மாளவிகாவுக்கு ஜாக்பாட்!

சமந்தா டைவர்ஸ் பிரச்சனையில் அல்லாட... காஜல் திருமண வாழ்க்கையில் ஒதுங்க... நயன்தாராவோ விக்னேஷ் பிடியில்! இப்படி ஆளுக்கொரு திசையில் போனதில் அடித்தது ஜாக்பாட் ஒருத்தருக்கு.

ss

Advertisment

யாருக்கு...?

"மாஸ்டர்' ஹீரோயின் மாளவிகா மோகனனுக்கு. தனுஷுடன் "மாறன்' படத்தைத் தொடர்ந்து... பான் இந்தியா படமாக உருவாகும் பிரபாஸின் "ராஜா டீலக்ஸ்' படத்தில் அவரின் ஜோடியாகும் வாய்ப்பும், தமிழில் சூர்யாவுடன் ஒரு வாய்ப்பும் என வாய்ப்புகளை குவித்து வருகிறார்.

அப்டேட் அய்யா அப்டேட்!

நெல்சன் திலீப்குமார் இயக் கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், இப்படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் "தளபதி 66' படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள தாகவும், படத்திற்கு தமன் இசையமைக்க உள்ள தாகவும் சினிமா வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஹாலிவுட்டுக்குப் போகும் பாலிவுட்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பு பல பிரச்சனைகளை சந்தித்தாலும் படம் வெளியான பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜீனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோருடன் இவர் இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் படமும் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ff

Advertisment

இந்நிலையில் பாலிவுட் நடிகை அலியா பட் ஹாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். 'தி ஏரோனாட்ஸ்', 'வுமன் இன் பிளாக் 2' உள்ளிட்ட படங்களை இயக்கிய டாம் ஹார்பர் இயக்கும் 'ஹார்ட் ஆஃப் ஸ்டோன்' படத்தில் நடிகர் ஜேமி டோர்னன், நடிகை கல் கடோட், ஆகியோருடன் இணைந்து ஆலியா பட் நடிக்கவுள்ளார். நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினலாக உருவாகும் படத்தை ஸ்கைடான்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ளது. இப்படம் இன்டர்நேஷனல் ஸ்பை திரில்லராக உருவாக இருப்பதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாட்டி வீ(நா)ட்டுப் பாசம்!

ரஷ்யா, உக்ரைன் மீது இரு வாரமாக கடும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டும் வெளியேறி வருகின்றனர். இந்த சூழலில் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தப் போரால் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் உக்ரைனுக்கு போரைச் சமாளிக்க லியோனார்டோ டிகாப்ரியோ ரூ.75 கோடி (10 மில்லியன் டாலர்) நன்கொடை வழங்கியுள்ளார். ‘டைட்டா னிக்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான டிகாப்ரியோ தனது தனித்துவமான நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். டிகாப்ரியோவின் பாட்டி உக்ரைனில் பிறந்தவராம். அந்தப் பாசமும் இந்த உதவிக்கு ஒரு காரணம்.

சண்டையில் கிழிந்த சட்டை!

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016-ல் வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்தப் படத்தில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1.51 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6.49 கோடி ரூபாயை பெற்றுத்தரக்கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார். அதேசமயம், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரக் கோரி தயாரிப் பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனிடையே இணைய தளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி, மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர் சங்கம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தபோது, "இந்த வழக்கில் 1080 நாட்கள் ஆகியும் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகையை மார்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் கட்டவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

-சிவா