"விக்ரம் வேதா' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கேரக்டரில் "கபாலி' ஹீரோயின் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். விஷயம் அதுவல்ல... "நீங்கள் இவ்வளவு திறமையான நடிகையாக இருந்தும் அதிகம் வாய்ப்புகள் கிடைக்காததற்கு காரணம் உங்கள் மூக்கு தான். அதை பிளாஸ்டிக் சர்ஜரிமூலம் ஆல்ட்டரேசன் செய்தால் இந்த நிலைமை மாறலாம். ஸ்ரீதேவியும் மூக்கு ஆபரேஷன் செய்தபிறகுதான் பாலிவுட்டில் பெரிய அளவில் வந்தார்' என நலன் விரும்பிகள் கூற.. இதில் கோபமான ராதிகா, "நடிப்புக்குக் கிடைக்காத வாய்ப்பு மூக்கினால் கிடைத்தது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

c

உடல் அமைப்பு ஆண்டவன் கொடுத்தது. அதை மாற்றியமைக்க நமக்கு உரிமையில்லை. அதனால் வாய்ப்புக்காக நான் எந்த ஆபரேஷனும் செய்துகொள்ளமாட்டேன்'' என்று முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டாராம்.

Advertisment

சாய்பல்லவியின் நேர்கொண்ட பார்வை!

அண்மையில் ராணாடகுபதி, சாய்பல்லவி நடிப்பில் வெளியான "விரத பர்வம்'’ படத்திற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி தெரிவித்த ஒரு கருத்துதான் தற்போதைய ஹாட் டாபிக். நேர்காணல் ஒன்றில் பேசிய சாய்பல்லவி, "காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் பேசிய பண்டிட்கள் கொலையும், கொரோனா காலத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற நபர்மீது தாக்குதல் நடத்தி அவரை "ஜெய் ஸ்ரீராம்' எனக் கோஷமிட வற்புறுத்தியதும் ஒன்றுதான்'' என தெரிவித்தார். "பண்டிட்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தனி நபர் மீதான தாக்குதலோடு ஒப்பிடுவது எப்படிச் சரியாகும்?' எனக்கூறி இந்துத்துவா ஆதரவாளர்கள் சாய்பல்லவியின் கருத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதே நேரத்தில், இந்த கருத்தை சாய் பல்லவி துணிச்சலுடன் தெரிவித்திருப்பதாக மற்றொரு சாரார் பாராட்டினர். தெலுங்கில் அளித்த இந்த பேட்டியை இந்தி மற்றும் ஆங்கில சப்லிடைட்டிலுடன் இரு தரப்பினருமே சமூக வலைத்தளங்களில் பரப்ப, அதன் தாக்கம் ஒரேநாளில் இந்தியா முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் அது சாய்பல்லவியின் உருவக் கேலிவரை நீண்டது. சாய்பல்லவிக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கருத்துத் தெரி வித்துவரும் நிலையில்... சாய்பல்லவியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஸ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பு ஹைதராபாத் போலீஸில் புகார் அளித்துள்ளது. இந்துத்துவா ஆதரவாளர்களின் தொடர் எதிர்ப்புகள் சாய்பல்லவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

கண்டிஷன் பெயிலில் ஜெயிலர்!

Advertisment

"பீஸ்ட்'’ பட ரிலீஸிற்கு முன்னரே ரஜினியை வைத்து படம் இயக்க கமிட் ஆனார் நெல்சன். ரிலீஸிற்குப் பிறகு "பீஸ்ட்' படத்திற்கு வந்த விமர்சனத்தால் குழம்பிப்போன சன் பிக்சர்ஸ், கதை முதல் பட்ஜெட்வரை நெல்சனிடம் கறார் காட்டியது. இதனால் 200 கோடிக்கும் மேல் போடப்பட்ட பட்ஜெட் தற்போது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாம். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கும் திட்டத்தோடு முதற்கட்ட பணிகளில் படக்குழு விறுவிறுப்பு காட்டிவரும் நிலையில், படத்திற்கு ’"ஜெயிலர்'’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

அஜித்துடன் ஜோடி போடும் மஞ்சுவாரியர்!

எச்.வினோத் -அஜித் -போனிகபூர் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமான ’"ஏ.கே.61'-ஐ தீபாவளிக்கு விருந்தாக்கும் திட்டத்தில் உள்ளது படக்குழு. ஹைதரா பாத்தில் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், 70 சதவிகி தத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட தாம். படத்திலுள்ள ஒரு முக்கிய சண்டைக் காட்சியை தன்னுடைய பாணியிலேயே பிரம்மாண்டமாகப் படமாக்கியிருக்கிறாராம் எச்.வினோத். புனே ஷெட்டியூலில் அஜித்திற்கும் நாயகி மஞ்சுவாரியருக்கும் இடையேயான காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாம். ’"ஏ.கே.61'-ல் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிப்பதை இதுவரை படக்குழு அறிவிக்காத நிலையில், புனே ஷெட்டியூலின்போதோ அல்லது ஷெட்டியூலுக்குப் பிறகோ ஸ்டில்சுடன் கூடிய அறிவிப்பாக அது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

cc

லோகேஷ் காட்டுல பட மழை!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய "விக்ரம்' திரைப்படம், இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய படத்திற்கு கிடைத்த வெற்றியையும், "விக்ரம்' பாக்ஸ் ஆபீஸ் விவரங்களையும் பார்த்த கமல், இன்ப அதிர்ச்சியில் உள்ளாராம். தனக்கு நெருக்கமான சினிமா மேல்மட்ட வட்டாரத்தில் லோகேஷ் குறித்து ரொம்பவும் பாஸிட்டிவான ஃபீட்பேக்கை கொடுக்கிறா ராம். ஏற்கனவே லோகேஷ் கைவசம் "தளபதி 67', "கைதி 2'’, "விக்ரம் அடுத்த பாகம்'’உள்ள நிலையில், அல்லுஅர்ஜுனை வைத்து டோலி வுட்டிலும் படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். "விக்ரம்' படத்தின் வேலைகள் ஆரம்பகட்டத்தில் இருந்த நிலையி லேயே தெலுங்கு தயாரிப்பாளர் ஒரு வர் லோகேஷை ஒப்பந்தம் செய்ய முயற்சியில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டது. லோகேஷ் கனகராஜ் -அல்லுஅர்ஜூன் கூட்டணிக்கான முயற்சியை அதே தயாரிப்பாளர் முன்னெடுக்கிறாரா என்பது குறித்த விவரங்கள், இந்தப் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை அடையும்போது தெரியவரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

-இரா.சிவா