ரு அழகான பெண். சுற்றி டாக்டர்கள் ""நானே விருப்பப்பட்டுதான் செய்தேன். என் அனார்கலி அக்காவை விட்டுவிடுங்கள் அவுங்கதான் எனக்கு அடைக்கலம் கொடுத்தாங்க. நான் அம்மா, அப்பா இல்லாமல் தனி ஆளா நின்னப்ப நீங்கள்லாம் எங்க போனீங்க'' என்று கதறுகிறார்.

ccc

""இதுவரை மாதம் 20 பேர் என்று இந்த ஐந்து வருடத்தில் 600 பேருக்கு மேல் சர்வீஸ் செய்திருக்கேன் உடம்பெல்லாம் வலிக்குது'' என்று "மகாநதி' படத்தில் கமலின் குழந்தை தூக்கத்தில் உளறுவதுபோல... "ஓ' வென்று கத்திய பெண்ணுக்கு 18 வயதுகூட நிரம்பவில்லை.

"சம்பந்தப்பட்ட அந்த அஞ்சலி டீமை பிடிச்சாச்சு' என்றும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டாலும், உறுதியான தகவல் ஏதும் இல்லை..

Advertisment

அங்கும் இது குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், நேர்மையான காக்கிகள் சிலர், காதைக் கடித்தனர்.

பாலசந்தர் தயாரித்த, "அப்பு' பட ராணியின் பாலியல் சாம்ராஜியத்தை மிஞ்சும் அளவில் மதுரையின் ’’டாப்ஒன்’’ டீமில் உள்ள அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், ஜெயலெட்சுமி, இவர்களை கடந்த 10 வருடமாக விபச்சார ஒழிப்பு போலீஸார் எத்தனை டீம் போட்டு மடக்க நினைத்தாலும் கையும் களவுமாக பிடிக்க முடியாதாம். அந்த அளவுக்கு நெட்ஒர்க் உள்ளதாம். இவர்களை "அஞ்சலி டீம்'’ என்கிறார்கள். 400 பெண்கள் இவர்களிடம் உள்ளனர்.

இவர்களைக் காப்பாற்ற யார் யாரோ கைதாவார்கள். நகரின் முக்கிய புள்ளிகள் தலையிடுவார்கள். தனித் தனியாக போலீஸிடம் பிடிபட்டாலும் சில நாட்களில் வெளியே வந்துவிடுவார்கள். சமூக வலைத்தளங்களைக்கூட பயன்படுத்தாமல், ரகசியமாகவே இவர்கள் இயங்குகிறார்கள். "சர்வீஸ் இருக்கா?' என்பதுதான் இவர்களின் கோட் வேர்ட்.’’ இதை வைத்தே தங்களைத் தொடர்புகொள்பவர் ’’புதிய கஸ்டமரா,’பழைய கஸ்டமரா’’என்று புரிந்து கொள்வார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோட் வேர்டு மாற்றப்படுமாம். பழைய கோடு வேர்டு தெரிந்த நம்பிக்கையான கஸ்டமர்கள் என்றால்தான் தொடர்ந்து பேசுவார்கள்.

Advertisment

மதுரையில் அண்ணா நகரில் தொடங்கி பீபிகுளம், உத்தங்குடி கே.கே.நகர், திருநகர் என்று மிகப் பணக்காரர்கள் இருக்கும் ஏரியாவில்தான் 6 மாதத்திற்கு ஒருமுறை பெரிய பெரிய வீடுகளை வாடகைக்கு எடுத்து பிஸினஸ் செய்கிறார்கள். 4 வருடமாக வெறிபிடித்து 7 பேர் கொண்ட போலீஸ் டீம் இவர்களை பின்தொடர்ந்தும், பிடிக்க முடியாமல் போனதுதான் ஹைலைட்.

ch

இந்நிலையில், விபசாரத் தடுப்பு ஆள் கடத்தல் பிரிவுக்கு திடீரென போன்வரும். மதுரை அண்ணா நகரில் இந்த இடத்தில் இந்த கஸ்டமரோடு இருப்பதாக சொல்லி போலீஸாரின் அட்டென்சனை திசை திருப்பிவிட்டு வேறு இடத்தில் முக்கிய வி.ஐ.பி.யோடு சர்வீஸ் நடந்துகொண்டிருக்குமாம் அப்படித்தான் 23-ம் தேதியும் விபச்சார ஆள் கடத்தல் பிரிவுக்கு போனில் ஒரு பெண் பேசியுள்ளார்.

""சார், ஜெயலெட்சுமி ஏற்பாட்டில் ரிசார்ட்ஸில் கும்மாளம் அடிக்கிறார்கள்'' என்று போனை வைக்க, இந்தமுறை போனை டிராக் செய்த போலீஸ், பேசியது அனார்கலிதான் என்று தெரிந்து பிடித்தே ஆகவேண்டும் என்று உடனே 10 பேர் கொண்ட குழு அனார்கலியின் வீட்டை சுற்றி காய்கறிக்காரனாக, அயர்ன்வண்டிக்காரனாக என்று நோட்டமிட... உள்ளூர் ஆட்டோவில் அனார்கலி, வடஇந்திய நடிகைபோல இருந்த பெண்ணுடன் சென்றுள்ளார்.

காலையில் அவர்கள் ஜவுளிக்கடை, ரெஸ்டாரண்ட் என்று சுற்றிவிட்டு மாலையில் மதுரை ராஜாமுத்தையா மன்ற எதிரில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளனர். திரும்பவும் வீட்டிற்கு ஆட்டோவில் வந்து இறங்கியபோது அனார்கலி மட்டுமே இருந்துள்ளார். போலீஸாருக்கு அதிர்ச்சி.

