பி.எல்.சந்தோஷ். இவர் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர். தமிழகத்தில் பா.ஜ.க.வினர், அதன் தலைவர் அண்ணாமலை மீதும் அவருக்கு நெருக்க மானவர்கள் மீதும் எழும் புகார்கள் அனைத் திலும் பி.எல்.சந்தோஷுக்கு நேரடித்தொடர்பு உண்டு என ஆதாரத்துடன் குற்றம் சாட்டு கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

டிசம்பர் மூன்றாம் தேதி ஐ.டி.பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளிடமிருந்து மூவாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஆறு கோடி ரூபாய் கடனைப் பெற்று மோசடி செய்தார் என சுரானா என்கிற நிறுவனத் தின் இயக்குனர்கள் தினேஷ்சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் சுரானா, ஆனந்த் ஆகியோர் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், ஜாமீன் கொடுக்க முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

dd

Advertisment

இந்த சுரானாவை சி.பி.ஐ. வழக்கிலிருந்தும் அமலாக்கத் துறை வழக்கிலிருந்தும் காப்பாற்றுவதாக அமர்பிரசாத் ரெட்டியும், அண்ணாமலையும் வாக்குறுதி அளித்திருந்தனர். பி.எல்.சந்தோ ஷும் உறுதி அளித்திருந்தார். அதனால் சுரானா, பா.ஜ.க.வின் தமிழகப் பிரிவுக்கு தகவல் தொழில்நுட்ப உதவிகளை செய்தார். சுரானா வுக்கு சொந்தமான கட்டிடத்தில்தான் அண்ணாமலையும், அமர்பிரசாத் ரெட்டியும் பா.ஜ.க.வின் தமிழக ஐ.டி. பிரிவை நடத்தினார்கள். அந்த அலுவலக திறப்பு விழாவுக்கு பி.எல். சந்தோஷ் தலைமை தாங்கினார். டிசம்பர் மூன்றாம் தேதி சென்னை உயர்நீதிமன்றம், சுரானாவை மோசடி வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான ரமேஷ், "தினேஷ் சந்த் சுரானா நேரடியாக முன்ஜாமீன் கேட்காமல், ஆனந்த் என்பவரை டம்மியாக மனுத்தாக்கல் செய்ய வைத்துள்ளார். ஆனந்த், நான் பெரிதாகப் படிக்கவில்லை என்று கூறினார். ஆனால் சுரானா கம்பெனியின் இயக்குனராக பல ஆண்டுகளாக இருந்து முக்கியக் குற்றவாளிகளான சுரானாக்கள் செய்த மோசடிக்கு துணையாக இருந்துள்ளார். எனவே ஆனந்தையும் சுரானாக்களையும் ஜாமீனில் விட்டால் அவர்கள் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள்'' என வாதிட்டார்.

ddஇந்த வாதம் பி.எல்.சந்தோஷும் தமிழக பா.ஜ.க. தலைவர்களும் சுரானாவை காப்பாற்றுவோம் எனக் கொடுத்த வாக்குறுதிகளுக்கு எதிராக இருந்தது சுரானா கம்பெனியை அதிர்ச்சியடைய வைத்தது. இது அவர் களுக்கும் சுரானாவுக்கும், தமிழக பா.ஜ.க.வுக்குமான மோதலாக உருவெடுத் தது. இதுபற்றி பி.எல்.சந்தோஷுக்கும் தகவல் போனது. "நான் எட்டாம் தேதி தமிழகம் வருகிறேன், சென்னை உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் மறுக்கப்பட்ட ஒரு பொருளாதார குற்றவாளி சுரானா. அவருக்கு சொந்த மான அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க.வின் ஐ.டி. விங்க் செயல்பட்டது. அதன் திறப்புவிழாவை நான் நடத்திவைத்தேன் என எந்தத் தகவலும் பா.ஜ.க.வின் இணையதளங்களில் இருக்கக்கூடாது. அவை அனைத்தையும் அழித்துவிடுங்கள்' என பி.எல்.சந்தோஷ் உத்தரவிட, அந்தப் புகைப்படங் களை தமிழக பா.ஜ.க.வினர் எடுத்துவிட்டனர். சுரானாவின் அலுவலகத்திலிருந்து மாறிய பா.ஜ.க.வின் ஐ.டி. விங்க், முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் உதவியாளராக இருந்த ராமச்சந்திரனின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் உதவியாளர் என தன்னை சொல்லிக்கொள்ளும் அமர் பிரசாத் ரெட்டி, அடிப்படையில் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நபராகத்தான் இருந்துள்ளார். அதற்கு ஆதாரமாக ஒரு புகாரைக் காட்டுகிறார்கள் பா.ஜ.க.வினர்.

