திருவள்ளூர் மாவட்ட மல்லுக்கட்டு! எந்தக் கட்சியில் யாருக்கு சீட்?

tr

மிழகத்தின் ஈசானிய மூலையில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி (தனி), ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், திருத்தணி, திருவொற்றியூர், மாதவரம் என 10 தொகுதிகள் இருக்கின்றன. முதல்வர் எடப்பாடியின் முதல் கட்ட பிரச்சாரம், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நடத்திவரும் மக்கள் சபைக் கூட்டம் இவற்றால் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி முகாம்களில், உற்சாகம் கரைபுரண்டு, இந்த மாவட்டத்தின் எம்.எல்.ஏ. சீட்டுக்காக இப்போதே சென்னையில் முகாம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

திருவள்ளூர்

tt

அ.தி.மு.க.: ஜெ. இருந்தபோது அமைச்சராக இருந்த ரமணாவின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது இத்தொகுதியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாவட்டத்திலும்தான். ராஜ்ஜியம் என்றாலே இன்சைட் ராணிகளின் நடமாட்டம் ஜாஸ்தி யாக இருக்கும். அந்த வகையில் ஒரு ராணியை செகண்ட்ஹேண்டாக ரமணா டீல் பண்ணியதால், ஜெ.வால் பீஸ் பிடுங்கப்பட்டார். இந்தநேரம் பார்த்து பிரைட்டாக வரலாம் என நினைத்து கடந்த தேர்தலில் சீட் வாங்கினார் ந.செ. கமாண்டோ பாஸ்கரன் என்பவர். ஆனால் ரமணாவின் சிஷ்யர்களால் சிரமத்திற்குள்ளாகி தோற்றுப்போனார். மீண்டும் சீட் கேட்கும் ஆசை பாஸ்கரனுக்கு இருந்தாலும் பீஸ்போன ரமணா, இப்போது எல்.இ.டி. பல்பாக திரும்பி வந்து, அந்த ஆசைக்கு ஆப்பு வைக்கிறார்.

தி.மு.க.: கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் கரன்சி மழை கொட்டோ கொட்டென கொட்டி யதால், சித்தரஞ்சன் சாலையின் சிபாரிசில் சீட் வாங்கி, சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் வி.ஜி .ராஜேந்திரனுக்கு இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ.வாகும் ஆசையும் இருக்கு. ஆனா உ.பி.க்களையோ, மக்களையோ ஏறெடுத்தும் பார்க்காத அதிருப்தி இருப்பதால் மாஜி எம்.எல்.ஏ. சிவாஜிக்கு, 2021-ல் எம்.எல்.ஏ. வாகும் ஆசை வந்திருக்கிறது.

நாங்களும் வெயிட்டா வச்சிருக்கோம், களத்துல இறங்குவோம் என்கிறார் மா.செ.ஆவடி நாசரின் சிஷ்யரான வி.சி.ஆர்.குமரன். விஜய காந்ந்தின் உறவினர் என சொல்லிக் கொண்டு தேமுதிகவிலிருந்து தி.மு

மிழகத்தின் ஈசானிய மூலையில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி (தனி), ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், திருத்தணி, திருவொற்றியூர், மாதவரம் என 10 தொகுதிகள் இருக்கின்றன. முதல்வர் எடப்பாடியின் முதல் கட்ட பிரச்சாரம், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நடத்திவரும் மக்கள் சபைக் கூட்டம் இவற்றால் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி முகாம்களில், உற்சாகம் கரைபுரண்டு, இந்த மாவட்டத்தின் எம்.எல்.ஏ. சீட்டுக்காக இப்போதே சென்னையில் முகாம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

திருவள்ளூர்

tt

அ.தி.மு.க.: ஜெ. இருந்தபோது அமைச்சராக இருந்த ரமணாவின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது இத்தொகுதியில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாவட்டத்திலும்தான். ராஜ்ஜியம் என்றாலே இன்சைட் ராணிகளின் நடமாட்டம் ஜாஸ்தி யாக இருக்கும். அந்த வகையில் ஒரு ராணியை செகண்ட்ஹேண்டாக ரமணா டீல் பண்ணியதால், ஜெ.வால் பீஸ் பிடுங்கப்பட்டார். இந்தநேரம் பார்த்து பிரைட்டாக வரலாம் என நினைத்து கடந்த தேர்தலில் சீட் வாங்கினார் ந.செ. கமாண்டோ பாஸ்கரன் என்பவர். ஆனால் ரமணாவின் சிஷ்யர்களால் சிரமத்திற்குள்ளாகி தோற்றுப்போனார். மீண்டும் சீட் கேட்கும் ஆசை பாஸ்கரனுக்கு இருந்தாலும் பீஸ்போன ரமணா, இப்போது எல்.இ.டி. பல்பாக திரும்பி வந்து, அந்த ஆசைக்கு ஆப்பு வைக்கிறார்.

