ஹாட்ரிக் அடிக்குமா ராட்ச ஜோடி?!
"முண்டாசுப்பட்டி'யைத் தொடர்ந்து "ராட்சசன்' படத்திற்காக மீண்டும் இணைந்தது ராம்குமார்- விஷ்ணுவிஷால் கூட்டணி. க்ரைம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக வெளியான ராட்சசன், கோலிவுட் தாண்டி உலகம் முழுவதும் பேசப்பட்டது. இப்படத்தை ஹாலிவுட்டில் ரீ-மேக் செய்வதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன. ராம்குமாரின் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்... அவரிடம் கதை கேட்ட தனுஷ், ராம்குமார் இயக்கத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருந்தார். ஆனால், பவுண்டட் ஸ்கிரிப்ட் உருவாக்கத்தில் ராம்குமார் காலம் தாழ்த்த, அதில் அப்செட்டான தனுஷ், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பிறகு, தனுஷின் லைன்அப் டைட்டானதால் வேறு சில ஹீரோக்களின் பக்கம் கவனத்தைத் திருப்பிய ராம்குமாருக்கு, அங்கும் எதிர்பார்த்தபடி கதவு திறக்கவில்லையாம். அதனால் மீண்டும் விஷ்ணுவிஷால் பக்கம் வண்டியைத் தி
ஹாட்ரிக் அடிக்குமா ராட்ச ஜோடி?!
"முண்டாசுப்பட்டி'யைத் தொடர்ந்து "ராட்சசன்' படத்திற்காக மீண்டும் இணைந்தது ராம்குமார்- விஷ்ணுவிஷால் கூட்டணி. க்ரைம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக வெளியான ராட்சசன், கோலிவுட் தாண்டி உலகம் முழுவதும் பேசப்பட்டது. இப்படத்தை ஹாலிவுட்டில் ரீ-மேக் செய்வதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன. ராம்குமாரின் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்... அவரிடம் கதை கேட்ட தனுஷ், ராம்குமார் இயக்கத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருந்தார். ஆனால், பவுண்டட் ஸ்கிரிப்ட் உருவாக்கத்தில் ராம்குமார் காலம் தாழ்த்த, அதில் அப்செட்டான தனுஷ், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பிறகு, தனுஷின் லைன்அப் டைட்டானதால் வேறு சில ஹீரோக்களின் பக்கம் கவனத்தைத் திருப்பிய ராம்குமாருக்கு, அங்கும் எதிர்பார்த்தபடி கதவு திறக்கவில்லையாம். அதனால் மீண்டும் விஷ்ணுவிஷால் பக்கம் வண்டியைத் திருப்பிய ராம்குமார், அவருக்கு கதை சொல்லி அவரிடம் டேட்டும் வாங்கிவிட்டாராம். ஆக... ராம்குமார்-விஷ்ணு விஷால் கூட்டணியின் மூன்றாவது பட அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
பெருத்த எதிர்பார்ப்பில் பீஸ்ட் நடிகை!
பாலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்திவரும் சூர்யா, அடுத்ததாக "சிறுத்தை' சிவா இயக்கத் தில் நடிக்க இருக்கிறார். இப்படத் திற்கான ஆரம்பகட்ட வேலை கள் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன. சூர்யா-சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படம் வேறு நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டுள்ளதாம். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான யூவி க்ரியேஷன்ஸ் சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டுவந்த நிலையில்... திடீர் திருப்பமாக இந்தப் படத்தை யூவி க்ரியேஷனுக்கு சூர்யா கைமாற்றி விட்டுள்ளாராம். படத்தில் சூர்யாவிற்கு ஜோடி பூஜா ஹெக்டேவாம்.
விஜய்யின் "பீஸ்ட்' படம் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுத்த பூஜா ஹெக்டேவிற்கு அப்படத்தின் ரிசல்ட் பெரும் ஏமாற்றமாக அமைந்ததாம். ஏற்கனவே கோலிவுட்டில் என்ட்ரியான முகமூடி படமும் பெரிய அளவில் கை கொடுக்காததால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை தன் மீது விழுந்துவிடுமோ என்ற சிறு கலக்கம் அவரிடம் தெரிகிறதாம்.
கொந்தளிக்க வைத்த காளி!
"செங்கடல்', "மாடத்தி' ஆகிய ஆவணப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த லீனா மணிமேகலை, தற்போது காளி என்ற ஆவணப் படத்தை இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காளியின் வேடத்தில் இருக்கும் பெண், சிகரெட் புகைப்பது மற்றும் கையில் எல்.ஜி.பி.டி. கொடியை பிடித்திருந்தது, இந்துத்துவா ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போஸ்டர் வெளியான சிலமணி நேரங்களிலேயே இந்தியா முழுவதும் எதிர்ப்பைச் சம்பாதிக்க, லீலா மணிமேகலையை கைதுசெய்ய வலியுறுத்தி 'Arrest Leena Manimekalai' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்டானது. லீலா மணிமேகலை மீது அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தன்னுடைய ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த லீலா மணிமேகலை, ”"படத்தைப் பார்த் தால் 'ஹழ்ழ்ங்ள்ற் ப்ங்ங்ய்ஹ ம்ஹய்ண் ம்ங்ந்ஹப்ஹண்' ட்ஹள்ட் ற்ஹஞ் போடா மல் love you leena manimekalai' hashtag போடு வாங்க'’எனத் தெரிவித்துள்ளார். நுபுர் சர்மா விவகாரத் தையொட்டி, உதய்பூரில் நடந்த கன்ஹையா லாலின் படுகொலையால் நாடு முழுவதும் ஏற்பட்ட பதற்றம் ஓய்ந்துள்ள நேரத்தில், இது தேவைதானா என்ற கேள்வியை இணையவாசிகள் பரவலாக எழுப்பியுள்ளனர்.
விஜய்சேதுபதி மிரட்டலில் "புஷ்பா-2'
சுகுமார் இயக்கத்தில் அல்லுஅர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில், கடந்த ஆண்டு இறுதியில் வெளியான "புஷ்பா' திரைப்படம், கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலை வாரிக் குவித்தது. புஷ்பா இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தொடங்கி யுள்ள நிலையில், படத்தின் வில்லன் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, "புஷ்பா' இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி மூத்த போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். "புஷ்பா இரண்டாம் பாகம்' முழுக்க முழுக்க ஃபகத்பாசில் மற்றும் அல்லுஅர்ஜுனுக்கு இடையேயான மோதலாக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், கதை விவாதத்தின்போது இயக்குநர் சுகுமாருக்கு சிறு பொறி தட்டியதாம். அதனால் கதையின் கோணத்தில் மாற்றம் செய்து அந்தக் கதாபாத்திரத்திற்காக விஜய் சேதுபதியை உள்ளே கொண்டுவர முடிவெடுத்துள்ளாராம். "உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதால், படத்தின் ஸ்டார் வேல்யூவை ஏற்றவும் இந்த மூவ் உதவும் என நம்புகிறதாம் "புஷ்பா' படக்குழு
-இரா.சிவா