அபர்ணா ஆதங்கம்!
8 தோட்டாக்கள், "சர்வம் தாளமயம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந் தாலும் அபர்ணா பாலமுரளிக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது என்னவோ, சூரரைப் போற்று படம்தான். பொம்மி கதாபாத்திரமாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு, அவருக் குத் தேசிய விருதையும் வாங்கிக்கொடுத்தது. அதே நேரத்தில் அவர் கொஞ்சம் குண்டாக இருக்கிறார் என்ற விமர்சனமும் பரவலாக உண்டு. இது குறித்து கேள்வியெழுப்பும் அபர்ணா பாலமுரளி, "நான் உருவக் கேலியை தாங்கும் தன்னம்பிக்கையை பெற்றிருக்கிறேன். நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று யாராவது சொன்னால் முதலில் எனக்கு வருத்தமாக இருக்கும். இப்போதெல்லாம் கண்டுகொள்வதில்லை. ஒல்லியான நடிகை களை மட்டுமே நாயகியாக ஏற்றுக்கொள் வார்களா என்பது புரியவில்லை. விஜய்சேதுபதி, தனுஷின் பிரபலத்திற்கும் தோற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை. எனவே திறமைதான் முக்கியம். ஆனால், நடிக
அபர்ணா ஆதங்கம்!
8 தோட்டாக்கள், "சர்வம் தாளமயம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந் தாலும் அபர்ணா பாலமுரளிக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது என்னவோ, சூரரைப் போற்று படம்தான். பொம்மி கதாபாத்திரமாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு, அவருக் குத் தேசிய விருதையும் வாங்கிக்கொடுத்தது. அதே நேரத்தில் அவர் கொஞ்சம் குண்டாக இருக்கிறார் என்ற விமர்சனமும் பரவலாக உண்டு. இது குறித்து கேள்வியெழுப்பும் அபர்ணா பாலமுரளி, "நான் உருவக் கேலியை தாங்கும் தன்னம்பிக்கையை பெற்றிருக்கிறேன். நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று யாராவது சொன்னால் முதலில் எனக்கு வருத்தமாக இருக்கும். இப்போதெல்லாம் கண்டுகொள்வதில்லை. ஒல்லியான நடிகை களை மட்டுமே நாயகியாக ஏற்றுக்கொள் வார்களா என்பது புரியவில்லை. விஜய்சேதுபதி, தனுஷின் பிரபலத்திற்கும் தோற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை. எனவே திறமைதான் முக்கியம். ஆனால், நடிகைகள் என்று வரும்போது மட்டும் உடல் தோற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் அம்மாவாக நடிக்கிறீர்களா என்று கேட்கிறார்கள்'' என்கிறார் ஆதங்கத்துடன்.
கௌதம் மேனன் நெக்ஸ்ட்!
கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான "வெந்து தணிந்தது காடு' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்தப் படத்தை முடித்துவிட்டு "வேட்டையாடு விளையாடு' படத்தின் இரண்டாம் பாகத்தை கௌதம் மேனன் இயக்கவுள்ளதாகவும், அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப் பட்டது. பின்னர், பல வருடங்களாக கிடப்பில் உள்ள "துருவ நட்சத்திரம்' படத்தை மீண்டும் கையிலெடுக்க கௌதம் மேனன் முடிவெடுத் திருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், கௌதம் மேனனின் அடுத்த படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படங்களுக்கெல்லாம் முன்னதாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து ஒரு படத்தை இயக்க அவர் தீர்மானித்துள்ளாராம். ஏற்கனவே ராம் பொத்தினேனியிடம் கௌதம் மேனன் ஒரு கதை சொல்யிருந்தார். அந்தக் கதைதான் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படமாகவுள்ளதாம். லிங்குசாமியின் "வாரியர்' படம் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமான ராம் பொத்தினேனிக்கு அந்தப் படம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதனால் கௌதம் மேனன் படத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம்.
கொந்தளிக்கும் டாப்ஸி!
சமீபகாலமாக சோசியல் மீடியாக்களில் உருவெடுத்துள்ள 'Boycott' ட்ரெண்டிங், பாலிவுட் திரையுலகினருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இத்தகைய ட்ரெண்டிங், பட ரிசல்டிலும் எதிரொலிப்பதால் பல செலிபிரட்டிகள் பொதுவெளியில் கருத்துச் செல்லவே தயங்குகிறார்கள். இந்த ட்ரெண்டிங்கால் டாப்ஸியின் 'டோபாரா' படமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், விருது விழா ஒன்றுக்கு வருகை தந்திருந்த டாப்ஸியிடம் 'டோபாரா' படத்தை புறக்கணிக்க கோரிய ட்ரெண்டிங் குறித்தும், படத்தின் தோல்வி குறித்தும் செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். "எந்தப் படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரவில்லை' என செய்தியாளரை நோக்கி திருப்பி கேள்வியெழுப்பிய டாப்ஸி, "ஒரு கேள்வி கேட்கும் முன் ஹோம்வொர்க் செய்துவிட்டு வாருங்கள்' என கடிந்துகொண்டார். அண்மைக் காலமாவே செய்தியாளர் சந்திப்பில் டாப்ஸி கடுமையாக நடந்துகொள்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்வுக்கு தாமதமாக வந்தது குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தற்போது மீண்டும் செய்தியாளர்களிடம் காரமான முகத்தை காட்டியிருக்கிறார் டாப்ஸி.
சித்ரகுப்தர் சர்ச்சை!
இந்திரகுமார் இயக்கத்தில் அஜய்தேவ்கன், ரகுல் ப்ரீத்சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள "தேங் காட்'’படம், அக்டோபர் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் இந்து இயக்கங்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரைலரில் உள்ள சில காட்சிகள் இந்துக்கடவுளான சித்ரகுப்தரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கர்நாடகாவைச் சேர்ந்த "இந்து ஜன ஜாக்ரிதி சமிதி' அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்துக் கடவுள்களை விமர்சிப்பதை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ள அந்த அமைப்பு, "இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக்கூடாது' எனக் கோரிக்கை வைத்துள்ளது. "படம் திரைக்கு வந்தால் வீதியில் இறங்கிப் போராடுவோம்' என்றும் அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறது. அதேபோல, உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் இந்த ட்ரைலருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
-இரா.சிவா