ஜித், தற்போது மூன்றாவது முறையாக எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் "துணிவு' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்க, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங் களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம், சென்னை மற்றும் பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடந்து வந்த நிலையில், தற்போது சென்னையில் இப்படத்தின் பாட்ச் ஒர்க் பணிகள் நடைபெற்று வருகிறதாம். பொங்கலை முன்னிட்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ajith

இதையடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் "ஏகே 62' படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தை முடித்துவிட்டு 18 மாதம் சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்க அஜித் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்துக்கு பைக்கில் உலகம் முழுவதும் சுற்றிவர நீண்டநாள் ஆசையாம். இந்த சுற்றுலா பயணத்தில் 60 நாடுகளை சுற்றி முடிக்க அஜித் முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே படப்பிடிப்புகளுக்கு இடையே அவ்வப்போது பைக் பயணம் மேற்கொள்ளும் அஜித், அடுத்ததாக கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால் வருடம் பைக் பயணம் மேற்கொள்ள வுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவீரனுக்கு தேதி குறிச்சாச்சு!

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியுள்ள படம் "ப்ரின்ஸ்'. இதனை தொடர்ந்து மண்டேலா இயக்குநர் அஷ்வின் இயக்கத்தில் "மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் "மாவீரன்' படத்தை அடுத்தாண்டு மே 13-ஆம் தேதி வெளியிட வேண்டும் எனறு தயாரிப்பாளரிடம் ஒரு ஸ்டிரிக்ட்டான கண்டிஷனை வைத்துள்ளாராம். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்ததால், அந்த படம் வெளியான மே 13-ஆம் தேதியே "மாவீரன்' படமும் வெளியானால் "டான்' படத்தை போன்றே இந்த படமும் வெற்றிப் படமாக மாறும் என நம்புகிறாராம். சிவகார்த்திகேயன், திரைத்துறையில் பல விஷயங்களுக்கு சென்டிமெண்ட் பார்த்து வருவதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த முடிவையும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கிள் டான்ஸ் சன்னிலியோன்!

பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன், குத்துப்பாடலுக்கு நடனமாடுவதுடன், பல படங்களில் நடித்தும் வருகிறார். இதனிடையே தமிழில் ஜெய் நடிப்பில் "வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடியிருந்தார். அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தமிழில் வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள "ஓ மை கோஸ்ட்' படத்தில் முதன்மை கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ss

Advertisment

இந்நிலையில் 8 வருடங் களுக்கு பிறகு மீண்டும் ஒரு தமிழ் பாட்டிற்கு குத்தாட்டம் போடவுள்ளார் சன்னிலியோன். 90 காலகட்டத்தில் பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக வலம்வந்த நவரச நாயகன் கார்த்திக், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் படம் "தீ இவன்'. இப்படத்தில் ‘"மேலே ஆகாயம், கீழே பாதாளம்..' என்ற ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடவுள்ளாராம். மேலும் இந்த பாடலுக்காக கலர்புல்லாக செட் அமைத்து பிரம்மாண்டமாக உருவாக் கப்படவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள் ளன.

காளிக்கு அடுத்து த்ரில்லர்!

தமிழில் "மாடத்தி', "செங்கடல்' மற்றும் பல ஆவணப் படங்களை இயக்கி பலரது கவனத்தையும் ஈர்த்தவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள "காளி' ஆவணப் படத்தின் போஸ்டர், வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, விவாதத்திற் கும் உள்ளானது. "காளி' போஸ்டரில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறி லீனா மணி மேகலை மீது பல வழக்குகள் போடப்பட்டு, அதன் விசா ரணையும் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இந்நிலையில், லீனா மணிமேகலை அடுத்ததாக சைபர் க்ரைம் த்ரில்லர் ஜானரில் ஒரு படம் எடுக்கவுள்ளாராம். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால், இதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகை பார்வதி ஒப்பந்தமாகியுள்ளாராம். லீனா மணிமேகலை இயக்கும் ஒவ்வொரு படமும் விவாதத்தை கிளப்பி வரும் நிலையில்... இந்தப் படம் அடுத்து என்ன விவாதத்தை கிளப்பும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-கவிதாசன் ஜெ.