ந்திய அளவில் ஃபேமஸான காதல் ஜோடி ரன்வீர் சிங், தீபிகா படுகோனே காதல் ஜோடி. அவ்வப்போது சின்னச் சின்ன சச்சரவுகள் இருந்தபோதும் "பத்மாவதி' படத்தின் மூலம் இவர்கள் இருவருக்கும் கிடைத்த புகழ்... இவர்களின் காதலை மேலும் ஸ்ட்ராங் ஆக்கி... கல்யாணத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.

touringtalkies

பாலிவுட் பிரபலங்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் போய்த்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். விராட்கோலி- அனுஷ்கா சர்மா ஜோடிகூட இத்தாலி நாட்டில்தான் திருமணம் செய்து கொண்டது னர். இதேபோல தீபியும்-ரன்வீரும் இத்தாலியில்தான் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள்.

இதன் மூலம் ஒரு காதல் ஜோடி கல்யாணத்தில் இணையப் போறாங்கனு தெரியுது.

Advertisment

"ஜுன் 16... இந்த நாள் இனிய நாள்...' என்றெல்லாம் அஞ்சலிக்கு பிறந்தநாள் கவிதை வாசித்தார் ஜெய்.

அது போன வருஷம்.

இந்த வருஷம்.... அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லவில்லை ஜெய்.

Advertisment

இவர்கள் இருவருக்கும் இடையேயான காதலில் இருந்த சின்னச் சின்ன சச்சரவுகள் பெரிதாகிவிட்டன.

இந்த ஜோடி நடித்த "பலூன்' படத்தின் தயாரிப்பாளர்கள்... "அஞ்சலிக்கு உடம்பு முடியல. அதனால் ஷூட்டிங்கை நிறுத் துங்க. நான் அஞ்சலியப் பார்க்கப் போகணும்' எனச் சொல்லிவிட்டு... சினிமா நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்துகொண்டார்’ என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜெய் மீது சுமத்தி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். இதனாலும்... அடிக்கடி ட்ரங்க் அண்ட் ட்ரைவ் காரணமாக போலீஸிடமும் சிக்குவது உள்ளிட்ட காரணங்களால் ஜெய் மீது கோபம் அஞ்சலிக்கு. அதுதான் இவர்களின் காதலில் பிரிவு ஏற்படக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இதன் மூலம் ஒரு காதல் ஜோடி இடையே பிரிவு ஏற்பட்டிருக்குனு தெரியுது.

arauதென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக... அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகத் திகழும் நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ்சிவனும் "கட்டிக்காமலே ஒட்டிக்கிட்டு' வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு விருது விழாவில் "என் வருங்கால கணவர் விக்கி' எனச் சொல்லி காதலை மேலும் வலிமையாக்கினார் நயன்.

தன் காதலரை ஹீரோவாக்கி அழகுபார்க்க விரும்பும் நயன்... சொந்தமாக அந்தப் படத்தை தயாரிக்கவும் முயற்சி மேற்கொண்டிருக் கிறார். இதன் மூலம் ஒரு காதல் ஜோடி... தங்கள் காதலை மேலும் ஸ்ட்ராங் ஆக்கிக்கிட்டிருக்காங்கன்னு தெரியுது.

"பிக்பாஸ் சீஸன் -1'-ல் பங்கேற்ற சமயம் சக போட்டியாளர்களான ஓவியாவும், ஆரவ்வும்... பாஸோட வீட்டுக்குள்ளயே பாசம் வளர்த்தாங்க. கேமரா வைக்கப்படாத ஸ்மோக் கர்ஸ் ரூமில்... இருவரும் முத்தமும், மோகமுமாய் காதல் வளர்த்தாங்க.

ஆரவ்வால் இந்த காதலில் குழப்பம் ஏற்பட்டதால்... மனதளவில் பாதிக்கப்பட்டு... பாஸின் வீட்டிலிருந்து வெளியேறினார் ஓவியா.

பிறகு... "நான் இப்போ சிங்கிளாத்தான் இருக்கேன்' என்று... அதாவது... "ஆரவ்வுடன் எனக்கு இனி எதுவுமில்லை' என்பது போல தன் டுவிட்டர் கணக்கில் புதுக்கணக்கு எழுதினார் ஓவி.

இப்போ... "பிக்பாஸ் சீஸன்-2'வில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களில் மிக இளவயதானவரும் "இருட்டு அறையில் முரட்டுக் குத்து' பட நாயகியுமான யாஷிகா ஆனந்த்... சில மாதங்களுக்கு முன்பு பார்ட்டி ஒன்றில் ஆரவ்வுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைப்பக்கங் களில் வைரல் ஆகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தை பாஸின் வீட்டுக்குள் இருக்கும் யாஷிகாவால் பதிவேற்றம் செய்திருக்க முடியாது. ஆரவ் ஸைடில் யாரும் அடிச்சுவிட்டாங்களா என்று தெரிய வில்லை. ஆனால்... இந்த ஆரவ்-யாஷி போட்டோ, ஓவியை ஏதாவது ஒரு வகையில் டிஸ்டர்ப் செய்திருக்குமோ என்னவோ... சம்பந்தமில்லாமல், எந்தவித குறிப்பும் இல்லாமல்... ஆரவ்வுடன் தான் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார் ஓவி.

ஆக... அந்த மேட்டர்லாம் என்னா?னு தெரியுது.

ஆனா... இந்த மேட்டர் என்னா?னு தெரியல.

உங்களுக்குத் தெரியுதா?

-ஆர்.டி.எ(க்)ஸ்