Advertisment

சக்தி பள்ளியில் பாலியல் டார்ச்சர் மரணங்கள்! பகீர் கிளப்பும் வழக்கறிஞர்!

dd

னியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை தற்கொலை என்று அந்தப் பள்ளி நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஸ்ரீமதியின் மரணத்திற்கு என்ன காரணம் என்று பல்வேறு தகவல்கள் வெளிவந்துகொண்டி ருக்கின்றன. இந்நிலையில், 'அந்தப் பள்ளியில் மாணவி களுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது. அதனால் தான் அப்பள்ளியில் தொடர் மரணங்கள் நடக்கின்றன' என விழுப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லூஸி என்பவர் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறுகிறார்.

Advertisment

"26.6.2004 அன்று, சக்தி பள்ளியில் பிளஸ் டூ படித்த, மேகத்தைப் பெயராகக் கொண்ட மாணவி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். அப்பொழுது அதே பள்ளியில் பிளஸ் 1 படித்துக்கொண் டிருந்த நா.குப்பம் என்கிற ஊரைச் சேர்ந்த ரவிச்செட்டியார் என்பவரது மகன் ராஜா அதைப் பார்த்து விடுகிறார். அவர் அதைப்பற்றி வெளியே சொல்லி விடக்கூடாது என்பதற்காக, கோபிநாத் மற்றும் ராமலிங்கம், முசிறியைச் சேர்ந்த ராஜா மற்றும் தற்பொழுது ஸ்ரீமதி வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள பள்ளித் தாளாளர் ரவிக் குமார் ஆகியோர் இணைந்து ராஜாவை கொலை செய்துவிட்டார்கள். அவரது பிணம், பள்ளியின் பாத்ரூமில் படுக்க வைக்கப்பட்டிருந்தது.

Advertisment

srimathi

தற்பொழுது ஸ்ரீமதியின் மரணத்தைப் போலவே, ராஜாவுக் கும், வட இந்திய வாலிபர் ஒருவ ருக்கும், சம்பந்தப்பட்ட மாணவி யைக் காதலிப்பதில் தகராறு என்று மரணத்திற்கான காரணத்தை அன்று கதையாகக் கட்டிவிட்டார் தாளாளர் ரவிக்குமார். அப்போது சக்தி பள்ளி யில் நடந்த அந்த கொலையை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ

னியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை தற்கொலை என்று அந்தப் பள்ளி நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஸ்ரீமதியின் மரணத்திற்கு என்ன காரணம் என்று பல்வேறு தகவல்கள் வெளிவந்துகொண்டி ருக்கின்றன. இந்நிலையில், 'அந்தப் பள்ளியில் மாணவி களுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது. அதனால் தான் அப்பள்ளியில் தொடர் மரணங்கள் நடக்கின்றன' என விழுப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லூஸி என்பவர் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறுகிறார்.

Advertisment

"26.6.2004 அன்று, சக்தி பள்ளியில் பிளஸ் டூ படித்த, மேகத்தைப் பெயராகக் கொண்ட மாணவி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். அப்பொழுது அதே பள்ளியில் பிளஸ் 1 படித்துக்கொண் டிருந்த நா.குப்பம் என்கிற ஊரைச் சேர்ந்த ரவிச்செட்டியார் என்பவரது மகன் ராஜா அதைப் பார்த்து விடுகிறார். அவர் அதைப்பற்றி வெளியே சொல்லி விடக்கூடாது என்பதற்காக, கோபிநாத் மற்றும் ராமலிங்கம், முசிறியைச் சேர்ந்த ராஜா மற்றும் தற்பொழுது ஸ்ரீமதி வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள பள்ளித் தாளாளர் ரவிக் குமார் ஆகியோர் இணைந்து ராஜாவை கொலை செய்துவிட்டார்கள். அவரது பிணம், பள்ளியின் பாத்ரூமில் படுக்க வைக்கப்பட்டிருந்தது.

