"ஹலோ தலைவரே, ஆக்சிஜன் தயாரிப்பதா அனுமதி வாங்கியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை, ஏற்கனவே திட்டமிட்டபடி நினைத்ததை சாதிக்கப் போகுதுன்னு சூழலியல் செயல்பாட்டாளர்களும் ஆலை எதிர்ப்புக் குழுவினரும் எச்சரிச்சிருக்காங்களே.''”
"ஆமாம்பா.... கவனிக்க வேண்டிய எச்சரிக்கைதான். ஆனா, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது ஆளும் தரப்பும், நீதித்துறையும் அக்கறை காட்டுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, நீதித்துறை இப்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையை மட்டும் பார்த்துட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனைத் தயாரிக்கலாம்ன்னு சொல்லுது. மத்திய அரசும் அதற்காகவே காத்திருந்த மாதிரி, வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு சப்போர்ட் பண்ணுது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமியின் காபந்து அரசோ, ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி கொடுத்தால், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. கடும் எதிர்ப்பைத் தெரிவிக்குமேன்னு யோசிச்சிது. ஆனால் பிரதமர் அலுவலகமோ, இங்குள்ள தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மூலமா எடப்பாடிக்கு வாய்மொழியாக, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கணும்னு உத்தரவு போட்டுச்சு. மேலும், தி.மு.க. எதிர்ப்பு குறித்து கவலைப்பட வேண்டாம். நாங்கள் அதனுடன் பேசி, நிலைமையைப் புரிய வைக்கிறோம்னு சொல்லியிருக்கு.''”
"ம்...''”
"தேர்தல் ரிசல்ட் நெருங்கி வருகிற திக்.. திக்.. மனநிலையில் அரசியல் கட்சிகள் இருக்குது. 5 மாநிலங்களின் ரிசல்ட் நிலவரம் பற்றி மோடி அரசுக்கு நிறைய ரிப்போர்ட் போயிருக்குது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் தி.மு.க. மீது பா.ஜ.க.வின் கவனம் திரும்பியிருக்குது. தி.மு.க.வை சரிக்கட்டும் வியூகத்தில் பா.ஜ.க. தலைமை இருக்குதாம். நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியா இருக்கும் தி.மு.க.வின் மாநில அளவிலான அடுத்த 5 ஆண்டுக்கான பங்களிப்பை மனதில் வைத்து, டெல்லி லாபி செயல்படுது. ஸ்டெர்லைட் விவகாரத்திலும் அப்படித்தான் தி.மு.க.வின் ஒத்துழைப்பைக் கேட்டிருக்குது டெல்லி. அதன் அடிப்படையில்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையே எடப்பாடி கூட்டியிருக்கார்.''”
"ஆக்சிஜன் தயாரிப்பு அனுமதியால், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்குத்தான் அதிக லாபம்னு சொல்றாங்களே?''”
"ஸ்டெர்லைட் தரப்பு, ஆக்சிஜன் விசயத்தில் தந்திரமாகக் காய் நகர்த்தி, தனக்கு பல மடங்கு லாபம் கிடைக்கிற மாதிரி ப்ளான் பண்ணுதாம். அதாவது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆயிரம் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்தால், அதில் வெறும் 35 டன் ஆக்சிஜன்தான் மருத்துவமனைக்கு அனுப்பப்படு மாம். மிச்ச ஆக்சிஜனை எல்லாம், தொழிற்சாலை களுக்கு யூஸ் பண்ற ஆக்சிஜன்னு சொல்லி, அவற்றை ஸ்டெர்லைட்டே வித்துக் கல்லா கட்டப்போகுதுன்னு சூழலியல் செயல்பாட்டாளர்கள் எச்சரிக்கிறாங்க.''”
"இந்தியாவில் பல தொழிற்சாலைகளுக்கும் தேவையான ஆக்சிஜனை, மருத்துவமனைகளுக்குத் தரணும்னு மத்திய அரசு வலியுறுத்தியிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே.. அதனால, தொழிற் சாலைகள் தங்களோட உற்பத்திக்கான ஆக்சிஜன் கிடைக்காமல் திணறுது. பல இண்டஸ்ட்ரியல் கம்பெனிகள், ஆக்சிஜனைக் கள்ள மார்க்கெட்டில் வாங்குது. இப்படிப்பட்ட கம்பெனிகளுக்கு ஆக்சிஜன் தயாரிப்பின்போது அபரிமிதமாகக் கிடைக்கும் இண்டஸ்ட்ரியல் ஆக்சிஜனை விற்றுப் பெரிய அளவில் ஸ்டெர்லைட் நிறுவனம் லாபம் பார்க்கப் போகுதாம். இந்தத் திட்டத்தோடுதான் சகுனித்தனமா ஸ்டெர்லைட் நிறுவனம் காய் நகர்த்தியதாகவும், இங்கே மூடிக்கிடக்கும் திருச்சி பெல் நிறுவனம் மற்றும் எண்ணூர் அனல் மின் நிலையம் போன்றவற்றில் இருக்கும் ஆக்சிஜன் தயாரிப்பு உலைகள் செயல்பட்டாலே, ஸ்டெர்லைட்டின் உதவி தேவைப்படாதுன்னும் அது தொடர்பான தொழிலாளர்கள் தரப்பே சொல்லுது.''”
"திருச்சி பெல் நிறுவனத்தில் 2003-ல் நிறுத்தப்பட்ட ஆக்சிஜன் தயாரிப்பை மீண்டும் தொடங்கணும்னு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தி.மு.க எம்.பி. திருச்சி சிவா அவசரக் கடிதம் எழுதியிருக்காரே?''”
