"ஹலோ தலைவரே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருத்தர் எழுதிய கடிதத்தால திருச்சி தி.மு.க.வே பரபரப்பாகியிருக்காமே?''
"ஆமாம்பா... கடந்த வாரத்தில் லால்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன், அமைச்சர் கே.என்.நேருவுக்கு மன வருத்தத் தோட கடிதம் எழுதியிருந்தாராம்... அதில், டெண்டர்கள் ஒதுக்குவதில் பாரபட்சம் பார்க் கப்படுவதாகவும், எம்.எல்.ஏ.க்களை இது விஷயத்தில் புறக்கணிக்கிறார் கள் என்று ஆதங்கப் பட்டிருக்கிறார்கள். உடனே அமைச்சர் நேரு, அதிருப்தி தெரி வித்த எம்.எல்.ஏ.க் களான திருச்சி ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனி ஆண்டி, மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன், லால்குடி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட மூவரை யும் அழைத்ததோடு, மாவட்ட ஆட்சி யரின் முன்னிலை யில், 'அந்தந்த தொகுதிகளில் இருக் கக்கூடிய பணிகளுக் கான டெண்டர்களை, தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களிடமே விட்டுவிடுங்கள். அவர்கள் பார்த்து டெண்டரை ஒதுக்கிக் கொள்ளட்டும்' என்று சமா தானப்படுத்தினாராம். அதோடு, தன்னுடைய மகன் அருண்நேருவிற்கு பெரம்ப லூர் பாராளுமன்றத் தொகுதி யில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ள தால், கட்சிக்குள் எந்தவித அதிருப்தியும் ஏற்படாதவாறு சுமூகமான நிலைமை இருக்க ணும்னு எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். நேரு வெளிப்படையாகத் தங்களிடம் பேசியதில் அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு ரொம்பவே திருப்தியாம்.''
"அரசுப் பணியாளர் தேர்வாணைய விசயத்தில் ராஜ்பவன் மீண்டும் வேதாளம் பாணியில் முருங்கை மரம் ஏறியிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழக அரசு கையெழுத்துக்காக அனுப் பும் முக்கியமான ஃபைல் களை எல்லாம் கிடப்பில் போட்டோ அல்லது திருப்பி அனுப்பியோ பிரச்சினை செய்வதை வழக்கமா வைத்திருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி. இப்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர் பான தி.மு.க. அர சின் கோப்பினைத் திருப்பி அனுப்பி, மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற் படுத்தியிருக்கிறார். இந்தத் தேர்வாணை யத்தில் காலியாக இருக்கும் தலைவர் மற்றும் 8 உறுப் பினர்களின் பதவியை நிரப்ப வேண்டும் என்று கல்வியாளர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வந்தபடியே இருந்த தால்தான், அரசு அ
"ஹலோ தலைவரே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருத்தர் எழுதிய கடிதத்தால திருச்சி தி.மு.க.வே பரபரப்பாகியிருக்காமே?''
"ஆமாம்பா... கடந்த வாரத்தில் லால்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன், அமைச்சர் கே.என்.நேருவுக்கு மன வருத்தத் தோட கடிதம் எழுதியிருந்தாராம்... அதில், டெண்டர்கள் ஒதுக்குவதில் பாரபட்சம் பார்க் கப்படுவதாகவும், எம்.எல்.ஏ.க்களை இது விஷயத்தில் புறக்கணிக்கிறார் கள் என்று ஆதங்கப் பட்டிருக்கிறார்கள். உடனே அமைச்சர் நேரு, அதிருப்தி தெரி வித்த எம்.எல்.ஏ.க் களான திருச்சி ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனி ஆண்டி, மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன், லால்குடி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட மூவரை யும் அழைத்ததோடு, மாவட்ட ஆட்சி யரின் முன்னிலை யில், 'அந்தந்த தொகுதிகளில் இருக் கக்கூடிய பணிகளுக் கான டெண்டர்களை, தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களிடமே விட்டுவிடுங்கள். அவர்கள் பார்த்து டெண்டரை ஒதுக்கிக் கொள்ளட்டும்' என்று சமா தானப்படுத்தினாராம். அதோடு, தன்னுடைய மகன் அருண்நேருவிற்கு பெரம்ப லூர் பாராளுமன்றத் தொகுதி யில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ள தால், கட்சிக்குள் எந்தவித அதிருப்தியும் ஏற்படாதவாறு சுமூகமான நிலைமை இருக்க ணும்னு எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். நேரு வெளிப்படையாகத் தங்களிடம் பேசியதில் அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு ரொம்பவே திருப்தியாம்.''
