"ஹலோ தலைவரே, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. பற்றி தமிழக கவர்னருக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எழுதிய புகார்க் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்குது.''”
"ஆமாம்பா, இது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த விவகாரமாச்சே?''”
"உண்மைதாங்க தலைவரே, கவர்னர் ரவிக்கு பா.ஜ.க. அண்ணாமலை எழுதிய அந்தப் புகார்க் கடிதத்தின் சாராம்சம் என்னன்னா, 2009 ஜூனில் இலங்கைக்கு போவதற்கான இரண்டு போலி பாஸ்போர்ட்டுகள் பிடிபட்டிருக்கு. இதேபோல் 200 போலி பாஸ்போர்ட்டுகள் அந்தக் காலகட்டத்தில் மதுரையில் வழங்கப்பட்டது பின்னர் விசாரணையில் தெரியவந்திருக்கு. இப்போது உளவுத் துறை ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் டேவிட்சன் தேவஆசிர்வாதம்தான் அப்போது, மதுரை மாநகர் போலீஸ் கமிஷனராக இருந்தாராம். உதவி கமிஷனராக சிவகுமாரும், இன்ஸ்பெக்டராக இளங்கோவனும் அப்போது இருந்திருக்கிறார்கள். இது தொடர்பான வழக்கும் அப்போது பதிவு செய்யப்பட்டிருக்கு.''”
"பாஸ்போர்ட் விவகாரங்களில் காவல்துறையினரின் பங்கு ரொம்பவும் முக்கியமானதாச்சே?''”
"உண்மைதாங்க தலைவரே, அதனால்தான் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்னு வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் 115 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அவர்களில் 22 பேர் கைதும் செய்யப் பட்டிருக்காங்க. அவர்களில் 3 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். இந்த விவகாரத்தை விசாரித்துவரும் உளவுத்துறை ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, இந்த வழக்கு தொடர்பாக இப்போதைய உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் டேவிட்சன் தேவஆசிர்வாதத்தை விசாரிக்க வேண்டும் என்று உள்துறைச் செயலாளர் உள்ளிட்டவர்களுக்குக் கடிதம் எழுதியும் நடவடிக்கை எதுவும் இல்லையாம். இதையெல்லாம் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் பா.ஜ.க. அண்ணாமலை, இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையோ அல்லது சி.பி.ஐ.யோ விசாரிக்க உத்தரவிடணும்னு கவர்னரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்தக் கடிதத்தைப் பார்த்த கவர்னர் ரவி, இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்குன்னு தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கிறாராம்.''”
"பாஸ்போர்ட் வெரிஃபி கேஷன் விதிமுறைகளின்படி இதில் இன்ஸ்பெக்டர் லெவலில் இருப்பவர்களின் பங்குதான் முக்கியமானதுன்னு அரசு தரப்பில் சொல்லுது. அதோடு, எடப்பாடி ஆட்சிக்கால விவகாரத்தைக் கிளறிய அண்ணாமலை, அந்த ஆட்சி பற்றி எதுவும் குறிப்பிடாமல், தி.மு.க. ஆட்சியில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி பற்றி மட்டும் புகார் தெரிவித்து விசாரிக்கச் சொல்லியிருப்பதும் அரசியல் கோணத்தில் பார்க்கப் படுது. மோடி ஆட்சியில் விஜய் மல்லையாவில் தொடங்கி நீரவ்மோடி வரை கிட்டத்தட்ட 14 பேர் பேங்க் பணத்தை ஆட்டையப் போட்டுட்டு, போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்குத் தப்பிப் போயிருக்காங்க. இவங்களில் பெரும்பாலானவங்க மோடியின் பா.ஜ.க. ஆளுற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவங்க. அதைப் பற்றி அண்ணாமலை வாய் திறப்பாரான்னு கேட்கு றாங்க.''”
"அ.தி.மு.க. பஞ்சாயத்து தேர்தல் ஆணையம்வரை போயிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை அங்கீகரிக்கும் வகையில், பொதுக்குழுவின் முடிவுகளை தலைமைத் தேர்தல் ஆணை யத்துக்கு அனுப்பி வைத்திருக் கிறார் எடப்பாடி. ஓ.பி.எஸ்.ஸோ, அதை ஏற்கக்கூடாதுன்னு ஆணையத்துக்குக் கடிதம் எழுதி இருக்கார்.. இந்த நிலையில், ஆணையத்தின் அங்கீகாரம் யாருக்குக் கிடைக்கும் என்கிற விவாதம் அ.தி.மு.க.வில் எதிரொலித்த படியே இருக்குது. தவிரவும், எடப்பாடிக்கு எதிராக பா.ஜ.க. தலைமை இருப்பதையும், தொடர்ந்து ஓ.பி.எஸ்.சுக்கு ஆதர வாக இருப்பதையும் தெரிந்து கொண்ட அவர் தரப்பு எம்.எல். ஏ.க்கள், பா.ஜ.க. மீது கடும் வெறுப்பில் இருக்காங்க.''”