தி.மு.க.: கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் கரன்சி மழை கொட்டோ கொட்டென கொட்டி யதால், சித்தரஞ்சன் சாலையின் சிபாரிசில் சீட் வாங்கி, சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் வி.ஜி .ராஜேந்திரனுக்கு இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ.வாகும் ஆசையும் இருக்கு. ஆனா உ.பி.க்களையோ, மக்களையோ ஏறெடுத்தும் பார்க்காத அதிருப்தி இருப்பதால் மாஜி எம்.எல்.ஏ. சிவாஜிக்கு, 2021-ல் எம்.எல்.ஏ. வாகும் ஆசை வந்திருக்கிறது.

நாங்களும் வெயிட்டா வச்சிருக்கோம், களத்துல இறங்குவோம் என்கிறார் மா.செ.ஆவடி நாசரின் சிஷ்யரான வி.சி.ஆர்.குமரன். விஜய காந்ந்தின் உறவினர் என சொல்லிக் கொண்டு தேமுதிகவிலிருந்து தி.மு.க.வில் ஐக்கியமான சங்கீதா சீனிவாசனுக்கு சீட் மீது கண்ணிருந் தாலும் கசமுசா புகார்கள் எக்கச்சக்கமாக இவருக்கு எதிராக வரிந்து கட்டுகின்றன.

கும்மிடிப்பூண்டி

ஏராளமான கார்ப்பரேட் கம்பெனிகள் அடங்கிய சிப்காட் தொழில்வளாகம் அமைந்துள்ள இத்தொகுதியின் மீது எல்லா கட்சி விஐபிக்களுக்கும் தனிப்பாசம் இருக்கும். அதனால் இத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஆளும் கட்சி விஜயகுமாரின் கஜானா கனமாக இருந்தாலும், இங்கேயும் களம் இறங்க தயார் நிலையில் உள்ளார் முன்னாள் அமைச்சர் ரமணா. ""எனக்கு இல்லேன்னா என்னோட மச்சினன் ரவிச்சந்திரனுக்கு கொடுங்க'' என்கிறார் விஜயகுமார்.

tt

தி.மு.க., தே.மு.தி.க.விலிருந்து வந்த சேகருக்கு கடந்த முறை சீட் கிடைத்தும், உ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைக்காத தால் கரையேற முடிய வில்லை. இருந்தாலும் இன்னொரு சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக் கையில் உள்ளார் சேகர்.

கும்மிடிப்பூண்டி என்றாலே வேணுதான் என்னும் அளவுக்கு பேர் வலுவாக இருந்தாலும் உடல்நிலை எந்தளவுக்கு ஒத்துவருமோ என்பதால், சீட் கேப்பமா வேண்டாமா என்ற மனநிலையில் உள் ளார் வேணு. அதனால் மாஜி யூனியன் சேர்மன் டி.ஜே.கோவிந்தராஜுக்கு வன்னியர்கள் ஆதர வுடன், நாயுடு, முதலியார் சமூகங்களின் ஆதரவு இருப்பதால் சீட் கிடைக்கலாம் என்கிறார்கள் உ.பி.க்கள்.

பொன்னேரி (தனி)

அ.தி.மு.க.: மா.செ.வாகவும் சிட்டிங் எம்.எல்.ஏ.வாகவும் இருப்ப தால் சிறுனியம் பலராமனுக்கு பலமான நம்பிக்கை இருக்கிறது. ""கூட்டணிக் கட்சி எதுவும் குறுக்கே வரலன்னா எங்க அண்ணன் மீண்டும் எம்.எல்.ஏ. ஆவார்''’ என்கிறார்கள் பலராமனின் அன்பானவர்கள், அசராதவர்கள், அடங்காதவர்கள்.

தி.மு.க.: கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த டாக்டர் பரிமளா விஸ்வ நாதன், மீஞ்சூர் ஒ.செ.ரமேஷ்ராஜ் ஆகியோர், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பில்லை என தலைமை முடி வெடுத்திருந்தாலும் உதயநிதியின் அபிமானம் பெற்ற மாவட்ட கவுன்சிலர் உதயசூரியனும் சீட் ரேசில் இருக்கிறார். உ.பி.க்களி டையே பரிச்சயமான கதி ரவனும் காத்திருக்கிறார். தமிழன் பிரசன்னாவுக்கும் இங்கே வாய்ப்பு அமைய லாம் என்கிறார்கள் நில வரம் அறிந்தவர்கள்.

