வாட்ச் கடைகளுக்கு நேரம் சரியில்லை! -வடமாநில கொள்ளையர் கைவரிசை!

watch-shop

பொதுவாக ஒரு விஷயம் சரிவர நடைபெறவில்லையென்றால் நேரம் சரியில்லை என்பார்கள். சென்னை நகரில் -குறிப்பாக கைக்கடிகாரக் கடைகளையே வடமாநிலக் கும்பல் குறிவைத்துக் கொள்ளையடிக்கிறதென்றால், நிச்சயமாக அவர்களுக்கு நேரம் சரியில்லை என்றுதானே சொல்லவேண்டும்.

watch-shop

கிழக்குத் தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையிலுள்ள "சத்யா டைம்ஸ்' எனும் கைக்கடிகாரக் கடை. மே 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கடையைப் பூட்டிவிட்டு மறுநாள் காலை திறக்கவருகிறார்கள். கடையில் வேலைசெய்யும் தரணி என்பவர் பூட்டைத் திறக்கப்போக, ஐந்து பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். கடையை நடத்திவரும் சந்தீப்புக்கு தகவல் செல்கிறது. அவர் போலீஸில் புகார்கொடுக்க, சேலையூர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ஆல்வின்ராஜ் தலைமையில் போலீஸ் படை வந்து தடயங்களைச் சேகரிக்கிறது.

அப்போதுதான் இன்னொரு முக்கிய விஷயம் தெரியவருகிறது. திருடவந்த கும்பல் முதலில் கைவைத்ததே சி.சி.டி.வி. கேமரா பதிவைச் சேகரிக்கும் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டரில்தான். முதலில் அதை கழட்டி எடுத்தபின், நிதானமாக விலையதிகமான வாட்சுகளாக பார

பொதுவாக ஒரு விஷயம் சரிவர நடைபெறவில்லையென்றால் நேரம் சரியில்லை என்பார்கள். சென்னை நகரில் -குறிப்பாக கைக்கடிகாரக் கடைகளையே வடமாநிலக் கும்பல் குறிவைத்துக் கொள்ளையடிக்கிறதென்றால், நிச்சயமாக அவர்களுக்கு நேரம் சரியில்லை என்றுதானே சொல்லவேண்டும்.

watch-shop

கிழக்குத் தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையிலுள்ள "சத்யா டைம்ஸ்' எனும் கைக்கடிகாரக் கடை. மே 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கடையைப் பூட்டிவிட்டு மறுநாள் காலை திறக்கவருகிறார்கள். கடையில் வேலைசெய்யும் தரணி என்பவர் பூட்டைத் திறக்கப்போக, ஐந்து பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். கடையை நடத்திவரும் சந்தீப்புக்கு தகவல் செல்கிறது. அவர் போலீஸில் புகார்கொடுக்க, சேலையூர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ஆல்வின்ராஜ் தலைமையில் போலீஸ் படை வந்து தடயங்களைச் சேகரிக்கிறது.

அப்போதுதான் இன்னொரு முக்கிய விஷயம் தெரியவருகிறது. திருடவந்த கும்பல் முதலில் கைவைத்ததே சி.சி.டி.வி. கேமரா பதிவைச் சேகரிக்கும் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டரில்தான். முதலில் அதை கழட்டி எடுத்தபின், நிதானமாக விலையதிகமான வாட்சுகளாக பார்த்துப் பார்த்து கொள்ளையடித்திருக்கிறது. சாதாரண வாட்சுகளில் கைவைக்கவேயில்லை.

ரூபாய் மூன்றாயிரம் முதல் இரண்டு லட்ச ரூபாய் வரையிலான வாட்சுகளை லவட்டிய கும்பல் மொத்தமாக முப்பது லட்ச ரூபாய் மதிப்பிலான வாட்சுகளை லவட்டிச் சென்றிருக்கிறது.

""என்னோட மொத்த முதலீடும் போச்சு. போனமாசம் இதே ரோட்டுல மகாலட்சுமி நகர்ல இருக்க வேர்ல்ட் ஆப் டைட்டன் கடையிலயும் வாட்ச் திருடுபோச்சு. இதுவரைக்கும் குற்றவாளிகளைப் பிடிக்கலை. அந்த கடையிலயும் என் கடையில நடந்தமாதிரி பூட்டை உடைச்சு சி.சி.டி.வி.யோட டி.வி.ஆரைக் கழட்டிட்டுத் திருடியிருக்காங்க. அதோட, பக்கத்துல இருந்த செல்போன் கடையிலயும், பல் மருத்துவமனையிலயும் இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள்ல தங்கள் உருவம் பதிவாகிவிடக்கூடாதுங்கிறதுக்காக சி.சி.டி.வி. கேமரா, டி.வி.ஆரை மட்டும் திருடியிருக்காங்க.

