ஷாக் தந்த மாளவிகா!
ரஜினியின் "பேட்ட' படத்தில் முக்கியமான ரோலில் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். பின்பு "மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் "மாறன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக வும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல மானார். இப்போது தமிழில் விக்ரம் நடிக்கும் "தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இப்படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பு குறித்து பல விமர்சனங்கள் வந்தது. ஆனால் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக உடற்பயிற்சியும், சிலம்பம் பயிற்சியும் மேற்கொண்டு படத்தில் இருப்பதை உறுதி செய்தார் மாளவிகா மோகனன். அந்த வகையில் தற் போது திடீரென்று அடையாளம் தெரி யாதவாறு உடல் எடையை குறைத்துள் ளார். மாளவிகாவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்ட னர
ஷாக் தந்த மாளவிகா!
ரஜினியின் "பேட்ட' படத்தில் முக்கியமான ரோலில் நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். பின்பு "மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் "மாறன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக வும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல மானார். இப்போது தமிழில் விக்ரம் நடிக்கும் "தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இப்படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பு குறித்து பல விமர்சனங்கள் வந்தது. ஆனால் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக உடற்பயிற்சியும், சிலம்பம் பயிற்சியும் மேற்கொண்டு படத்தில் இருப்பதை உறுதி செய்தார் மாளவிகா மோகனன். அந்த வகையில் தற் போது திடீரென்று அடையாளம் தெரி யாதவாறு உடல் எடையை குறைத்துள் ளார். மாளவிகாவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்ட னர். பின்பு ரசிகர் களுக்கு விளக்கம் அளிக்கும் வகை யில் தங்கலான் படத்தில் அழுத்த மான கதாபாத்தி ரம் என்றும் அதற்காக உடல் எடையை குறைத்த தாகவும் தெரி வித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
தெலுங்கு மோகம்!
சிறுத்தை சிவா இயக்கும் "கங்குவா' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. பாலிவுட் நடிகை திஷாபதானி நாயகி யாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடை பெற்று வருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் "வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இதனைத் தொடர்ந்து ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சூர்யா. தமிழைத் தாண்டி மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தாத சூர்யா, திடீரென்று தெலுங்கு பக்கம் கவனம் செலுத்த என்ன காரணம் என்று விசாரித்தால், ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரும் தெலுங்கை நோக்கி படையெடுப்பதால் தன் பங்குக்கு சூர்யாவும் விரைவில் ஒரு படம் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். மேலும் சமீபத்தில் தெலுங்கு இயக்குநரான சந்தூ மொண்டேட்டி சூர்யாவை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளார். அந்த கதை சூர்யாவுக்கு ரொம்பப் பிடித்துப்போக உடனே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூடுதல் தகவலை பகிர்ந்தனர்.
காலனி அரசியல்!
நயன்தாரா நடிப்பில் "அறம்' வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் கோபிநயினார். அதன் பிறகு 2 படங்களைத் தொடங்கி, சில காரணங்களால் அவை டிராப் செய்யப்பட்டது. இப்போது ஆண்ட்ரியாவை வைத்து "மனுசி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலையையும் தொடங்கிவிட்டார் கோபிநயினார். இம்முறை சீனியர் நடிகைகளை விட்டுவிட்டு, சூப்பர் சீனியர் நடிகையான ராதிகாவை வைத்து எடுத்து வருகிறார். ராதிகாவோடு இணைந்து நடிகர் லாலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு "காலனி' என தலைப்பு வைத்துள்ளார். "அறம்' படம் போன்று இந்த படத்திலும் ஒரு முக்கியமான அரசியலை அழுத்தமாகப் பதிவு செய்யவுள்ளார் என பேச்சுகள் அடிபடு கிறது.
ஜீவா ஓ.கே.வா?
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவுள்ளது. இதனை இயக்குநர் மஹி வீ ராகவ் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டியின் அப்பாவான மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கையை படமாக எடுத்தவர். "யாத்ரா' என்ற தலைப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளார். இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் முதலில் சூர்யாவை நடிக்க வைக்க முயற்சி செய்தது படக்குழு. அது கைகூடவில்லை. பின்பு இந்தி நடிகர் பிரதிக்காந்தியை அணுகினர். அதுவும் ஒத்துவராத நிலையில், தற்போது பல முன்னணி ஹீரோக்களை அணுகி வருகின்றனர். அதில் நம்ம ஜீவாவும் இருக்கிறார். இது தொடர்பாக ஜீவாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது படக்குழு.
-கவிதாசன் ஜெ.