திருத்தணி

அ.தி.மு.க.: எம்.ஜி. ஆர். காலத்து எம்.எல்.ஏ. வான நரசிம்மன், மாஜி எம்.பி. அரி, ஒ.செ. கண்டிகை ரவி ஆகியோருக்கு சீட் கனவு இருந்தாலும், வன்னியர்கள் வலுவாக இருக்கும் பகுதி என்பதால், கூட்டணிப் பங்காளியான பா.ம.க. வுக்கு தொகுதி கன்ஃபார்ம் ஆகிவிடும் என்பது அ.தி.மு.க.வினருக்கே தெரிந்துவிட்டது. இதனால் அன்பு மணியின் கல்லூரி நண்பர் டாக்டர் வைத்தியலிங்கத்திற்கு சான்ஸ் கிடைக்கும் போல என்கிறார்கள் பாட் டாளி சொந்தங்கள்.

தி.மு.க.: மல்டி மில்லினரான எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆதரவுடன் மா.செ.வான பூபதி, எம்.எல்.ஏ. சீட்டையும் எதிர் பார்க்கிறார். ஆனால் ஜெகத்தோ தனது மச்சினன் காமராஜை எம்.எல்.ஏ.வாக்கி அமைச்சரும் ஆக்கிவிட வேண்டும் என ரொம்பவே சுறுசுறுப்பு காட்டுகிறார்.

tr

ஏங்க சும்மா இருந்த நாங்க, வேல் யாத்திரைய தொடங்குனதே திருத்தணிலதாங்க. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான், அதுபோல குமரன் குடியிருக்கும் இடமெல்லாம் எங்களுக்குத்தான் என்ற மன கணக்குடன் பெரிய வாத்தியார் பா.ஜக. இருக்கிறது. எனவே வேல்யாத்திரைக்கு தாராள செலவு செய்த சவேரா ஓட்டல் சக்கரவர்த்திக்குத்தான் சீட் என எல்.முருகனும் க்யாரண்டி கொடுத்திருக்காராம்.

பூந்தமல்லி

அ.தி.மு.க.: மாஜி எம்.எல்.ஏ.வான மணி மாறன், தலைமைக்கழகமே கதி என சென்னையி லேயே டேரா போட்டுள்ளார். நீங்க அங்கேன்னா நான் இங்கே என செவ்வாய்பேட்டை சம்பத் குமார், தொகுதியில் இருக்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு இப்போதே குளுகோஸ் ஏற்ற ஆரம்பித்துவிட்டார். ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள புரட்சி பாரதத்திற்கும் இத்தொகுதி மீது கண் உள்ளது.

தி.மு.க.: தொகுதி மக்களிடமும் சரி, கட்சிக்காரர்களிடமும் நல்ல பேர் எடுத்திருப்பதால் சிட்டிங் எம்.எல்.ஏ.வான கிருஷ்ணசாமிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனாலும் ஒ.செ.ஜெயக்குமார் மற்றும் பரந்தாமன், காயத்ரி ஸ்ரீதர் ஆகி யோர் ரேசில் இருக் கிறார்கள். ம.தி.மு.க.வும் தயார் நிலையில் உள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் நம் பிக்கைக்குரிய ஜெக தீசனுக்கு சீட் நிச்சயம் என்கிறார்கள் ம.நீ.ம.வின் உறவுகள்.

ஆவடி

அ.தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன், ஓ.பன்னீரின் பழைய விசுவாசி என்பதால், இ.பழனிசாமியின் ஆதரவாளர்கள் இப்போதே எதிர்ப்புக் கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பக்காவாக காய் நகர்த்தி வருகிறார் மாஜி அமைச்சர் அப்துல் ரஹீம்.

தி.மு.க.: கடந்த பொதுத்தேர்தலில் மிகக்குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியைப் பறிகொடுத்த தி.மு.க. மா.செ. ஆவடி நாசரைத் தவிர வேறு யாரும் சீட் கேட்கும் எண்ணத்தில் இல்லை.

மாதவரம்

தமிழகத்தின் மிகப்பெரிய பால்பண்ணை இருக்கும் இத்தொகுதியில் மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மூர்த்தி இருந்தாலும், அதெல்லாம் அப்போ, ஆனா இப்ப கதை வேற என்கிறார்கள் ர.ர.க்கள்.

