அரசியல் ரூட்டில் கங்கனா!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், மோடி பிரதமராக பதவி ஏற்றதிலிருந்து தன்னை ஒரு வலதுசாரி ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு, தொடர்ந்து மத்திய அரசுக்கும், மோடிக்கும் ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார். அப்படி அவர் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

cc

Advertisment

இந்நிலையில் நடிகை கங்கனா, அடுத்த தேர்தலில் நடிகை ஹேம மாலினி எம்.பி.யாக இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதனை உறுதிசெய்யும் வகையிலேயே நடிகையும், எம்.பி.யுமான ஹேமாமாலினியின் பேட்டியிருந்ததாகச் சொல்லப்படு கிறது. அதில், "மதுரா தொகுதியில் திரைத்துறையைச் சேர்ந்த வர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும். வேறு யாராவது போட்டி யிட்டால் வெற்றி பெறமாட்டார்கள் என ஹேம மாலினி கூறியது கங்கனாவின் அரசியல் வருகையை உறுதிசெய்யும் சூசகமான பேச்சு' என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தல-தளபதி கூட்டணி!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யும், அஜித்தும் தனித்தனியே ஏராளமான ரசிகர்களை வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான‘"ராஜாவின் பார்வையிலே'’படத்தில் நடித் திருந்தனர். அவ்வப்போது கோலிவுட் வட்டாரங்களில் இருவரையும் வைத்து படம் இயக்கவிருப்பதாக இயக்குநர்கள் மத்தியில் பேச்சு அடிபடும். அதில் இயக்குநர் வெங்கட் பிரபு இருவரையும் வைத்து படம் இயக்க அதிக முனைப்புக் காட்டிவருகிறார்.

Advertisment

இந்நிலையில் இது குறித்து பேசிய வெங்கட் பிரபு, "என்னைப் போலவே அவர்களுக்கு ஒன்றாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்க ஓ.கே. சொல்லிட்டாங்கன்னா, "மங்காத்தா 2'’மாஸாக பண்ணிடலாம்''னு சொல்லியிருக்கிறார். அஜித் - அர்ஜுன் -வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான "மங்காத்தா'’படம் பெரும் ஹிட்டடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்தால் அதன் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கும்.

கொஞ்சம் லேட்டாகுமாம்!

"பரியேறும் பெருமாள்', "கர்ணன்'’படங்களுக்கு கிடைத்த வெற்றியின் காரணமாகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ள மாரி செல்வராஜ், தற்போது உதயநிதியை வைத்து "மாமன்னன்'’படத்தை இயக்கிவருகிறார். ஆனால் இப்படத்திற்கு முன்பு பா.ரஞ்சித் தயாரிப்பில் த்ருவ் விக்ரமை வைத்துதான் படம் இயக்குவதாக மாரி செல்வராஜ் அறிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களுக்காக த்ருவ் விக்ரம் படத்தை இயக்குவதற்கு முன்பு "மாமன்னன்' படத்தை இயக்கிவருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மாரி செல்வராஜ், த்ருவ் விக்ரம் படத்தின் பணிகளை தொடங்குவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மாரி செல்வராஜ் அடுத்ததாக பிரபல ஓ.டி.டி. தளத்திற்காக வெப் தொடரை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அதில் கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், திருநெல்வேலி பகுதிகளில் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை முடித்த பிறகே மாரி செல்வராஜ், த்ருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் பணிகளை தொடங்கவுள்ளாராம்.

மேடம் ஹேப்பி!

cc

"வாத்தி'’படத்தில் நடித்துள்ள தனுஷ் தற்போது அருண்மாதேஸ்வரன் இயக்கும் "கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தனுஷ் அடுத்ததாக ’"பியார் பிரேமா காதல்'’படத்தின் மூலம் பிரபலமான இளனுடன் கூட்டணி அமைக்கவுள் ளாராம். தனுஷ் தற்போது, ஒப்புக் கொண்ட படங்களை முடித்துள்ள தால், அடுத்தாக இளன் பெயரை டிக் செய்துள்ளாராம் காதல் படமாக உரு வாகவுள்ள இப்படத்தில் நடிக்க பல நடிகைகளிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இறுதியில் "வெந்து தணிந்தது காடு'’ படத்தில் நடித்த சித்தி இட்னானியை புக் செய்துள்ளார். ஆரம்பமே அமர்க்களம்போல் முன்னணி நடிகர் சிம்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சித்தி இட்னானி, அடுத்து மற்றொரு முன்னணி நடிகரான தனுஷுடன் நடிக்க வுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார். இதற்கிடையே சித்தி இட்னானி, ஹரீஷ் கல்யாணுடன் ’"நூறு கோடி வானவில்'’ என்ற படத்தில் புக்காகியுள்ளார்.

-அருண்பிரகாஷ்