சென்னையைச் சேர்ந்தவர் டாக்டர்.பி.எல்.மோட்ஷராகிணி. இவர், "ஹேப்பி மெய்ட்ஸ் இண்டியா' என்கிற பெயரில் வீட்டு வேலைக்கு ஆள் அனுப்புவதோடு, "ஹேப்பி அன்ட் சாரிட்டி' என்கிற பெயரில் பெண்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்திவந்துள்ளார். இவர் நடத்திய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பல வி.ஐ.பி.க்கள் கலந்துகொள்வார்கள். அதுவே செய்தியாக வெளிவந்திருக்கிறது. இந்த டாக்டர் பி.எல்.மோட்ஷராகிணி குன்றத்தூர் காவல் நிலையத்தில் வர்ஷா, தீபக் ஆகிய இருவர் மீது 2020ஆம் ஆண்டு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் "பா.ஜ.க.வின் நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டி மூலம் வர்ஷா, தீபக் ஆகிய இருவரும் என்னை மிரட்டுகிறார்கள்' என குறிப்பிட்டுள்ளார். அப்பொழுது குன்றத் தூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் சந்துரு. ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையில் இருந்த சந்துரு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ் கருக்கு நெருக்கமானவர். அவர் மோட்ஷராகிணி கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்நிலையத்திற்கு கால்கடுக்க அலைந்து ஓய்ந்துபோன மோட்ஷராகிணி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் எப்.ஐ.ஆர். போடப்பட்டது. அந்தப் பகுதியில் காவல்துறை ஏ.சி.யாக இருந்த அதிகாரி வர்ஷா, தீபக் மற்றும் அமர்பிரசாத் ரெட்டி மீது பாலியல் மற் றும் பண மோசடி வழக்கு பதிவு செய்ய ஆய்வாளர் சந்துருவுக்கு உத்தரவிட்டார். இந்தத் தகவலை அமர்பிரசாத் ரெட்டிக்கு ‘பாஸ்’ செய்தார் ஆய்வாளர் சந்துரு. இதுபற்றி அண்ணாமலைக்கும் தகவல் போனது. ஏ.சி.யை போனில் பிடித்த அமர் பிரசாத் ரெட்டி, "நான் மத்திய அரசுக்கே அட்வைஸ் செய்பவன். என் மீது வழக்கா?' என எகிறினார். அத்துடன், "தனக்கு நெருக்கமான அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் ஏ.சி.யை மிரட்டி னார்' என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

இதுபற்றி மோட்ஷராகிணியிடம் கேட்ட போது, "அமர்பிரசாத் ரெட்டி, வர்ஷா, தீபக் ஆகி யோர் மீது நான் பண மோசடி புகார் கொடுத்தது உண்மைதான். வர்ஷா பல லட்சம் ரூபாய் என்னை ஏமாற்றிவிட்டார். அமர்பிரசாத் ரெட்டி பேரைச் சொல்லி என்னை மிரட்டினார். நான் கொடுத்த புகாரை ஆய்வாளர் சந்துரு கண்டுகொள்ள வில்லை. நான் நீதிமன்றத்துக்குப் போய் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பெற்றேன். அதையும் சந்துரு மதிக்கவில்லை. நான் அலைந்து திரிந்து ஓய்ந்து போய்விட்டேன்'' என வருத்தத்துடன் கூறினார். இது பற்றி நம்மிடம் பேசிய ஆய்வாளர் சந்துரு, "அது பழைய கேஸ் சார். இப்ப மோட்ஷ ராகிணியை வரச் சொல்லுங்க... பேசி முடிச்சுக்கலாம்'' என்றார்.

