சமந்தாவுக்கு ஒண்ணும் ஆகலையாம்!
"அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா, தற்போது சிவ நிர்வாணா இயக்கத்தில் "குஷி'’ படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முன்னதாக 2018ஆம் ஆண்டு வெளியான ’மகாநதி’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம்பெற்ற படத்தின் மோஷன் போஸ்டரில் சமந்தா, விஜய் தேவரகொண்டாவிற்கு இடையேயான கெமிஸ்ட்ரி சிறப்பாக வொர்கவுட்டாகியிருந்தது. இப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரின் பாஹல்காம் பகுதியில் நடைபெற்றுவந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவிற்கு பலத்த அடி ஏற்பட்டதாகவும் இருவரும் உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிஸியோ தெரபி சிகிச்சை எடுத் துக்கொண்ட தாகவும் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, சில ஊடகங்களிலும் இச்செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், படக்குழு வட்டாரம் அதனை மறுத்துள்ளது.
விஜய் தேவரகொண்டா வுக்கும் சமந்தாவுக்கும் விபத்து ஏற்பட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு ஹைதராபாத் திரும்பி விட்டது. இத்தகைய செய்திகளை நம்ப வேண்டாம்’என, படக் குழு தரப்பிலிருந்து வந்த விளக்கத்திற்கு பிறகே விஜய், சாம் ரசிகர்கள் நிம்மதி யடைந்தனர்.
"சிறுத்தை' சிவா -"சிங்கம்' சூர்யா காம்போ!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, பாலா இயக்கத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சூர்யாவிற்கு மீனவர் கதாபாத்திரமாம். அவருக்கு ஜோடியாக டோலி வுட்டிலிருந்து இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார். கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில் முதற்கட்ட படப் பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, அடுத்தகட்ட படப் பிடிற்காக ஆயத்தமாகிவரு கிறது. அடுத்ததாக வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள "வாடிவாசல்'’ படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். வெற்றி மாறன் இயக்கிவரும் ’"விடு தலை'’ படத்தின் பணிகளில் சிறு சுணக்கம் ஏற்பட்டுள்ள தால் இந்த முடிவை சூர்யா எடுத்துள்ளாராம். தனக்கு கதை சொல்லி, காத்திருக்கும் இயக்குநர்களின் பட்டியலை கையிலெடுத்த சூர்யா, சிறுத்தை சிவாவை டிக் செய்துள்ளாராம். இப்படம் பீரியட் படமாக உருவாக வுள்ளதாகவும், ஜூலையில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நெருங்கிய சினிமா வட் டாரங்கள் தெரிவிக்கின் றன.
கார்த்தியுடன் கைகோர்க்கும் அருண்ராஜா!
"கனா'’ பட வெற்றியோடு உதயநிதியுடன் கைகோர்த்த அருண்ராஜா காமராஜ், ’"நெஞ்சுக்கு நீதி'’படத்திலும் முத்திரை பதித்தார். "ஆர்ட்டிகிள் 15'’என்ற இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் இருந்தாலும், தமிழக அரசியல் சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்து நம்மூர் ஆடியன்ஸ்களின் அப்ளாஸை அள்ளிவிட்டார். கம்பீரமான போலீஸ் கெட்டப், அதிரடியான வசனங்கள் என உதயநிதியின் பொலிட்டிக்கல் கேரியருக்கும் பூஸ்ட் கொடுக்கிற படமாக அமைந்தது "நெஞ்சுக்கு நீதி'. இப்பட வெற்றிதந்த குஷியில் இருக்கும் அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக கார்த்தியோடு கைகோர்த்துள்ளாராம். கார்த்தி - அருண்ராஜா காமராஜ் கூட்டணி குறித்து கோலிவுட் வட்டாரத்தில் முன்பே பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாம்.
பெர்த்டேக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தன்னுடைய நடிப்பில் கடைசியாக வெளியான "பீஸ்ட்'’திரைப்படம், விமர்சன ரீதியாக கடும் தாக்குதலுக்கு உள்ளானதால் வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் "தளபதி 66'’படத்தில் மிகக்கவனமாக இருக்கிறாராம் விஜய். கதையில் ஏதாவது லாஜிக் இடித்தால் உடனே உதவி இயக்குநர்களை அழைத்து விளக்கம் கேட்கிறாராம். தெளிவு ஏற்படாத பட்சத்தில் வம்சியையே அழைத்து விவாதிக்கிறாராம். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு என பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன், "பூவே உனக்காக', "காதலுக்கு மரியாதை'’பாணியில் குடும்பப் பின்னணி படமாக உருவாகிவருகிறது "தளபதி 66'. ஹைதராபாத்தில் நடந்துவந்த இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அண்மையில் விஜய் சென்னை திரும்பினார். அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அடுத்த மாதம் 22-ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்ததினம் என்பதால் அன்றைய தினத்தில் படத்தின் டைட்டிலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடோடு அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
-இரா.சிவா