Advertisment

srimathi

தற்பொழுது ஸ்ரீமதியின் மரணத்தைப் போலவே, ராஜாவுக் கும், வட இந்திய வாலிபர் ஒருவ ருக்கும், சம்பந்தப்பட்ட மாணவி யைக் காதலிப்பதில் தகராறு என்று மரணத்திற்கான காரணத்தை அன்று கதையாகக் கட்டிவிட்டார் தாளாளர் ரவிக்குமார். அப்போது சக்தி பள்ளி யில் நடந்த அந்த கொலையை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை, 'சக்தி பள்ளியில் செக்ஸ் குற்றங்கள் நடக்கின்றது. மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக் கப்படுகிறார்கள். அங்கு நடக்கும் செக்ஸ் குற்றச் செயலைப் பார்த்த ராஜா என்ற மாணவனை, தாளாளர் ரவிக்குமார், அவருக்கு நெருக்கமான கோபிநாத், முசிறியைச் சேர்ந்த ராஜா மற்றும் காவலாளி ராமலிங்கம் ஆகியோர் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள். குற்றவாளிகளைக் கைது செய்!' என்று கோரிக்கை எழுப்பி பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நா.குப்பம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரண்டார்கள். அப்போது வழக்கம்போல தனது சமூகத்தைச் சார்ந்த குண்டர்களை வைத்து இந்தப் போராட்டத்தை நசுக்கப் பார்த்தார் தாளாளர் ரவிக்குமார்.

மக்கள் போராட்டம் மிக வலுவாக நடைபெற்றதால் வேறு வழியின்றி அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, சக்தி பள்ளி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி குற்ற வழக்கு எண் 982/27.06.2004, சின்ன சேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கில் முதல் குற்றவாளி கோபிநாத், இரண்டாவது குற்றவாளி பள்ளித் தாளாளர் ரவிக்குமார், மூன்றாவது குற்றவாளி காவலாளி ராமலிங்கம், நான்காவது குற்றவாளியாக முசிறியைச் சேர்ந்த ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

dd

அதுவரை மாணவர்களுக்கு இடையே காதல் காரணமாக நடைபெற்ற சண்டையால் ஏற்பட்ட மரணம் என்று சொல்லப்பட்ட மாணவன் ராஜா விசயத்தில், முதல் குற்றவாளி கோபிநாத், “"ராஜாவை நான்தான் கழுத்தை மிதித்துக் கொன் றேன். நான் அந்த மாணவியை அணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டு நெருக்கமாக இருந்தபோது அதை மாணவர் ராஜா பார்த்து விட்டார். அதனால் தான் அவரை நாங்கள் கொலை செய்தோம்' என்று போலீசில் வாக்குமூலம் வழங்கினார்.

ராஜாவின் பிணத்தை, பழமலை, தமிழரசி ஆகிய இரு டாக்டர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்தார்கள். அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப் போர்ட்டில், 'ராஜாவின் காலர்போன் எனப் படும் கழுத்து எலும்பு உடைந்திருந்தது. கழுத்து முழுவதும் காயங்கள் இருந்தது. கழுத்துப்பகுதி நெரிக்கப்பட்டதால் தொண்டைக்குழி சேத மடைந்து இருந்தது. அவரது நாக்கு வெளியே தள்ளி இருந்தது. உடல் முழுவதும் எலும்புகள் உடைக்கப்பட்டிருந்தன. ராஜாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார்கள். மூச்சுத்திணறலால் நுரையீரல் பாதிக்கப்பட்டு நுரையீரல் சேதம் மற்றும் இதயத்தில் இருந்து அழுத்தத்துடன் வெளியேறிய ரத்த சேதம் ஆகியவற்றால் ராஜா மரணமடைந்தார். ராஜாவின் மரணம் ஒரு கொலை. அவரது கை விரல்களில் நகங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அவர் கொடுமையான சித்திரவதைக்கு உள் ளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கிறார்' எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீமதியின் மரணத்தைப் போலவே, உடலில் ஏற்பட்ட பல்வேறு காயங்களால் ரத்தக் கசிவு ஏற்பட்டு, சக்தி பள்ளி மாணவர் ராஜா மரணமடைந்தார். வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சி கள் மக்களைத் திரட்டிப் போராடியதன் விளைவாகவே அன்று உண்மை வெளிவந்தது. கைது செய்யப்பட்ட தாளாளர் ரவிக்குமார் அன்றும், 'நான் குற்றம் செய்யவில்லை' என்றார். இப்போது ஸ்ரீமதி மரண விஷயத் தில் சொல்வது போலவே ரவிக் குமார், ராஜாவின் மரணத்தை அன்று போலீசாருக்கு தெரிவிக்க வில்லை. அந்த மரணத்தைப் பற்றி பல கட்டுக் கதைகளை அளந்துவிட்டு, அந்த கொலை நிகழ்வை மறைக்க முயற்சித்தார். ஆனால் இறுதியில் மக்கள் போராட்டம் வலுவாக நடந்த தால் ரவிக் குமாரின் தாயார் பார்வதி அம்மாளிடம் பள்ளி வளாகத்தில் நடந்த மரணம் எனப் புகார் பெற்று, போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள்.

