட்டுள்ளாராம் வினோத். இந்த படம் இவர்கள் கூட்டணியில் வெளியான "தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமெனக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கார்த்தி, தனது 25வது படமான "ஜப்பான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது. இப்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடாத படத்தில் நடித்துவருகிறார். மேலும் "96' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் ஒரு படமும் ஓ.கே. சொல்லியுள்ளார். இதனிடையே தனது திரைப்பயணத்தில் இரண்டாம் பாகத்திலும் கவனம் செலுத்திவரும் கார்த்தி, ஏற்கனவே "சர்தார் 2', "கைதி 2' என கைவசம் வைத்துள்ள நிலையில் அந்த லிஸ்ட்டில் தற்போது புதிதாக "தீரன் 2'வையும் இணைத்துள்ளதாகத் தெரிகிறது.
இயக்குநர் அவதாரம்
ஹீரோவாக பிரபலமாகி வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்து மீண்டும் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தார் அரவிந்த்சாமி. ஹீரோவாக அவர் நடித்த "நரகாசூரன்', "கள்ளபார்ட்', "சதுரங்க வேட்டை 2' உள்ளிட்ட படங்கள் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்த நிலையில் அரவிந்த்சாமி தற்போது இயக்குநராக அவதாரமெடுக்கவுள்ளார். இது அவரது நீண்ட நாள் கனவாம். அதனால் சத்தமில்லாமல் அதன் பணிகளை மேற்கொண்டு வந்தார். இப்போது அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்தகட்டமாக ஹீரோவை தேர்ந்தெடுக்க பல நடிகர்களிடம் கதை கூறி வந்தார் அரவிந்த் சாமி. அந்த வகையில் பகத்ஃபாசிலிடமும் கதையை கூறியுள்ளார். கதையைக் கேட்ட அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டார். இந்தப்படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் நேரடியாக வெளியிட திட்டமாம்.
பொறுமையாக ஓ.கே.
கே.ஜி.எஃப். படம் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி, தமிழில் விக்ரமுடன் "கோப்ரா' படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களைத் தவிர்த்து வேறெந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் ஸ்ரீநிதி ஷெட்டி. அவசரப்படாமல் கதைத் தேர்வில் கவனம் செலுத்தி, தனது கதாபாத்திரத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை ஆராய்ந்துதான் பொறுமையாக ஓ.கே. சொல்வாராம். 4 வருடத்தில் மொத்தம் 3 படங்களே நடித்துள்ளதற் கும் அதுதான் காரணமாம். இப்படி கண்டிஷனாக இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி, தற்போது சேரன் இயக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதால், உடனே ஓகே சொல்லிவிட்டார். மேலும் கன்னட முன்னணி நடிகர் கிச்சாசுதீப் ஹீரோ என்பதால் இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என பச்சைக்கொடி காட்டிவிட்டார். இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் படமாக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-கவிதாசன் ஜெ.