சவால்!
கதையின் நாயகியாக தான் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக கைகொடுக் காததால் வருத்தத்தில் இருக்கும் நயன்தாரா, மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க பெரிய நடிகர்களை தொடர்புகொண்டு வருகிறார். எதுவும் கைகூடாத நிலையில்... தற்போது தானே ஒரு படத்தை தயாரித்து நாயகியாக நடிக்கலாம் என முடிவு செய்து "பீட்ஸா' நடிகரை நாயகனாக நடிக்கக் கேட்டிருக்கிறாராம். "மீண்டும் தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களில் நடித்து இளசுகளைக் கவரும் நாயகியாக வலம் வருவேன்' என்று தன் நட்பு வட்டத்தில் சவால் விட்டுச் சொல்லிவருகிறாராம் நயன்.
பாக்ஸிங் அருள்நிதி!
"கருப்பன்', "நெஞ்சுக்கு நீதி', "ரசவாதி' என பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் தன்யா ரவிச்சந்திரன். இப்போது அருண்விஜய்க்கு ஜோடியாக "ரெட்ட தல' படத்தில் நடித்துள்ளவர், அடுத்து அருள்நிதியுடன் ஜோடி போட்டுள்ளார். முத்தையா இயக்க சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. குத்துச்சண்டை கதைக் களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் குத்துச் சண்டை வீரராக அருள்நிதி நடிக்கிறார். இசை ஜிப்ரான். படத்தின் பெயர் "ராம்போ'. குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து புகழ்பெற்ற தான்யா, தற்போது கிளாமல் ரூட்டிலும் இறங்கி, இளசுகளை கிறங்கடித்து வருகிறார். ஒரு பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் தனக்கு இந்தப் படம் நிச்சயம் சிறப்பான ஒன்றாக அமையும் என பெரிதும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் தான்யா ரவிச்சந்திரன்.
யாருக்கு டிக்?
"குட்-பேட்-அக்லி'’ பட ரிலீஸுக்காக காத்திருக்கும் அஜித், யார் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு, மோகன் ராஜா, விஷ்ணுவர்தன், கார்த்திக் சுப்புராஜ் என பல இயக்குநர்கள் அஜித் தின் அடுத்த பட லிஸ்டில் இருக்கும் சூழலில்... புதிதாக இரண்டு இளம் இயக்குநர்கள் இணைந் துள்ளனர். ஒன்று மகாராஜா பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன், இன்னொருவர் "போர் தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்ராஜா. கார் ரேஸை முடித்துவிட்டு செப்டம்பர் அல்லது நவம்பரில் இந்தியா திரும்பும் அஜித், அப்போது அனைத்து இயக்குநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு இயக்குநரை டிக் செய்யவுள்ளாராம்.
கைவிடப்பட்ட கதை!
கௌதம் மேனன் தற்போது, தான் கதை எழுதாமல் மற்றொருவரின் கதையை வாங்கி படமாக்குவதில் ஆர்வம்காட்டி வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் நீரஜ்ராஜன் கதையை வாங்கி மம்மூட்டியை வைத்து "டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்'’என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அடுத்து வெற்றிமாறன் கதை யில் ஒரு படம் இயக்கவுள்ளார். இதில் ரவி மோகன் ஹீரோ வாக நடிக்கிறார். ஆரம்பக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் கதை "வெற்றிமாறன் -தனுஷ் கூட்டணியில் முன்பு ‘சூதாடி’ என்ற தலைப்பில் தொடங்கப் பட்டு பின்பு கைவிடப்பட்டது' எனச் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்குகிறது.
தள்ளிப் போட்டாச்சு!
"ப.பாண்டி', "ராயன்' ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கியுள்ள படம் ‘"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இயக்குவதோடு மட்டுமில்லாமல் தயாரிப்பும் தனுஷ் தான். இதில் அவருடைய சகோதரி மகன் பவிஷ் நாரா யணனை ஹீரோவாக்கியுள்ளார். இவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ளனர். இவர்களோடு மாத்யூ தாமஸ், வெங்க டேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வழக்கமான காதல் கதையை ஜாலியாகவும் அதே சமயம் இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாதம் 21ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-கவிதாசன் ஜெ.