தி.மு.க.வில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மா.செ. வுமான சுதர்சனத்திற்கு எதிர்ப்புகள் இல்லை யென்றாலும் உ.பி.க்களிடையே லேசான முணு முணுப்பு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

அம்பத்தூர்

ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் தற்போ தைய எம்.எல்.ஏ.வாக இருக்கும் அலெக்சாண்ட ருக்கு ர.ர.க்களிடையே இருக்கும் செல்வாக்கு, மீண்டும் சீட்டை உறுதிப்படுத்துகிறது.

எதிர்க்கட்சியான தி.மு.க.விலோ களப்பணிகளில் சுறுசுறுப்பானவரும் அம்பத்தூர் நகராட்சியாக இருந்தபோது சேர்மனாக இருந்தவருமான ஜோசப் சாமுவேலுக்கு சான்ஸ் அதிகம். அதேபோல் இத்தொகுதியில் வலுவாக இருக்கும் பா.ம.க.வை சமாளிக்க சரியான ஆள் சாமுவேல்தான் என்கிறார்கள் உ.பி.க்கள். நாமளும் சீட் கேட்கலாமே என்ற ஆசையில் உள்ளனர் ப.செ.க்களான டி.எஸ்.பி.ராஜகோபாலும் பி.கே.மூர்த்தியும். தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி என்பதால், கூட்டணித் தோழமையான சி.பி.எம்.முக்கு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை காம்ரேடுகளிடம் உள்ளது.

மதுரவாயல்

சென்னையின் வடக்கு நுழைவாயிலான இத்தொகுதியின் இப்போதைய எம்.எல்.ஏவாகவும் அமைச்சராகவும் இருக்கும் பெஞ்சமினே 2021-லும் எம்.எல்.ஏ. பெஞ்சில் உட்காரும் ஆசை இருக்கிறது. "பகட்டுக்கு அமைச்சராக இருந்தா மட்டும் போதுமா, மக்களுக்கு ஏதாவது செய்ய வேணாமா? அட மக்கள விடுங்க... கட்சிக்காரனையாவது கண்டுக்கிட்டாரான்னா அதுவும் இல்ல'’என்ற கடுகடுப்பு ர.ர.க்களிடம் இருப்பதைப் பயன்படுத்த ஆயத்தமாகிறார் தேவதாஸ்.

தி.மு.க.வில் பலம் காட்ட காரம்பாக்கம் கணபதி இருக்கிறார். எங்களுக்கும் பலமும் இருக்கு, பணமும் இருக்கு என்கிறார்கள் நொளம்பூர் ராஜனும் ஆலப்பாக்கம் சண்முகமும். தி.மு.க.வின் கூட்டணியான மார்க்சிஸ்டுக்கு இங்கே செல்வாக்கு இருந்தாலும் அமைச்சர்கள் அத்தனை பேரும் தோற்க வேண்டும் என ஸ்டாலின் டார்கெட் வைத்துள்ளதால் உ.பி.க்களுக்கு நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது.

அ.ம.மு.க.வில் முன்னாள் சேர்மன் ஜீவானந்தம் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

திருவொற்றியூர்

சென்னை பெருநகர மாநகராட்சியின் எல்லைக்குள் இருக்கும் இத்தொகுதியில் கார்ப்பரேட் கம்பெனிகள், துறைமுகம், அனல்மின் நிலையம் என செல்வச் செழிப்புக்கு குறைவில்லை. மீனவ சமூகத்தினர் மெஜாரிட்டியாக இருக்கும் இந்த தொகுதி மீது அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. குப்பனுக்கு கண் இருக்கிறது. எலெக்ஷன்னு வந்துட்டா அண்ணனாவது தம்பியாவது என்ற முடிவுடன் குப்பனின் உடன்பிறந்த தம்பி கிருஷ்ணனும் முண்டா தட்டுகிறார். அஜாக்ஸ் பரமசிவனும் தன்ராஜும் மைக் புகழ் அமைச்சர் ஜெயக்குமாரை நம்பியிருக்கிறார்கள்.

தி.மு.க: சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மாஜி அமைச்சருமான கே.பி.பி.சாமி சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். தங்களது குடும்பத்தின் மீது கட்சி மேலிடத்தில் இருக்கும் கரிசனத்தாலும் லோக்கலில் இருக்கும் செல்வாக்காலும் தனக்கு சீட் கிடைக்கும் என ரொம்பவே நம்பிக்கையில் உள்ளார் கே.பி.பி.சாமியின் தம்பியான சங்கர்.

-அரவிந்த்

nkn090121
இதையும் படியுங்கள்
Subscribe