குஷியில் குந்தவை!

cinema

திரைத்துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து, தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தன்னுடைய திரைப்பயணத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, ரசிகர்களின் ஆசைநாயகியாக வலம்வந்த இவர், சில சறுக்கலுக்குப் பிறகு ’"96'’படத்தின் மூலம் நல்ல கம்பேக் கொடுத்திருந்தார். ஆனால் அதன்பிறகும் அவருக்குச் சரிவர வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அப்செட்டில் இருந்த த்ரிஷாவை, மணிரத்னம் "பொன்னியின் செல்வன்' படத்தில் ஒப்பந்தம் செய்து குந்தவையாக நடிக்க வைத்திருந்தார். சமீபத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்'’படம் பெரும் வெற்றி பெற்றதோடு த்ரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்தை விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால் மீண்டும் பழைய ஃபார்முக்கு த்ரிஷா திரும்பியுள்ள தால் ஏராளமான பட வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளதாம். அத் தோடு ’"பொன்னியின் செல் வன்'’ பான் இந்தியா மொழி களில் வெளியானதையடுத்து, த்ரிஷாவின் பெயர் தெற்கைத் தாண்டி வடக்கிலும் பிரபலமாகி உள்ளதால், இந்திப் பட வாய்ப்பு களும் அவரின் வீட்டுக் கதவைத் தட்டத் தொடங்கியுள்ள தாம். இது, துவண்டு கிடந்த த்ரிஷாவுக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது. தற்போது தமிழ், தெலுங்கு என மூன்றுக்கு மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் த்ரிஷா, அடுத்தடுத்து இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவும் கமிட்டாகி வருகிறாராம்.

நானும் ஹீரோதான்!

cinema

Advertisment

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகிய நடிகர்கள் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடிப்பது வழக்கம். அதன்பிறகு சில நடிகர்கள் மீண்டும் காமெடி ரோலுக்கு திரும்பியதும் உண்டு. தற்போது இந்த ஃபார்முலாவைத்தான் காமெடி நடிகர் சூரியும் கையில் எடுத்துள்ளார். வெற்றிமாறனின் "விடுதலை'’படத்தில் ஹீரோவாக நடித்துவரும் சூரி, தொடர்ந்து சில படங்களில் காமெடியனாகவும், ஹீரோவாகவும் நடிக்க கமிட்டாகிவருகிறார். வெற்றிமாறனின் படத்தை முடித்துவிட்டு,இயக்குநர் அமீரின் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ள சூரி, மீண்டும் ஒரு ஹீரோ சப்ஜெக்ட்டை தேர்வு செய்துள்ளாராம். அதன்படி இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் புதிய படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

க்ளைமாக்ஸ் பார்ட்-2

"டான்'’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் ’"ப்ரின்ஸ்'’ படத்தில் நடித்துள்ளார். காதல் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாக வுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் க்ளை மாக்ஸ் காட்சியை படக்குழு திரும்பவும் படமாக்கியுள்ளதாம். "ப்ரின்ஸ்'’படத்தை முழுவதுமாக முடித்த பிறகு, படத்தை திரையில் பார்த்த படக்குழுவுக்கு க்ளைமாக்ஸ் காட்சி போதிய திருப்தியை கொடுக்கவில்லையாம். அதனால் மீண்டும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் படக்குழு முதலி-ருந்து படமாக்கி, பிறகு படத்துடன் இணைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

நாங்க ஹேப்பிதான்!

cinema

திரைபிரபலங்கள் திருமணம் செய்துகொண்டு, பின்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்து வாழ்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. அந்தவகையில் பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி ரன்வீர்சிங்கும், தீபிகா படுகோனேவும் விவாகரத்து பெற்றுப் பிரியப்போவதாகப் பாலிவுட் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தீயாகப் பரவியது. 6 வருடங்களுக்கு மேலாகக் காதலித்து வந்த தீபிகா படுகோனேவும், ரன்வீர்சிங்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு இருவரும் தங்களது படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் நிலையில்... ரன்வீர்சிங்கும், தீபிகா படுகோனேவும் பிரியப்போவதாக தகவல் வெளியாகியது. இது குறித்துப் பேசிய ரன்வீர், "எனக்கும் தீபிகாவுக்குமான காதல் 10 ஆண்டுகளை எட்டியுள்ளது'' என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்வதாகக் கூறி, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனிடையே "தீபிகா படுகோனே -ரன்வீர்சிங் இருவரின் திருமண வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது. சிலர் தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்' என அவர்களின் நலம்விரும்பிகள் தெரிவித் துள்ளனர்.

-அருண்பிரகாஷ்