சமீபத்தில் மட்டும் மயிலாப்பூர் ரிஸ்ட் வேர்ல்டு, ராயபுரம் வேல்ட் ஆப் டைட்டன், அண்ணாநகர் மாடர்ன் டைம்ஸ், திருவான்மியூர் மார்த்தாண்டம், வேளச்சேரி டைட்டன் ஸ்டோர்ஸ் ஆகிய இடங்களில் இதே பாணில திருடுபோயிருக்கு. நகைக்கடை விவகாரத்துல ராஜஸ்தான்வரை போய் குற்றவாளியைப் பிடிக்க மெனக்கெடுற போலீஸ், ஏன் கடிகாரக் கடை திருட்டுகளில் அக்கறை காட்டுவதில்லை?''’என்கிறார் சந்தீப்.

watch-shop

சந்தீப்பின் தந்தையும், வாட்ச் கடை உரிமையாளர்களில் ஒருவருமான ஆறுமுகப்பாண்டியன் என்கிற கண்ணன் நம்மிடம், ""இந்த வாட்ச் திருட்டுத்தொழில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதே தெருவில் 40 லட்சம் ரூபாய்க்கும் மேலான வாட்ச்களை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இதை போலீஸ் கண்டுகொண்டபாடில்லை. இத்தொழிலில் ஈடுபடும் வாட்ச் திருடர்கள் தைரியமாக வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்'' என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார்.

ராயபுரம் வேர்ல்டு ஆப் டைட்டன் உரிமையாளர் ஸ்ரீகாந்த், ""இந்த வியாபாரத்துல எங்களுக்கு பெரிய அளவு லாபம் கிடையாது. என் கடை திருடுபோனதுக்கப்புறம் எத்தனையோ கடைல இதே மாதிரி வாட்ச் திருட்டு நடந்துடுச்சு. ஆனா ஒரு வழக்குலயும் யாரையும் பிடிக்கலை போலீஸ்''’என்கிறார் ஏமாற்றத்துடன்.

வடபழனி நியு அம்பிகா எம்பயர்ஸ் அருகேயிருக்கும் நியூ டைட்டன் கடை உரிமையாளர் அன்பு, “""வாட்ச் கடை வெச்சு ஏதோ பிழைச்சுவந்தேன்.. கடை கொள்ளைபோனதுல இருந்து பழைய மாதிரி தொழிலும் இல்ல,… அந்த நஷ்டத்துலயிருந்து நான் மீளவும் இல்லை''’என்கிறார் சோகமாய்.

சேலையூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆல்வின்ராஜைத் தொடர்புகொண்டு சத்யா டைம்ஸ் கடை திருட்டு வழக்கு நிலவரத்தைக் கேட்டோம். ""கொள்ளையர் சி.சி.டி.வி. புட்டேஜ் சேகரிக்கும் டி.வி.ஆரையும் சேர்த்து எடுத்துட்டுப் போனதால, பக்கத்துல இருக்கிற சி.சி.டி.வி. கேமராக்கள்ல சிக்கியிருக்காங்களானு ஆய்வுசெஞ்சு குற்றவாளிகளைத் தேடிவர்றோம். முதல்கட்ட விசாரணையில கொள்ளையர்கள் மகேந்திரா புல்லரோ ட்ரக்ல வந்தது தெரியவந்திருக்கு. சீக்கிரம் பிடிச்சிடுவோம்''’என்கிறார்.

சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபலமான வாட்ச் கடையில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான விலையுள்ள கடிகாரங்களை மட்டுமே கொள்ளையடித்திருக்கிறார்கள்.

சில வருடங்கள் முன்பு இதேபோன்ற வாட்ச் கடை கொள்ளையர்கள் பத்து பேரை கைதுசெய்த, பெயர் சொல்ல விரும்பாத உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்தோம். ""நான் அடையாறு பகுதியில இருந்தபோது, எல்.பி. ரோடுல டைட்டன் ஷோரூம்ல இதே பாணியிலதான் திருடியிருந்தாங்க. இந்த மாதிரி கொள்ளையர்கள் வாட்ச் கடையை முன்கூட்டியே நோட்டம்போட்டு வெச்சுக்கிட்டு சரியான தருணம்பார்த்து வண்டில வருவாங்க. அதுல கடைய உடைக்கத் தேவையான சாதனங்கள் இருக்கும். ஷட்டர் கதவு திறக்க ஜாக்கி, திருடும் வாட்சுகளைக் கொண்டுபோக கட்டைபேக் சகிதமா வருவாங்க. திருடினதும் ரெண்டு நாளுக்குள்ள நேபாளம், பங்களாதேஷ், மும்பைக்குனு கடத்திடுவாங்க. சமீபமா ஆன்லைன்ல ஆப்பர்னு விளம்பரம் கொடுத்து ஒண்ணுக்குப் பாதியா வித்துடுவாங்க. பிகார், மேற்குவங்கத்துல இருந்துதான் இவங்க வருவாங்க.

இவங்களை இரண்டுநாள்ல பிடிக்கலைன்னா வாட்ச்சுகளை பறிமுதல் செய்றது கஷ்டம். நான் பத்து பேரை கைதுபண்ணினப்பவும் 30 சதவிகித வாட்ச்சுகளைத்தான் மீட்க முடிஞ்சது. இந்த மாதிரி வழக்குகள்ல உடனே ரயில்நிலையங்களைக் கண்காணிக்கணும். வடமாநில கொள்ளையர் மேல் எப்போதும் ஒரு கண்ணுடன் இருந்தால்தான் இதைக் கட்டுப்படுத்த முடியும்''’என்கிறார்.

போலீஸ் வாட்ச்புல்லாகவும் இல்லை… திருடியதைக் கண்டுபிடிப்பதில் ஆக்டிவாகவும் இல்லை என பொருமுகிறார்கள் வருத்தப்படும் வாட்ச் கடை உரிமையாளர்கள்.

-அரவிந்த்

watch shop
இதையும் படியுங்கள்
Subscribe