"அரசுப் பணியாளர் தேர்வாணைய விசயத்தில் ராஜ்பவன் மீண்டும் வேதாளம் பாணியில் முருங்கை மரம் ஏறியிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழக அரசு கையெழுத்துக்காக அனுப் பும் முக்கியமான ஃபைல் களை எல்லாம் கிடப்பில் போட்டோ அல்லது திருப்பி அனுப்பியோ பிரச்சினை செய்வதை வழக்கமா வைத்திருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி. இப்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர் பான தி.மு.க. அர சின் கோப்பினைத் திருப்பி அனுப்பி, மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற் படுத்தியிருக்கிறார். இந்தத் தேர்வாணை யத்தில் காலியாக இருக்கும் தலைவர் மற்றும் 8 உறுப் பினர்களின் பதவியை நிரப்ப வேண்டும் என்று கல்வியாளர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வந்தபடியே இருந்த தால்தான், அரசு அதற் கான ஒரு பட்டிய லைத் தயார் செய்து ராஜ்பவனுக்கு அனுப் பியது. இதில் தேர் வாணையத் தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபு தேர்வுசெய்யப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.''”
"இது குறித்து தேர் வாணையத் தரப்பு என்ன நினைக்கிது?''”
"தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனங்கள் என்பது முதல் வரின் விருப்பம் சார்ந்த உரிமையைப் பொறுத்தது. ஒன்றிய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் பிரதமரின் விருப்புரிமையின்படிதான் நியமிக்கப்படுகிறார்கள். அந்த அளவுகோல் இதற்கும் பொருந்தும். எனவே, முதல் வரின் உரிமையில் யாரும் தலையிட முடியாது. காரணம், முதல்வருக்கு இதில் பல்வேறு சமூகக் கண்ணோட்டம் இருக்கும். அதனால் இது குறித்து கவர்னரால் கேள்வி கேட்க முடியாது. அப்படி இருக்க, இந்த கோப்பினை திருப்பி அனுப்புவது கவர்னரின் உள்நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது. அவர் தேவையற்ற சர்ச்சைகளையும் மோதலையும் உருவாக்குகிறார் என்கிறார்கள். தி.மு.க. அரசோ, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.''”
"தான் நடத்திய மதுரை மாநாடு தொடர்பாக எடப் பாடி, பல்வேறு ஆதங்கத்தில் இருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, என்னதான் கோடிக்கணக்கில் பணத்தை இறைத்து மாநாட் டுக்குக் கூட்டத்தைக் கூட்டி, மாஸ் காட்டினாலும், அங்கே 750 அடுப்புகள் வைத்து சமைத் தும், குப்பையில் வீசப்பட்ட உணவு, பாதியிலேயே எழுந்து சென்ற கூட்டம் என்று பல்வேறு குறைகள் எடப்பாடியின் மனதை அழுத்தி வருகிறதாம். அதிலும் நெல்லை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த கட்சிக்காரர்கள்தான் மாநாட்டுக்கு மதி யத்திற்கு மேல் தலையைக் காட்டி விட்டுச் சென்றார்களாம். இவை எல்லாம் அவரை சோர்வடையச் செய்திருக்கிறதாம். இவற்றை எல்லாம் கவனிக்காத கட்சி நிர்வாகிகளையும் மா.செ.க்களையும் வைத்துக்கொண்டு வரும் காலங்களில் எப்படி தேர்தல்களை எதிர்கொள்வது? என்று அவர் ரொம்பவே புலம்புகிறாராம்.''”
