நட்புக்காக துல்கர்!
இந்திய சினிமாவில் தற் போது பெரும் பட்ஜெட்டில் உருவாகிவரும் படம் "கல்கி 2898 ஏடி'. ரூ.600 கோடி பொருட் செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. நாக்அஸ்வின் இயக்கும் இப்படத்தை அஸ்வின்தத் தயாரிக்க, சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார். அமிதாப்பச்சன், கமல் ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே என முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருவதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து முன்னணி பிரபலங்களை படக்குழு புக் செய்து வருகிறது. அந்த வகையில் துல்கர் சல்மான் சமீபத்தில் படக்குழுவில் இணைந்துள் ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே நாக் அஸ்வின் இயக்கிய 'நடி கையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக துல்கர் சல்மான் நடித்திருந்தார். அந்த நட்பின் காரணமாக இயக்குநர் துல்கரை அழைக்க, பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள், முக்கிய கதாபாத்திரம் என்பதால் ஓகே சொல்லிவிட்டாராம். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 12 ஆம் தேதி பான் இந்தியா படமாகத் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகவுள்ளது.
மீண்டும் டபுள்!
லோகேஷ்கனகராஜ் இயக்கும் "லியோ' படத்தில் இரண்டு கெட்டப்பில் நடித்து முடித்துள்ள விஜய், அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் நடிக்கவுள்ள நிலையில்... படத்தின் பூஜையை செப்டம்பரில் நடத்தவுள்ளார்கள். பின்பு படப்பிடிப்பை "லியோ' படம் ரிலீஸாகும் அதே மாதமான அக்டோபரில் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். ஏற்கனவே ஜோதிகாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் அது சுமுகமாக முடிந்துள்ளது. அதற்கான கால்ஷீட்டையும் கொடுத்துள்ளார். அக்டோபரில் நடக்கும் படப்பிடிப்பில் ஜோதிகாவும் கலந்துகொள்கிறார். லியோ படம் வெளியாவதற்கு முன்பே தொடர்ந்து விஜய்லி68 படத்தின் தகவல்கள் வந்துகொண்டிருக்கையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விஜய், இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
வி.சே. ஆர்வம்!
விஜய்யை இயக்கிய கையோடு ரஜினியை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். லியோ பட வேலைகளைக் கவனித்துக்கொண்டே ரஜினி பட வேலை களையும் நேரம் கிடைக்கும்பொழுது கவனிக்கிறாராம். இதையறிந்த பலரும் லோகேஷுக்கு அழைப்பு விடுத்து வாய்ப்புக் கேட்டு வருகின்றனர். ரஜினியின் கடைசி படம் என முணுமுணுக்கப்படும் சூழலில், முன்னணி பிரபலங்களும் தாமாகவே வந்து நடிப்பதாகவும் சொல்கின்றனர். அந்த லிஸ்டில் விஜய்சேதுபதியும் ஒருவர். லோகேஷுக்கு அழைப்பு விடுத்து, "இப்படத்தின் தான் நடிக்க வேண்டும்' என அன்பு கட்டளை போட்டுள்ளார். அதை ஏற்றுக் கொண்ட லோகேஷ், எந்த கதா பாத்திரத்தில் அவரை போடலாம் என யோசித்துவருகிறார். மேலும் "லியோ' பட இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருப்பதால் வெளியீட்டிற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாம் என உத்தரவாதம் கொடுத்துள்ளாராம். ஏற்கனவே ரஜினியின் "பேட்ட' படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித் திருந்தார். "லியோ' ரிலீஸான பிறகு, உடனடியாக ரஜினி பட ஆரம்ப கட்ட வேலை களைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் லோகேஷ்.
ரசிகர்கள் ஹேப்பி!
சமந்தா, தசை அலர்ஜி பிரச்சினை காரணமாக சினிமாவிலிருந்து விலகியிருப்பதாகத் தெரியும் சூழலில், சில மாதங்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனிடையே விஜய் தேவர கொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள "குஷி' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளார். முன்னதாக தசை அலர்ஜி பிரச்னையை அறிவித்த பின்பு மிகவும் எமோஷனலாக மனம் உடைந்து நேர்காணலில் பேசி வந்தார் சமந்தா. அதன் பிறகு பெரிதளவு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அவர் சற்று இடைவெளிக்குப் பிறகு "சாகுந்தலம்' பட வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அங்கு ரசிகர்களை சந்தித்த நிலையில் படத்தின் இயக்குநர், சமந்தா நோயின் காரணமாக கஷ்டப்பட்டதை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் மேடையிலேயே கண்கலங்கிவிட்டார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை ஆறுதல்படுத்தினர். இதையடுத்து மீண்டும் இப்போது சில மாதம் கழித்து "குஷி' பட இசை வெளியீட்டில் ரசிகர்களை சந்தித்த சமந்தா, உற்சாகமாகவே காணப் பட்டார். அப்போது, "படங் களில் ரசிகர்களை திருப்திப் படுத்துவதற்காகவே கஷ்டப் பட்டு நடிக்கிறோம். நீங்கள் என் மீது காட்டும் அன்பினால் நான் ஆரோக்கியத்துடன் மீண்டு வருவேன்'' என நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் பேசியிருந்தார். அதைக் கேட்டு, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
-கவிதாசன் ஜெ.