"பா.ஜ.க.வுக்குப் பாடம் புகட்ட அந்த எம்.எல்.ஏ.க்கள் தயாராகறாங்களே?''”
"அதுவும் உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. மீது கடும் கோபத்தில் இருக்கும் அவர்கள், குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்து, அக்கட்சிக்குப் பாடம் புகட்டும் மனநிலைக்கு வந்திருக்காங்க. இதுகுறித்த தங்கள் முடிவை அவர்கள் எடப்பாடியிடமே சொன்னபோது, "நாம் அவசரப்படக் கூடாது. நம் தரப்புக்கு நிறைய சிக்கல்கள் இருக்குது. அதனால் டெல்லியை உடனே பகைச்சுக்க முடியாது. அதனால் இப்போது கொஞ்சம் அமைதியாக இருங்கள். தேர்தலுக்கு முதல்நாள், இது பற்றி ஒரு முடிவெடுத்துச் சொல்கிறேன்'னு அவர்களைச் சமாதானப்படுத்தியிருக்கிறார். இருப்பினும், எடப்பாடி பேச்சையும் மீறி, எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஓட்டுப் போட்டு, பா.ஜ.க.வுக்குப் பாடம் புகட்டும் முடிவில் பலரும் இருக்கிறார் களாம்.''”
"எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் ஒருவரை ஒருவர் துரத்தித் துரத்தி அடிச்சிக்கிற ஃபைட் சீனை பொதுமக்கள் காமெடி போல் ரசிக்கிறாங்களே?''”
"சரியாச் சொன்னீங்க தலைவரே, பழைய படங் களில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் போடற ‘டிஷ்யூம்... டிஷ்யூம்‘ வாள் சண்டை மாதிரி, அவங்க பக்கம் தீப்பொறி பறக்குது. எடப்பாடித் தரப்பு ஓபிஎஸ்.ஸை கட்சியை விட்டு நீக்கறதா தீர்மானம் போட, பதிலுக்கு ஓ.பி.எஸ். எடப்பாடியை நீக்கறதா அறிவிக்கிறார். தேர்தல் ஆணையத்துக்கும் மாறி, மாறி ஓடியிருக்காங்க. அதேபோல் கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை தேர்ந்தெடுப்பதாகவும் அவரே கட்சியின் வங்கிக் கணக்கை நிர்வகிப்பாருன்னும் எடப்பாடித் தரப்பு அறிவிக்க, அதை நிராகரிக்க வேண்டும்னு வங்கிக்கு ஓபி.எஸ். கடிதம் எழுதறார். அதேபோல, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ்.ஸை நீக்குவதாக எடப்பாடி, சட்டப்பேரவை செயலாளருக்கு கடிதம் அனுப்ப, அந்தக் கடிதத்தை ஏற்கக்கூடாதுன்னு ஓ.பி.எஸ். பதில் கடிதம் அனுப்பறார். இப்படி இரு தரப்பிலும் புழுதி பறக்குது.''”
"சரிப்பா, சட்டப்பேரவைச் செயலகம் இவர்களில் யார் கடிதத்தை ஏற்கும்?''”
"இது குறித்து அந்த வட்டாரத்தில் விசாரித்தபோது, அ.தி.மு.க. பொதுக்குழு முடிவுகளைத் தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமா? நிராகரிக்குமா? என தெரிந்த பிறகுதான் பேரவை ஒரு முடிவுக்கு வரும்னு சொல்றாங்க. அதன்படி கட்சியின் அதிகாரம் யார் கைக்கு வருகிறதோ அவருக்குதான் பேரவை தன் கடிதத்தைக் கொடுக்குமாம். அதைத்தான் சட்டமன்ற சபாநாயகர் பரிசீலிப்பாராம். இப்போது யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்பது கேள்விக்குறியா இருக் குது. அதுமட்டும் இல்லாமல், சட்டமன்றம் கூடும் நாளில்தான் இதுகுறித்து சபாநாயகர் முடிவெடுப்பார் என்கிறார்கள். ஆனால் முழுக்க முழுக்க ஓ.பி.எஸ். பக்கம் இருக்கும் டெல்லி, தன் செல்வாக்கை தேர்தல் ஆணையத்தில் காட்டும் என்ற டாக் அடிபடுது. அதனால் எடப்படித் தரப்பு பதட்டத்திலேயே இருக்குது.''”
"காங்கிரஸில் பரபரப்பு தெரியுதே?''”
"காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான திருநாவுக்கரசரின் பிறந்தநாளை அண்மையில் அவரது ஆதரவாளர்கள் பல மாவட்டங்களி லும் தடபுடலாகக் கொண்டாடியிருக்காங்க. இதற்காக எல்லாப் பக்கமும் நிதி திரட்டப்பட்டிருக்கு. வசூலானதில் 20% கூட செலவு செய்யாமல், 80 விழுக்காட்டுக்கு மேல் ஸ்வாஹா பண்ணிவிட்டார்களாம். இதைக்கண்டு எரிச்சலான கட்சி சீனியர்களோ, "திருநாவுக்கரசர் தன் தொகுதி மக்கள்கிட்ட பேரு எடுத்தவரு. அவங்களுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு. அவரோட பிறந்தநாளுக்கு இப்படி வசூல் வேட்டை நடத்தித்தான் அவருக்குப் பிறந்த நாள் கொண்டாடணுமா? இதை எல்லாம் திருநாவுக்கரசர் தடுக்காமல் வேடிக்கை பார்க்கலாமா?' என்றெல்லாம் கேள்வி எழுப்பியதோடு, இது குறித்த புகார்களை கட்சித் தலைவர் சோனியாவுக்கும், ராகுல் காந்திக்கும் அனுப்பிவைத்திருக்கிறார்கள். இது காங்கிரஸில் புகைச்சலைக் கிளப்பி யிருக்கிறது.''
"மத்தியசென்னை பகுதியை ஒரு தி.மு.க. பிரமுகர் கஞ்சா போதையில் தள்ளாட வைக்கிறாராமே?''”
"கஞ்சா தொழிலில் கொடிகட்டிப் பறந்த ரவுடியான நடுக்குப்பம் சிவக்குமார், இறந்து போயிட்டார். இப்ப அவரோட சிஷ்யர்தான் இந்தத் தொழி லில் கலக்கிக்கிட்டிருக்கார். 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களைப் பயன்படுத்தி, அவர்கள் மூலமாக இந்த சட்டவிரோத போதைப் பொருள் பிசினஸை அவர் செய்கிறார். இவர் ஆளுங் கட்சியான தி.மு.க.வில், ஒரு அணியின் துணைப் பொறுப் பில் இருப்பதால் இவரது கஞ்சா பிசினஸையும், போதை மாத்திரை பிசினஸை யும் காவல்துறை கண்டுக்கிற தில்லை. அதோட ஏரியாவில் உள்ள தி.மு.க.வினரையும் இவர் மாதாமாதம் கவனிப்ப தால், இவர் பத்தின புகார்கள் அறிவாலயத்துக்குத் தெரியா மல் பார்த்துக்கிறாங்களாம். பா.ஜ.க. தரப்போ, "முதல்வர் மகன் தொகுதியில் கொடி கட்டிப் பறக்கும் கஞ்சா'ன்னு இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கும் வியூகத்தில் இருக்குதாம்.''”
"கொடநாடு விவகாரத்தில் தினம் ஒரு செய்தி வெளிவருதே?''”
"ஆமாங்க தலைவரே, ஜெ.வின் கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களில் சில, சென்னை சி.ஐ.டி. காலனியில் இருக்கும் ஒரு அபார்ட்மெண்ட்டில் இருந்திருக்கிறது. அதில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நவீன்பாலாஜியின் பாண்டிச்சேரி சொத்து ஒன்றை சசிகலா வாங்கியிருக்கிறார். அது தொடர்பான ஆவணங்களும் அடக்கமாம். அதேபோல் மணல் அதிபர் ஆறுமுகசாமி, அவர் மகன் செந்தில் ஆகியோரிடம் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுகுட்டி மூலம் டொனேசன் வாங்கியிருக்கிறார்கள். அதற் கான விபரங்களும் கிடைத்திருக்கிறதாம். அதனால் ஆறுமுக சாமி, அவர் மகன் செந்தில், நவீன் பாலாஜி, ஆறுகுட்டி ஆகியோரையும் விசாரணை டீம் அழைத்து விசாரித்திருக் கிறது. அப்போது நிறைய தகவல்கள் கிடைத்ததாம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். திட்டக்குழுவின் முன்னாள் துணைத்தலைவரான பேராசிரியர் மு.நாகநாதன் எழுதிய மூன்று நூல்கள் அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்டன. தி.க. தலைவர் கி.வீரமணி, முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி ரொம்ப நாளைக்குப் பிறகு தலைகாட்டியிருக்கார். அவர் பேசும் போது, ’"மாநிங்களுக்கு அதிக அதிகாரத்தை மத்திய அரசு தர வேண்டும்.’என்று குரல் எழுப்பியதோடு, ’தமிழக அரசில் நான் பார்த்த தலைமைச் செயலாளர்களிலேயே எம்.எம்.ராஜேந்திரன், நம்பியார் ஆகிய இரண்டு பேர்தான் கண்டிப்பான தலைமைச் செயலாளர்கள்'னும் ஓப்பனா சொல்லிட்டுப் போனார்.''”