மீண்டும் டைரக்ஷன்!

எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான முதல் படமான "வாலி' பெரும் ஹிட்டடிக்க, அடுத்ததாக விஜய்யை வைத்து "குஷி' என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பைப் பெற, அடுத்தடுத்து "நியூ', "அன்பே ஆருயிரே' போன்ற படங்களை இயக்கி, அதில் நடித்தும் இருந்தார். அதன் பிறகு இயக்கத்திலிருந்து, விலகி தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த எஸ்.ஜே சூர்யா "ஸ்பைடர்', "மெர்சல்', "மாநாடு' போன்ற படங்களில் வில்லனாக நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார். இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு "இசை' படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக ரீ-என்ட்ரி கொடுத்த எஸ்.ஜே. சூர்யாவுக்கு, அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனால் மீண்டும் நடிப்பின் பக்கம் திரும்பிய எஸ்.ஜே. சூர்யா "பொம்மை', "மார்க் ஆண்டனி', ஷங்கரின் "ஆர்.சி. 15' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்கத்தில், தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதால், எஸ்.ஜே. சூர்யா மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்பவுள்ளா ராம். தன்னுடைய பழைய ஸ்டைலில், இந்த படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடிக்கவுள்ளாராம். ஒரு காரை சுற்றி இப்படத்தின் திரைக்கதை நகர்வதாகவும், அதற்காக ஒரு சொகுசு காரை ஜெர்மனியில் இருந்து தமிழ்நாட்டிற்கு எஸ்.ஜே. சூர்யா இறக்குமதி செய்துள்ள தாகவும் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு நோ!

Advertisment

பாலிவுட்டில் பல குத்துப் பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடி, பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சன்னி லியோன். இவர் பாடலுக்கு நடனமாடுவதைத் தாண்டி நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துவரும் சன்னிலியோன், தன்னிடம் கதை கூறவரும் இயக்குநரிடம் ஸ்ட்ரிக்டாக ஒரு கண்டிஷன் போடுகிறாராம்.

அதாவது, தனது கவர்ச்சி நடன காட்சிகள் படமாக்கப்படும்போது அதன் சுற்று வட்டாரத்தில் குழந்தைகள் இருக்கக்கூடாதாம். அதனை மீறி குழந்தைகள் இருந்தால் படப்பிடிப்பையே நிறுத்திவிடுவதாக நிபந்தனை விதித்துள்ளாராம். இதற்கு இயக்குநர்களும் ஓ.கே. சொல்வதோடு, சன்னிலியோனின் இந்த முடிவை பாராட்டியும் வருகின்றனர்.

c

Advertisment

கதை சொல்லப் போறேன்!

"கோமாளி' படம் மூலம் பலரின் கவனத்தை பெற்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தற்போது "லவ் டுடே' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். காமெடி கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக விஜய்யை வைத்து படம் இயக்க முடிவெடுத்துள்ளாராம். அதற்கான கதையை தயார் செய்துள்ள பிரதீப் ரங்கநாதன், விஜய் யிடம் விரைவில் கூறவுள்ளார். ஏற்கனவே "கோமாளி' படம் வெளியான சமயத்தில் பிரதீப் ரங்கநாதன் விஜய்யிடம் ஒரு கதை சொன்னதாகவும், அதை கேட்ட விஜய் தனக்கு மிகவும் பிடித்து போனதாக தெரிவித்தாராம். இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை விஜய்யை சந்தித்து கதை சொல்ல வுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

"வாரிசு' படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்க வுள்ள விஜய் அடுத்ததாக அட்லீயுடன் இணையவுள்ளார். இந்த படங்களை முடித்த பிறகு பிரதீப் ரங்கநாதனின் கதை பிடித்திருந்தால் அவருக்கு கால்ஷீட் ஒதுக்குவார் என எதிர்பார்க்கலாம்.

ஹாலிவுட்டில் ஸ்ருதி!

sruthi

"7ஆம் அறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன், தொடர்ந்து அஜித், விஜய், அல்லுஅர்ஜுன், பவன்கல்யாண் என தென்னிந்தியாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கணிச மான ரசிகர்கள் கூட் டத்தை வைத்துள்ளார். ஆனால் சமீபகாலமாக கோலிவுட்டில் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமை யாததால், டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிய ஸ்ருதிஹாசன், தற்போது பிரபாஸின் "சலார்', சிரஞ்சீவியுடன் ஒரு படம், பாலையாவுடன் ஒரு படம் என தொ டர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் டோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு பறக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்கு நர் இயக்கும் "தி ஐ' (பட்ங் ஊஹ்ங்) என்ற ஹாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க வுள்ளாராம். மேலும் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக மார்க்ரவுலி நடிக் கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் கிரீஸ் நாட்டில் தொடங்கப்படலாம் என தெரிகிறது.

-கவிதாசன் ஜெ.