அதில் முதல் குற்றவாளியாக ரவிக்குமா ரைச் சேர்க்காமல் அந்தப் பள்ளியில் பணியாற் றிய கோபிநாத் என்பவரை முதல் குற்றவாளியாக ஆக்கினார்கள். தாளாளர் ரவிக்குமார் மீது, 'கொலையில் ஈடுபட்டார் (302), மற்றும் கொலையை மறைக்க முயன்றார் (202)' ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அந்த கொலை வழக் கின் விசாரணையில், அனைத்து சாட்சிகளையும் ரவிக்குமார் பெரும் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டார். போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர்களில் ஒருவர், 'இந்த மரணம், கையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததால் நடந் திருக்கலாம் அல்லது துணியால் கழுத்தை நெரித் துக் கொலை செய்ததால் நடந்திருக்கலாம்' என, ரவிக்குமாரின் வழக்கறிஞர் நடத்திய குறுக்கு விசாரணையில் தெரிவித்தார். அந்த மரணத்துக் குக் காரணமான முக்கிய சாட்சியான, சம்பந்தப்பட்ட மாணவி உட்பட பெரும்பாலான சாட்சிகள் பல்டி சாட்சிகளாக மாறிப்போனார்கள்.

ravikumar

வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ' கையால் அழுத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது துணியால் அழுத்திக் கழுத்தை இறுக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம்' என, போஸ்ட்மார்ட் டம் செய்த டாக்டரே கொலை எப்படி நடந்ததெனத் தெளிவாகக் கூறாததால், இந்தக் கொலை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட வில்லை' என ரவிக்குமாரை விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாணவர் ராஜாவின் அப்பா ரவிச்செட்டியார் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்யக்கூடாது என்பதற்காக ஒரு பெருந்தொகை வழங்கப்பட்டது'' என கோர்ட் ஆவணங்களின் அடிப்படையில் வழக்கறிஞர் லூஸி பரபரப்பான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததுடன், "மாணவர் ராஜாவின் மரணத்தில் நடந்ததைப் போல்தான் ஸ்ரீமதி மரணத்திலும் நடந்திருக்கும்'' என்கிறார்.

சக்தி பள்ளியில் 2007ஆம் ஆண்டு பிரகாஷ் என்கிற மாணவரின் மரணம் நடந்தது. இந்த முறை பிரகாஷின் உடல் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்படவில்லை. வெளியே ஒரு கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. அதில் எந்த இடத்திலும் ரவிக்குமார் வரவில்லை. சின்ன சேலம் காவல் நிலையத்திலேயே அந்த வழக்கு முடிந்து போனது. அந்த வழக்கு பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விழுப்புரம் நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் கேட்டபோது, “அப் படி ஒரு வழக்கு சின்ன சேலம் காவல் நிலையத் திலிருந்து எங்கள் நீதி மன்றத்திற்கு வரவில்லை” என்று நீதிமன்றமே தெரிவித்திருக்கின்றது.

அந்த அளவிற்கு காவல்துறையில் செல்வாக்கு மிக்கவர் ரவிக்குமார் என வழக்கறிஞர்கள் தெரி விக்கின்றார்கள். இதுபோல இதுவரை ஏழு மர ணங்கள் சக்தி பள்ளியில் நடந்துள்ளன என்றும், அதே பள்ளி மீண்டும் இயங்குவதற்காக அனைத்து வேலைகளும் மிக வேகமாக நடந்து கொண்டிருப்பதாகவும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றார்கள்.

______________

இறுதிச் சுற்று!

d

நடிகர் கமல்ஹாசன், நவம்பர் 7, 2022 அன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு, தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு வருகை தந்தார். அங்கே நடந்துகொண்டிருந்த மருத்துவ முகாமைப் பார்வையிட்ட கமல்ஹாசன், தனது கட்சித் தொண் டர்களையும், ரசிகர்களையும் சந்தித்து, அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார்.

nkn091122
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe