சல்மான்கானைத் துரத்தும் மான்!
பஞ்சாபி பாப் பாடகர் சித்து மூஸ்வாலா அண்மையில் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப்பில் புதிதாக பொறுப்பேற்ற ஆம் ஆத்மி அரசு அவருக்கு அளிக்கப்பட்டுவந்த பாதுகாப்பை ரத்து செய்த இரண்டாவது நாளில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக டெல்லி திகார் சிறையில் இருக்கும் லாரென்ஸ் பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கு கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் பொறுப்பேற்றுள்ளார். இது தொடர்பான விசாரணை நடந்துவரும் நிலையில், "சித்து மூஸ்வாலா போன்று நீங்களும் கொல்லப்படுவீர்கள்' என சல்மான்கான் குடும்பத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்.பி., ஜி.பி., என்ற பெயர்கள், லாரென்ஸ் பிஷ்னாய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோரின் பெயர்ச் சுருக்கமாக இருக்குமோ எனச் சந்தேகித்த போலீஸார்,
சல்மான்கானைத் துரத்தும் மான்!
பஞ்சாபி பாப் பாடகர் சித்து மூஸ்வாலா அண்மையில் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப்பில் புதிதாக பொறுப்பேற்ற ஆம் ஆத்மி அரசு அவருக்கு அளிக்கப்பட்டுவந்த பாதுகாப்பை ரத்து செய்த இரண்டாவது நாளில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக டெல்லி திகார் சிறையில் இருக்கும் லாரென்ஸ் பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கு கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் பொறுப்பேற்றுள்ளார். இது தொடர்பான விசாரணை நடந்துவரும் நிலையில், "சித்து மூஸ்வாலா போன்று நீங்களும் கொல்லப்படுவீர்கள்' என சல்மான்கான் குடும்பத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்.பி., ஜி.பி., என்ற பெயர்கள், லாரென்ஸ் பிஷ்னாய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோரின் பெயர்ச் சுருக்கமாக இருக்குமோ எனச் சந்தேகித்த போலீஸார், திகார் சிறையில் இருக்கும் லாரென்ஸ் பிஷ்னாயிடம் விசாரணை நடத்தினர். "இந்தக் கடிதத்திற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அபூர்வ வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் சிறைத்தண்டனை அனுபவித்தது ஊரறிந்த விஷயம். சல்மான்கான் வேட்டையாடியதாகச் சொல்லப்படும் அந்தவகை மான், பிஷ்னாய் சமூகத்தினரின் புனித விலங்காகும். தாங்கள் தெய்வமாக வழிபடும் விலங்கை வேட்டையாடிய சல்மான்கானை கொலை செய்வோம் என சில ஆண்டுகளுக்கு முன்னர் லாரென்ஸ் பிஷ்னாய் எச்சரித்திருந்தார். அதனால் இந்த மிரட்டல் கடிதத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ள மும்பை போலீஸார், சல்மான்கானுக்கும் அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பை தீவிரப்படுத்தி, உஷார் வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.
ரஜினியுடன் கரம் கோர்க்கும் முத்தான இயக்குநர்!
நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான "பீஸ்ட்' படத்திற்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் தனிப்பட்ட முறையில் அவரை பாதித்து விட்டதாம். குறிப்பாக, அவரது ஆட்டிட்டியூடை விமர்சிக்கும் வகையான கமெண்ட்ஸ்களால் நெல்சன் ரொம்பவே அப்செட்டாம். அதனால் அடுத்தாக இயக்கவுள்ள ’"தலைவர் 169'’ படம் குறித்து ரொம்பவும் கவனமாக இருக்கிறாராம். அந்தக் கவனம் ரஜினிக்கு இல்லாமலா இருக்கும்? தன்னுடைய ஆஸ்தான இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாரை கதை விவாதத் தில் கலந்துகொள்ளும்படி ரஜினி கேட்டுக்கொள்ள, கே.எஸ்.ஸும் சம்மதம் தெரிவித்துவிட்டார். விறுவிறுப்பாக நடந்துவரும் "தலைவர் 169'’ படத்திற்கான கதை விவாதத்தில் கலந்துகொண்டுள்ள கே.எஸ்.ரவிக்குமார், தன் பங்கிற்கு சில ஐடியாக்களை யும் கொடுத்துவருகிறாராம். கமலின் "விக்ரம்' பட வெற்றி குறித்து அண்மையில் கே.எஸ்.ஸிடம் ரஜினி சிலாகித்துப் பேசியுள்ளார். அவரது எதிர்பார்ப்பை புரிந்துகொண்ட கே.எஸ்., கதை விவாதத்தில் தன்னுடைய மெனக்கெடலை அதிகமாக்கியுள்ளாராம்.
100 கோடி சம்பளம்!
ஸ்ரீதேவியின் நட்புக்காக போனிகபூர் தயாரிப்பில் 3 படங்கள் நடிக்க ஒப்புக்கொண்ட அஜித், "தல 61'’படத்தில் நடித்துவருகிறார். எச்.வினோத்-அஜித் கூட்டணியில் வெளியான "வலிமை' படம் சின்ன சறுக்கலைச் சந்தித்தாலும், முழு நம்பிக்கையோடு ‘"தல 61'-இல் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இந்தப் படத்தைத் தொடர்ந்து லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சம்பள விஷயத்தில் போனிகபூரிடம் சற்று தாராளம் காட்டிய அஜித், லைக்காவிடம் கறாராகவே இருக்கிறாராம். இந்தப் படத்திற்காக அஜித்திற்கு 105 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். கோலிவுட்டில் ரஜினி மட்டுமே 100 கோடி சம்பளம் வாங்கிவந்த நிலையில், அண்மையில் டோலிவுட் தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுத்து 100 கோடி பட்டியலில் இணைந்தார் விஜய். இருவரையும் தொடர்ந்து, தற்போது 100 கோடி சம்பள கிளப்பில் இணைந்துள்ளார் அஜித்.
சாமர்த்திய சமந்தா!
டைவர்ஸுக்கு பிறகு கேரியர் க்ராப்பில் ஏற்றம் கண்டுவரும் சமந்தா அடுத்தடுத்து படங்களை புக் செய்துவருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என டஜன் கணக்கில் அவர் கைவசம் படங்கள் உள்ளதாம். சம்பள விஷயத்தில் கொஞ்சம் அனுசரித்துச் செல்வதால் சமந்தாவை புக் செய்ய தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் என ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சமந்தா, கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி விளம்பரப் படங்களிலும் நடித்துவிடுகிறார். அண்மையில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ஒரு விளம்பரப்படத்தில் நடித்துள்ளாராம். இந்த நிலையில், சமந்தா குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட்டணியில் அடுத்ததாக உருவாகவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவே முதல் சாய்ஸாம். கதாநாயகி பரிசீலனை இறுதியாகும் பட்சத்தில் நான்காவது முறையாக விஜய்க்கு ஜோடியாவார் சமந்தா.
-இரா.சிவா