டூரிங் டாக்கீஸ்! அப்பா பொண்ணு!

ss

அப்பா பொண்ணு!

cinema

நடிப்பதற்கு முன்பு பாடகராக பல பாடல்களைப் பாடியுள்ள ஸ்ருதிஹாசன், இசை யமைப்பாளராக கமல் நடித்த "உன்னைப்போல் ஒருவன்' படத்தில் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு எந்த படத்திலும் இசையமைப்பாளராக பணி யாற்றாத நிலையில் தற்போது மீண்டும் இசைக்கு முக்கியத் துவம் தந்து அதன் பக்கம் திரும்பியுள்ளார். அதாவது கமலுடன் இணைந்து சுயாதீன இசை ஆல்பம் ஒன்றில் பணி யாற்றவுள்ளார். இதனை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் பணியாற்றவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர் பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கு முன்பு "எட்ஜ்', "ஷீ இஸ் எ ஹீரோ' என்ற 2 சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

செலக்டிவ் ப்ரியாமணி!

vv

சமீபகாலமாக கதா நாயகியை தவிர்த்து முக்கிய கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரியாமணி. அப்படி ஷாரு

அப்பா பொண்ணு!

cinema

நடிப்பதற்கு முன்பு பாடகராக பல பாடல்களைப் பாடியுள்ள ஸ்ருதிஹாசன், இசை யமைப்பாளராக கமல் நடித்த "உன்னைப்போல் ஒருவன்' படத்தில் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு எந்த படத்திலும் இசையமைப்பாளராக பணி யாற்றாத நிலையில் தற்போது மீண்டும் இசைக்கு முக்கியத் துவம் தந்து அதன் பக்கம் திரும்பியுள்ளார். அதாவது கமலுடன் இணைந்து சுயாதீன இசை ஆல்பம் ஒன்றில் பணி யாற்றவுள்ளார். இதனை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் பணியாற்றவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர் பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கு முன்பு "எட்ஜ்', "ஷீ இஸ் எ ஹீரோ' என்ற 2 சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

செலக்டிவ் ப்ரியாமணி!

vv

சமீபகாலமாக கதா நாயகியை தவிர்த்து முக்கிய கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரியாமணி. அப்படி ஷாருக்கானுடன் அவர் நடித்த ஜவான், வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் கதாநாயகி பட வாய்ப்பும் அவருக்கு வரிசை கட்ட, அதில் எந்த அளவுக்கு கதைக்கு முக்கியமாகப் படுகிறது என ஆய்வு செய்துதான் கதையை தேர்வு செய்கிறாராம். அப்படி தேர்வு செய்து தற்போது இரண்டு புதிய படங்களில் நடிக்கிறார். இந்தியில் ஆதித்யாதார் இயக்கத்தில் யாமிகவுதம், நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பொலிட்டிகல் த்ரில்லர் ஜானரில் ஒரு படம் உருவாகிறது. அதில் முதன்மை கதா பாத்திரத்துக்கு சமமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கோர்ட்ரூம் ட்ராமா ஜானரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "நெரு' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

பிஸி பிரியங்கா!

தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு வலம் வந்துகொண்டிருப்பவர் பிரியங்கா மோகன். தொடர்ச்சியாக தமிழில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் தனுஷின் "கேப்டன் மில்லர்' மற்றும் ஜெயம் ரவியின் "பிரதர்', தெலுங்கில் பவன்கல்யாணின் "ஓஜி' உள்ளிட்ட படங்களும் அடங்கும். மேலும், விஜய்க்கு ஜோடியாக வெங்கட்பிரபு இயக்கும் படத்திலும் கமிட்டாகியுள்ளாராம். இந்தநிலையில் "டாக்டர்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் நெல்சனுடன் கைகோர்த்துள்ளார். ஆனால் அவர் இயக்கவில்லை. தயாரிப்பாளராக களமிறங்குகிறார். இப்படத்தை அவரின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்க, ஹீரோவாக கவின் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத் தில்தான் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நியூ லுக் சிம்பு!

கமல் தயாரிப்பில், தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்திற்காக கமிட் டாகியுள்ள சிம்பு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வரலாற்றுப் பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகும் இந்த படத்திற்காக தாய்லாந்து சென்று தற்காப்புக் கலை கற்றுக்கொண்டுள்ளார். மேலும் ஹேர்ஸ்டைல் மற்றும் லுக்கையும் மாற்றியுள்ளார். இந்த நிலையில் அவரது கதாபாத்திர டெஸ்ட் லுக் சமீபத்தில் சத்தம் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. அவரது கெட்டப் வெளியில் லீக்காகாமல் இருப்பதற்காக ஏகப்பட்ட கட்டுப்பாட்டுடன் இந்த ரகசிய ஃபோட்டோ ஷூட் நடந்துள்ளது. படத்தின் ப்ரீலிப்ரொடக் ஷன் பணிகள் பரபரவென நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நவம்பரின் இரண்டாம் வார தொடக்கத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தனுஷ் 50

தனுஷ் தற்போது தனது 50-வது படத்தில் பணியாற்றிவருகிறார். வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், எஸ்.ஜே. சூர்யா, துஷாராவிஜயன், சந்தீப்கிஷன், அபர்ணா பாலமுரளி என ஏகப்பட்ட பட்டாளம் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாரும் இணைந்தார். அவர் எஸ்.ஜே.சூர்யா வுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் தற்போது படத்தில் இணைந்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா மட்டுமல்லாமல் அவரும் வில்லன் கதாபாத் திரத்தில் நடிக்கிறார். மேலும் செல்வராக வன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது கதாபாத்திரம் பற்றிய ருசிகர தகவல் வெளி யாகியுள்ளது. செல்வராகவன் குடும்பத்துக்கும் எஸ்.ஜே.சூர்யா குடும்பத்துக்கும் இடையே நடக்கும் ரிவெஞ்ச் ட்ராமாதான் இப்படத்தின் ஒன் லைன் என்றும், அவர்களைச் சுற்றித் தான் கதை நகர்வதாகவும் முணுமுணுக்கப்படுகிறது.

-கவிதாசன் ஜெ.

nkn300923
இதையும் படியுங்கள்
Subscribe