சிக்காத வரைக்கும் குதூகலம்... சிக்கிக்கிட்டா... ரணகளம்!

தென்னிந்திய சினிமாவை பரபரக்க வைத்துக்கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

தனக்கு உறுப்பினர் கார்டு தராத தெலுங்கு நடிகர் சங்கம் முன், அரைநிர்வாணப் போராட்டம் நடத்திய ஸ்ரீரெட்டி... அடுத்தடுத்த குற்றச்சாட்டுக் குண்டுகளை வீசிவருகிறார்.

sreereddy

Advertisment

தமிழ் -தெலுங்கு -ஹிந்தி என பல மொழிகளில் படம் தயாரித்து புகழ்பெற்ற மறைந்த ராமாநாயுடுவின் குடும்பத்து இளைஞனும், "பாகுபலி' புகழ் ராணா டகுபதியின் தம்பியுமான அபிராம், தன்னை ஸ்டுடியோவில் வைத்து உறவுகொண்டதாகச் சொல்லி... அபியும், தானும் இருக்கிற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டவர்... “"புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர் ஒருவர் பெண்களை ஓடவிட்டு... துரத்திப் பிடித்து உறவு கொள்ளுவார்... அவர் பெயரையும் வெளியிடுவேன்'’ எனச் சொல்லியிருந்ததற்கேற்ப... "தெலுங்கு சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற திரைக்கதாசிரியர் கோனா வெங்கட்தான் அப்படிச் செய்பவர்...' என அதிரடி கிளப்பியிருக்கிறார்.

"பிரபல டைரக்டர் வி.விநாயக்கை அறிமுகம் செய்து வைப்பதாகச் சொல்லி ஒரு கெஸ்ட் ஹவுஸுக்கு வரச்சொன்னார். நான் போனபோது... டைரக்டர் அங்கு இல்லை. கோனா வெங்கட் மட்டும்தான் இருந்தார். என்னை உடல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டார்'’எனச் சொல்லி அதிர வைத்திருக்கிறார்.

அத்துடன்... “"பட வாய்ப்புக்காகப் பேசும்போது நிர்வாணமாக வீடியோ காலில் பேசச் சொன்னார்கள் டைரக்டர்கள். நானும் அப்படிப் பேசிய ஆதாரங்களை வைத்துள்ளேன். விரைவில் அதையும் வெளியிடுவேன்'’என பதட்டத்திற்கும், படபடப்பிற்கும் "தொடரும்'’போட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

இந்த சர்ச்சைகளால்... ஸ்ரீரெட்டி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ‘விரைவில் வீட்டை காலி செய்யும்படி’ சொல்லியிருக்கிறார் ஸ்ரீரெட்டியிடம்.

rahikraghulpreethisingh

ஸ்ரீரெட்டி இப்படி குற்றச்சாட்டுகளை கிளப்பும் நிலையில்... தமிழ்-தெலுங்கில் பிரபலமாக இருக்கும் "தீரன்’ படப்புகழ் நாயகி ராகுல் பிரீத் சிங்... “திறமை உள்ளவர்களுக்குத்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். நான் பாலியல் ரீதியாக எந்த நெருக்கடிகளையும் சந்திக்கவில்லை'’எனச் சொல்ல...

Advertisment

விஷாலுடன் "ஆம்பள'’படத்தில் நடித்த, தெலுங்கு நடிகை மாதவி லதாவோ... “"நடிகைகளுக்கு இப்படியான நெருக்கடிகள் நடப்பதை மறைத்து, பொய் சொல்லக்கூடாது'’என ராகுல் பிரீத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ilayana

மீபத்தில் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது... பிரபல நடிகைகள், பெண் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட 85 பேர்கள்... "பல வருடங்களாக அவர் எப்படியெல்லாம் பாலியல் ரீதியாக எங்களை துன்புறுத்தினார் தெரியுமா?'’என குற்றம் சுமத்தினர். இது உலகம் முழுக்க அதிர்வை ஏற்படுத்தியது.radhikaopte

"அதுபோல எல்லா நடிகைகளும் கூட்டாகச் சொல்ல முன்வந்தால்... பாலியல் ரீதியாக தொல்லை தருபவர்கள் பெயரை வெளியில் சொல்லத் தயாராக இருப்பதாக' இலியானா சொல்லியுள்ளார்.

ஏற்கனவே "கபாலி'’ராதிகா ஆப்தே... "தெலுங்கு சினிமாவில் பெண்களுக்கு மரியாதையே கிடையாது. அது ஆணாதிக்கம் கொண்டதாக இருக்கிறது'’என தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ராதிகா ஆப்தே என்ன சொல்லியிருக்கிறார்...

"அந்த நடிகரோடு எனக்கு முன்பின் அறிமுகமே இல்லை. நானும், அவரும் அதற்குமுன் நேரில் பார்த்துக்கொண்டதுமில்லை. முதல்நாள் படப்பிடிப்பு... நான் உடம்பு முடியாமல் படுக்கையில் படுத்திருப்பது போலவும்... அந்த நடிகர் என்னை விசாரிப்பது போலவும் காட்சி.

காட்சி படமாக்கப்படும்போது சம்பந்தமே இல்லாமல்... அந்த நடிகர் தப்பான சைகையாக என்னோட பாதத்தை வருடினார். அதை உணர்ந்துகொண்ட நான் எரிச்சலாகி... அந்த நடிகரின் கன்னத்தில் அறைந்துவிட்டேன்'’எனச் சொல்லியுள்ளார் ராதிகா ஆப்தே.

இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பலம் சேர்ப்பதுபோல இருக்கிறது... ஸ்ரீரெட்டியின் ஸ்ரீ லீக்ஸ்.