தவிப்பில் திஷா!
பாலிவுட் நடிகை திஷாபதானி, சூர்யாவின் "கங்குவா' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் நிகழ்காலம், கடந்த காலம் என இரண்டு காலகட்டங்களாக கதை நகர்கிறது. நடப்பு காலகட்டத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் திஷாபதானி. இது சம்பந்தப்பட்ட காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் கோலிவுட்டில் சூர்யா படம் மூலம் அறிமுகமாவதால் தனக்கு நல்ல இமேஜ் கிடைக்கும் என நம்பியிருந்த திஷாபதானி, தற்போது மிகுந்த வேதனையில் இருக்கிறாராம். அதாவது, முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்த நிலையில், அங்கு ஒருசில தினங்களில் மட்டுமே அவர் கலந்துகொண்டார். அதன் பிறகு படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் என பல்வேறு கட்டங்களாக நடந்து வந்தது. ஆனால் அதில் அவர் கலந்துகொள்ளவே இல்லை. அதனால் படத்தில் தன்னுடைய காட்சிகள் இருக்கிறதா, இல்லையா என அவருக்கு ஒரு சந்தேகம். பீரியட் போர்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை, கொடைக
தவிப்பில் திஷா!
பாலிவுட் நடிகை திஷாபதானி, சூர்யாவின் "கங்குவா' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் நிகழ்காலம், கடந்த காலம் என இரண்டு காலகட்டங்களாக கதை நகர்கிறது. நடப்பு காலகட்டத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் திஷாபதானி. இது சம்பந்தப்பட்ட காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் கோலிவுட்டில் சூர்யா படம் மூலம் அறிமுகமாவதால் தனக்கு நல்ல இமேஜ் கிடைக்கும் என நம்பியிருந்த திஷாபதானி, தற்போது மிகுந்த வேதனையில் இருக்கிறாராம். அதாவது, முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்த நிலையில், அங்கு ஒருசில தினங்களில் மட்டுமே அவர் கலந்துகொண்டார். அதன் பிறகு படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் என பல்வேறு கட்டங்களாக நடந்து வந்தது. ஆனால் அதில் அவர் கலந்துகொள்ளவே இல்லை. அதனால் படத்தில் தன்னுடைய காட்சிகள் இருக்கிறதா, இல்லையா என அவருக்கு ஒரு சந்தேகம். பீரியட் போர்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை, கொடைக்கானல் என முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்தி வந்ததை படக்குழு எடிட் செய்து பார்த்துள்ளார் கள். இந்த காட்சிகள் நினைத்ததைவிட சூப்பராக வர, பீரியட் காட்சிகளை அதிகரித்து நடப்பு காலகட்ட காட்சிகளை குறைத்துள்ளதாம். அப்படி குறைத்ததில் திஷாபதானி காட்சிகளை பெரும்பாலும் நீக்கியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதனால், தான் நடித்த எத்தனை காட்சிகள் படத்தில் வருகிறதோ என யோசித்துவருகிறாராம் திஷா பதானி.
லோகேஷ் உறுதி!
"கங்குவா' படத்தை முடித்து விட்டு சுதாகொங்கரா படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கவுள்ளது. இதை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கவுள்ள "வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் சூர்யா பேசியுள்ளாராம். விக்ரம் படத்தில், தான் நடித்த "ரோலெக்ஸ்' கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றதால் அதை வைத்து தனியாக ஒரு படம் எடுக்கும், முடிவில் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். ஏற்கெனவே இது பற்றி பேச்சுக்கள் வந்த நிலையில், அண்மையில் சூர்யாவை சந்தித்து கதை கூறியுள்ளார். கதையை கேட்ட சூர்யா, கமிட்டான படங்களை முடித்துவிட்டு தொடங்க லாம் என தெரிவித்துள்ளாராம். லோகேஷும் "லியோ'வை முடித்துவிட்டு ரஜினி படத்தை தொடங்கவுள்ளார். அதை முடித்துவிட்டு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளாராம். அதனால் இப்படம் உருவாவது உறுதியாகியுள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் காலங்களில் வெளியாகவுள்ளது.
அக்காவுக்காக மீண்டும்...
தனுஷ், "கேப்டன் மில்லர்' படத்தைத் தவிர்த்து, சேகர்கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே மீண்டும் இயக்கம் பக்கம் திருப்பிய அவர், தான் இயக்கிவரும் 50வது பட பணிகளையும் கவனித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் "கேப்டன் மில்லர்' படப்பிடிப்பும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சேகர் கம்முலா படம் விரைவில் தொடங்கவுள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு படம் இயக்கத் திட்டமிட்டுள்ளாராம் தனுஷ். இதில் அவரது அக்கா மகனை ஹீரோவாக களமிறக்கவுள்ளாராம். இதை கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புசெழியன் தயாரிக்கவுள்ள நிலையில், தனுஷும் ஒரு கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்.
சர்ப்ரைஸ் வாய்ப்பு!
"எமன்', "பிச்சைக்காரன்' மற்றும் பல திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துள்ள வளரும் நடிகர் கணேஷ்பிரபுக்கு "ஜெயிலர்' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர், டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் "கேப்டன் மில்லர்' படத்திலும், டைரக்டர் ஜீவாசங்கர் இயக்கத்தில் அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் புதிய படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். "என் மீது பேரன்பு கொண்ட நிர்வாக தயாரிப்பாளர் அண்ணன் ராஜா ஸ்ரீதர் மூலமாக ஆடிசன் போனேன். சரியான கேரக்டர் இருந்தால் நிச்சயம் செல்கிறோம் என்று அனுப்பிவைத்தார்கள். பல நாட்கள் ஃபாலோ செய்தேன். திடீரென ஒருநாள் என்னை ஆடிசன் எடுத்த ஹரிபிரபு போன்செய்து, "டைரக்டருக்கு உங்க பெர்ஃபாமன்ஸ் பிடிச்சிருக்கு. படத்தின் ஓப்பனிங்ல வர்ற போலீஸ் ஆபீசர் கேரக்டர்' என்று கூறினார். சூப்பர் ஸ்டார் படத்தில் நடிப்பேன் என்று நான் கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால் நாம் நினைப்பதைவிட கடவுள் ஒன்றை நினைப்பான். கொரோனா காலகட்டத்தில், எல்லாம் முடிந்துவிட்டது, அவ்வளவுதான் வாழ்க்கை என்றிருந்த நான், இன்று உலகம் முழுவதும் மக்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடும் "ஜெயிலர்' படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.
-கவிதாசன் ஜெ.