"மாஜி மந்திரி ஆர்.பி. உதயகுமார் மீது எடப் பாடியின் கோபம் திரும்பியிருக்கிறது என்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலை வரே, உணவு வீணாணது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அது குறித்து சமாளிக்காமல் உதயகுமார் ஒத்துக்கொண்டு பேசியது, எடப்பாடியை ரொம்பவே கோபப்படுத்தியிருக்கிறதாம். அதேபோல், இவர் சொல்லித் தானே மாநாட்டில் கொடுக்கப்பட்ட ’புரட்சித் தமிழர்’ பட்டத்தை வாங்கினேன். ஆனால் பட் டம் கொடுத்த நிலையூர் ஆதீனமோ, "வந்தாங்க... கொடுக்கச் சொன்னாங்க... கொடுத்தோம்' என்று சொல்லி அசிங்கப்படுத்திவிட்டாரே என்றும் எடப்பாடி சங்கடப்படுகிறாராம். இதனால் மதுரைக்காரர்களான உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு, ராஜன்செல்லப்பா ஆகியோரின் கட்சிப் பதவியைப் பறிக்கும் முடிவிற்கு எடப்பாடி வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். குறிப்பாக உதயகுமாரிடம் உள்ள ஜெ. பேரவையின் மாநில செயலாளர் பொறுப்பை, சிவகங்கை எம்.எல்.ஏ.வும் மா.செ.வுமான செந்தில்நாதனிடம் எடப்பாடி கொடுக்க இருக்கிறாராம்.'' ”
"பா.ஜ.க. அண்ணாமலையும் ஆதங்கத்தில் இருக்கிறாராமே?''”
"அண்ணாமலை தனது பாதயாத்திரையின் முதல்கட்டத்தை நிறைவு செய்துவிட்டு 10 நாள் ஓய்வில் இருக்கிறார். தனது பாத யாத்திரைக்கான ஏற்பாடுகள் சரியில்லை என்பது அவருக்கு இருக்கும் பெரும் ஆதங்கமாம். டெல்லியில் இருந்து ஏகத்துக்கும் இது தொடர்பாகக் கேள்வி எழுப்புகிறார்களாம். அதனால் தனது குழுவினரிடம் அவர், "இந்தப் பயணத்தின்போது உறுப்பினர்கள் சேர்க்கை யைக் கையில் எடுக்கச் சொன்னேன். அதைச் செய்யவில்லை. ஒன்றிய அரசின் திட்டங்களைப் பற்றிய பிரச்சாரத்தையும் நாம் செய்யவேண்டும் என்று சொன்னேன். அதையும் நீங்கள் யாரும் கேட்கவில்லை. அதனால் டெல்லியின் பார்வையில், நாம் சும்மா நடந்து அலப்பறை செய்தது போல் ஆகிவிட்டது'’என்று மிகவும் கடிந்துகொண்டாராம். அடுத்தகட்ட பயணத்தில் இதுபோன்ற குறைகள் இருக்கக்கூடாது என்று அவர்களைக் கடுமையாக எச்சரித்தாராம் அண்ணாமலை.''”
"ஓ.பி.எஸ்.ஸுக்கும் பாதயாத்திரை ஆசை வந்திருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, மதுரையில் எடப்பாடி நடத்திய மாநாட்டைப் பார்த்ததில் இருந்து, நிம்மதி இழந்திருக்கிறார் ஓ.பி.எஸ். தன் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த வர்களும், தனது எண்ணத்திற்கு மாறாக அதிக அளவில் எடப்பாடி நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. எனவே, எடப்பாடியைப் போல், தானும் தனது செல்வாக்கை நிரூபிக்க ஆசைப்படுகிறாராம். அதனால் பா.ஜ.க. அண்ணாமலையைப் போலவே, தானும் ’ மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் இருந்து யாத்திரையைத் தொடங்கி, தமிழகம் முழுக்க நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். அதேசமயம் இவருடன் இருக்கும் இவரது சகாக்களோ, "எதற்கு இந்த தேவையில்லாத வேலை? இந்த வயதில் இந்த ஆசை ஓ.பி.எஸ்.சுக்குத் தேவையா? அவரால் நடக்க முடியுமா? அதிலும் மக்களை இதற்குப் பெரிய அளவில் திரட்ட ஓ.பி.எஸ்.ஸால் முடியுமா?' என்று ஏகத்துக்கும் பொருமுகிறார்களாம்.''’
"ராமநாதபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. பற்றி சலசலப்பு தெரியுதே?''”
"ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் தங்கள் கட்சியினருக்கு அண்மையில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக் கிறார். அதாவது தனது பெயரை விளம்பரம் மற்றும் அழைப்பிதழ்களில் குறிப்பிடும்போது, தன் பெயருக்குப் பின்னால் வெறும் எம்.எல்.ஏ. என போட்டால் மட்டும் போதாது. தான் படித்த பி.ஏ. பட்டத்தையும் குறிப்பிடவேண்டும் என்பதுதான். இதைத் தொடர்ந்து பி.ஏ. என்ற இரண்டெழுத்தும் அவர் பெயருக்குப் பின்னால் பொறிக்கப்படுகின்றன. அதேசமயம் விபரமான உடன்பிறப்புகளோ, "தேர்தலில் அவர் நின்றபோது கொடுக்கப்பட்ட வேட்புமனுவில் அவர் படித்தது ப்ளஸ்டூ என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது' என்கிறார்கள் கால் கிலோ புன்னகையோடு.''”
"இந்தப் பரபரப்பான அரசியல் சூழலில் பா.ம.க. எம்.எல்.ஏ. ஒருவர் குடும்பம் தொடர்பான சிக்கலில் சிக்கியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே சேலம் மாவட்டம் மேட்டூர் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பா.ம.க. சதாசிவம்தான், வழக்குச் சிக்கலில் மாட்டியிருக்கிறார். இவர் மகன் சங்கருக்கும், மனோலியா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கும் நிலையில், தனது கணவர் சங்கர் மற்றும் மாமனார் சதாசிவம் உள்பட அவரது குடும்பத்தினர் மீது சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணைக் கொடுமை செய்வதாகப் புகார் கொடுத்திருக்கிறார் மனோலியா. இதை ஆட்சித் தலைமையின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு செல்ல, புகாரில் உண்மையிருக்கு மானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று மேலிருந்து சிக்னல் கொடுக்கப்பட்டிருக் கிறது. இதன் அடிப்படையில் வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்தினர் மீது வழக்கைப் பதிவு செய்திருக்கிறது காவல்துறை. தைலாபுரமோ, தங்கள் மீதான கோபத்தில், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.விடம் தி.மு.க. அரசு, பழிவாங்கும் போக்கில் கடுமை காட்டுவதாக அதிர்ந்துபோயி ருக்கிறது.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். முன்னாள் உளவுத்துறை அதிகாரி யான ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவஆசிர்வாதம் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ "தலைவராக இருப்பவர்கள் எப்போதும் கண்காணிக் கிறவர்களாக இருக்கக்கூடாது. சிறிய அளவு கூட்டங்களை நடத்தி, பெரிய முடிவுகளை எடுக்கவேண்டும். அடிக்கடி கண்காணிப்புக் கூட்டங்களை நடத்துவது தலைமைப் பண்பிற்கு உகந்ததல்ல'’ என்ற ரீதியில் பதிவிட்டிருக்கிறார். இது முதல்வரை விமர்சித்து அவர் எழுதிய டுவிட் என்று, காவல்துறையைச் சேர்ந்த வர்களே பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறார்கள்.''
__________________
காவேரிப்பாக்கம் கவுன்சிலர்கள் ராஜினாமா!
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி. இந்த ஒன்றியத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க. முன்னாள் ஒ.செ. மாணிக்கத்தின் அண்ணன் மகள் என்கிற தகுதியோடு சேர்மன் ஆக்கப்பட்டார் அனிதா குப்புசாமி. அனிதாவின் கணவர் குப்புசாமி தான், மனைவிக்குப் பதில் நிர்வாகம் செய்துவருகிறார். தண்ணீர் பிரச்சினை, சாலை வசதி, கழிவுநீர் கல்வாய் என கவுன்சிலர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் சேர்மனின் கணவர் குப்புசாமி கண்டுகொள்வதில்லையாம். போராடி நிதியைப் பெற்று எதாவது பணி செய்துமுடித்தாலும் பில் செட்டில்மெண்ட் செய்வதில்லையாம். இதனால் அதிருப்தியான தி.மு.க.வை சேர்ந்த வைஸ்சேர்மன் முனியம்மாள் கணேசன், கவுன்சிலர்கள் தி.மு.க. ராணி சேட்டு, அ.தி.மு.க. யுவராஜ், காங்கிரஸ் மாரிமுத்து, பா.ம.க. தீபா, சுயேட்சை கோமதி குமார் ஆகிய 6 பேர் தங்கள் பதவியை ஆகஸ்ட் 23ஆம் தேதி ராஜினாமா செய்து பி.டி.ஓ. முஹம்மத் சைபுத்தீனிடம் கடிதம் வழங்கியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-ராஜா