6 பேர் அடங்கிய டீம் அனார்கலியை சுற்றி வளைத்து அவளிடமிருந்த போனை பிடுங்கி... அவளின் நெற்றியில் துப்பாக்கிய வைத்து’’"உன்னை என்கவுன்ட்டர் போடச் சொல்லி ஆர்டர் வந்திருக்கு'’’ என்று மிரட்டி, "எப்படி அந்த ஏ.டி. எம்மிலிருந்து ஆட்களை அனுப்பி வச்சே'’’என்று கேட்க... "இரண்டு பைக்கில் புர்க்காவோடு வந்த நபர்கள் இவளுக்கு புர்கா போட்டு ஆளோடு ஆளாக கூட்டிப் போய்விட்டார்கள்' என்று சொல்ல, மேலும் அந்த வடநாட்டு அழகிக்கு போன்போட்டு "அவள் எங்கு இருக்கிறாள்'’ என்று கேட்க, வேறு வழியின்றி "சீக்கிரம் வா... இங்கு புதிய பெரிய பார்ட்டி வந்திருக்கு 50,000 ஒரு சர்வீஸ்க்கு'’என்று சொல்லி வரவழைக்க... வந்து இறங்கிய அழகியை மடக்கிப் பிடித்தபோதுதான் போலீஸுக்கு மீண்டும்.அதிர்ச்சி.

அவர் வட நாட்டு அழகியோ நடிகையோ அல்ல. மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த குஷ்பூ என்ற பெயர் மாற்றப்பட்ட 18 வயது பூர்த்தியாகாத சிறுமி. அவரைக் காப்பாற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முழு உடல் பரிசோதனைக்கு அனுப்பிவைக்க அங்கு மீண்டும் பேரதிர்ச்சி காத்திருந்தது போலீஸாருக்கு.

cc

மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்ததில், பாலியல் கொடூரத்தால் அவருக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது அறிந்து, விசாரித்திருக்கிறார்கள். அப்போது அந்தப் பெண் சொன்னது... அங்கி ருந்த டாக்டர்களுக்கே கண்ணீர் வரவழைத்தது. ""எனக்கு 10 வயதில் என் அப்பா இறக்க, அம்மா அந்த அதிர்ச்சியில் பைத்தியமாகிவிட்டார். இருவரும் காதல் திருமணம் என்பதால் தாங்க முடியாமல் இப்படி ஆனதால் எனது தூரத்து அத்தை முறை உறவினர் ஜெயலெட்சுமி என்னை வளர்த்தார். நான் 13 வயதில் பெரியவளானேன். அப்போது, அவர் குடித்து விட்டுத்தான் படுப்பார். எனக்கும் குடிக்கச் சொல்லிக்கொடுத்தார். அன்று காலை எழுந்திரிக்கும்போது ஒரு ஆம்பிளை என் மீது படுத்திருந்தான். நான் மிகவும் அழுதேன்... கத்தினேன். அப்புறம் என்னை சமாதானம் செய்து பணம், செல்போன் என ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கி ஒரு வழியாக இந்தப் பாதைக்கு தள்ளிவிட்டாள் ஜெயா அத்தை. ஒரு மாதத்திற்கு 15 நபர்களோடு இருப்பேன். இப்படி கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இதுவரை 600 பேர்களுக்கு சர்வீஸ் செய்துள்ளேன்'' என்று சொல்ல சொல்ல... அனைவரும் அதிர்ச்சியாகினர்.

தற்போது 50 வயதுக்கு உண்டான அளவுக்கு அவரது உடல் மிகவும் மோசமாக இருப்ப தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் அதிர்ந்துபோன போலீஸார் அந்த முழு டீமான அனார்கலி டீமை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆள்கடத்தல், விபச்சாரத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமா மாலாவிடம், இதுகுறித்து கேட்டபோது... ""10 வருஷமாக போலீஸுக்கு தண்ணி காட்டிய மதுரையின் டாப் ஒன் டீமை ஒருவழியா பிடித்துவிட்டோம். இதோடு என் பொறுப்பு முடிந்துவிட்டது. தல்லாகுளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்து அவர்களை சிறையில் அடைத்துவிட்டேன். மேற்கொண்டு தகவல் வேண்டுமென்றால் ஆய்வாளர் புவ னேஷ்வரியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்'' என்றார்.

நாம் புவனேஷ்வரியை தொடர்பு கொண்டபோது, ""அந்த ஐவரை கைது செய்து சிறையில் தள்ளிவிட்டோம். அந்தச் சிறுமியை அரசு காப்பகத்தில் சேர்த்துள் ளோம்'' அவ்வளவுதான் என்று நிறுத்திக்கொண்டார். பெரிய இடத்திலிருந்து பிரஷர் அதிகமாக வருவதாகவும், இந்தப் பிரச்சினையை பெரிதாக்காமல் மறைக்கவே வேலை நடப்பதாகச் சொல்கிறார்கள். மைனர்பெண்ணை பயன்படுத்திய டீமில், அரசியல்வாதிகளிருந்து பல முக்கிய நபர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து யாரும் வாயே திறக்க மறுக்கிறார்கள்.

""மதுரையில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்... 600-க்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் முகவர்கள் என கொடுரச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்து போக்சோ சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை. எடுக்கவேண்டும். மேலும் இதற்கு பின்புலமாக இருந்தவர்கள் அதற்கு உதவியர்கள் உள்ளிட் டோரை போலீசார் கைது செய்ய வேண்டும்'' என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

"குஷ்பு, சமந்தா, சிம்ரன், நயன்தாரா என்ற அடைமொழியோடு இன்னும் எவ்வளவோ சிறுமிகள் ஆதரவின்றி இப்படி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதைத் தடுத்து நிறுத்தவேண்டும்' என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.

-அண்ணல்