அமர்பிரசாத் ரெட்டியும் விஜயபாஸ்கரும் டிகிரி தோஸ்துகள். விஜயபாஸ்கரையும் சுரானா வையும், அமர்பிரசாத் ரெட்டியும் அண்ணாமலை யும், பி.எல்.சந்தோஷுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். சுரானா மீது அமலாக்கத்துறையும் சி.பி.ஐ.யும் வழக்குப் போட்டிருக்கிறார்கள். அதேபோல் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.யும் வருமான வரித்துறை தனியாக ஒரு வழக்கையும் போட்டிருக்கிறார்கள். சுரானா, விஜயபாஸ்கர் இருவரையும் காப்பாற்றுவோம்'' என ஒட்டுமொத்த தமிழக பா.ஜ.க.வும் களமிறங்கி பி.எல்.சந்தோஷ் மூலமாக முயற்சி செய்தது. அதில் அமர்பிரசாத் ரெட்டியும் அண்ணாமலையும் முன்னிலை வகித்தார்கள்.

கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி விஜய பாஸ்கர் தொடர்பான வருமானவரித்துறை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அதில் வருமானவரித்துறை ஒரு வில்லங்கமான பதில் மனு தாக்கல் செய்தது. கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தொகுதி யில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது வாக் காளர்களுக்கு பணப் பட்டுவாடா aaசெய்ததாக வந்த புகாரை அடுத்து, விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு புதுக்கோட்டையில் உள்ள குவாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதில் பான் மசாலா, குட்கா உற்பத்தியாளர்களிடமிருந்து ரெண்டு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றுள்ளார் விஜயபாஸ்கர். அதில் முப்பத்திஐந்து லட்சம் ரூபாயை கூவத்தூரில் எடப்பாடி முதல்வ ராக ஆவதற்காக செலவழித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதினெட்டு கோடி ரூபாயை வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய வைத்திருந்தார். குவாரி மூலமாக முன்னூத்தி 42 கோடி ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளது. மொத்தத்தில் அவர், மூவாயிரத்து இருநூற்றி எழுபது கோடி ரூபாய்க்கு வரி கட்டவில்லை. அவர் கட்ட வேண்டிய இருநூற்று ஆறு கோடி ரூபாய் வரிக்காக அவரது சொத்துக்கள் வங்கிக் கணக்குகளை முடக்கினோம். அதில் நூற்றிப் பதினேழு ஏக்கர் நிலங்கள் மற்றும் நான்கு வங்கிக் கணக்குகள் வருகின்றன என தெளிவாக வருமான வரித்துறை பதில் அறிக்கை தாக்கல் செய்துள் ளது. ஒரேநேரத்தில் சுரானா வின் ஜாமீன் மனு ரத்து செய்யப்படுகின்றது. விஜய பாஸ்கர் மீது வருமான வரித் துறை பாய்ந்து அவரது சொத்துக்களை முடக்கு கின்றது. குட்கா வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சீரியஸாக வழக்கை கொண்டு சென்று கொண்டிருக்கின்றது. சுரானாவையும், விஜய பாஸ்கரையும் காப்பாற்றுவோம் என பி.எல். சந்தோஷ் மூலம் வாக்குறுதியளித்த அமர் பிரசாத் ரெட்டியும் அண்ணாமலையும் கைவிரித்து விட்டார்கள். பி.எல்.சந்தோஷுக்கும் அமித் ஷாவுக் கும் இடையே தகராறு, அதனால் அமித் ஷா சொல்லித்தான் சுரானா, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது மத்திய அரசு பாய்ந்திருக்கிறது என புதிய விளக்கத்தை அமர்பிரசாத் ரெட்டி தரப்பு தற்பொ ழுது சொல்லிவருகின்றது என்கிறார்கள் பா.ஜ.க. வைச் சேர்ந்தவர்கள். அமித்ஷா இத்துடன் விடுவாரா... அண்ணாமலையின் தமிழக பா.ஜ.க. தலைவர் என்கிற பதவியையும் காலி செய்வாரா? என்பது தான் தமிழக பா.ஜ.க.வினர் மத்தியில் நிலவும் மில்லியன் டாலர் கேள்வி.