"தி.மு.க.வை பொறுத்தவரை, மாநிலத்தின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப முயற்சிகளை எடுப்பது வழக்கம் தான். தமிழ்நாட்டில் இப்ப ஆக்சிஜன் பற்றாக்குறை மிகவும் அதிகமா இருக்கு. தமிழக மருத்துவமனைகளில் தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் கையிருப்பில் இருக்குன்னு எடப்பாடி அரசு சொன்னாலும் அது உண்மையில்லை. சென்னையில் இருக்கும் மருத்துவமனைகளிலேயே, நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் திணறுறாங்க. இதுபற்றி டெல்லித் தரப்பு தி.மு.க.விடம் பேசியிருக்குது. அதனால் ஸ்டெர்லைட்டின் ஆக்சிஜன் தயாரிப்புக்கு நாம் முட்டுக்கட்டை யாக இருந்துடக் கூடாதுன்னு தி.மு.க. நினைத்ததாம். ஆலையைத் திறக்க அனுமதித்தால், தி.மு.க. மீது விமர்சனங்கள் வரும்னு அறிவா லயத்துக்கும் தெரியும். அதனால் தான், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழியை கலந்துக்க வச்சிது.''
"கனிமொழியும் நிறைய நிபந் தனைகளை முன்வச்சிருக் காரே! ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்வதற்கான அனுமதிதான் வழங்கணும். அதைப் பயன்படுத்தி எதிர்காலத் தில் மற்ற அனுமதிகளுக்கு உரிமை கோரக்கூடாது. உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் முழுவதையும் தமிழ் நாட்டின் தேவைக்கு வழங்கணும். ஆலையின் செயல்பாட்டைக் கண்காணிக்க அரசு நிர்வாகத் தினருடன் சூழலியல் செயல்பாட்டாளர்கள், போராட்டக் குழுவினர், பொதுமக்கள் பிரதிநிதிகளையும் கொண்ட குழு அமைக்கணும்னு கனிமொழி சொன்ன பல நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கே?''
"நிபந்தனைகள் சரிதான். ஆனா, உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கும் அதனைத் திறப்பதில் ஆர்வம் காட்டும் மத்திய மோடி அரசுக்கும் திருப்தி தரும் வகையில் உத்தரவுகளை வழங்கியிருக்குது. ஆக் ஸிஜனை மத்திய அரசிடம் ஒப்படைத்து விடவேண்டும்னும், மத்திய அரசுதான் பிரிச்சித் தரணும்னும் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கு. மத்திய அரசு எப்படி தமிழ்நாட்டை மதிக்குதுன்னு இதிலிருந்து தெரிஞ்சிடும்ங்க தலைவரே.. அதோடு, அனைத் துக் கட்சிக் கூட் டத்துக்கு அங்கீ கரிக்கப்பட்ட கட்சிகளை மட்டும் அழைத்ததால் பல கட்சிகள் பங்கேற்க வாய்ப்பில்லை. அந்தக் கட்சிகள், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாதுங்கிற நிலைப்பாட்டில் உறுதி காட்டுதுங்க.''”
"விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவை ஒவ்வாமை யுடன் ஏற்கிறோம்னு சொல்லியிருக்காரே?''”
"ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஆரம்பத்திலிருந்தே ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராட்டக்களத்தையும் நீதிமன்றத்தையும் சந்தித்தவர். ஆக்ஸிஜன் உற்பத்தி விஷயத்தில் அவருக்கு முழு திருப்தி இல்லை. நாம் தமிழர் கட்சி சீமான், ஸ்டெர்லைட் திறப்புக்கு கடும் கண்டனம் தெரிவிச்சி, "சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் நிலைமை உருவாகும்'னு எச்சரிச்சிருக்காரு. "ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் தவிர வேறு வழியே இல்லையா?'னு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கேட்டிருக்காரு. அ.ம.மு.க.வின் டி.டி.வி. தினகரனும் கண்டிச்சிருக்காரு. "ஸ்டெர்லைட் ஆலையை அரசுடைமையா ஆக்கணும்'னு "பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு குரல் கொடுக்குது. இதையெல்லாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துக்கிட்ட தி.மு.க.வும் கவனிக்காமல் இல்லை. அதனால்தான், "தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, ஆக்ஸிஜன் உற்பத்திக்கான 4 மாத கால அவகாசம் முடிந்ததும், ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுமையாக சீல் வைக்கப்படும்'னு மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்காரு.'' ”
"ரிசல்ட்டுக்கு முன்பாகவே அறிவாலயம் சைடில் கேபினட் பற்றிய டாக் ஓடுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, ரிசல்ட்டுக்காக பொறுமையா காத்திருந்தாலும், தி.மு.க. ஆட்சிதான் அமையும்கிற நம்பிக்கை அறிவாலயத் தரப்புக்கு நிறையவே இருக்குது. அதனால் அதிகபட்சம் 35 அமைச்சர்கள் வரை கேபினட்டில் இருக்கலாம் என்பதால், அதில் வன்னியர், முக்குலத்தோர், கொங்கு வேளாளர் ஆகிய 3 சமூகங்களுக்கு அதிக பிரதிநிதித் துவம் தரப்படலாம்னு பேச்சு அடிபடுது. அதேபோல, இப்பவே பவர்ஃபுல் இலாகாவை கைப்பற்ற தி.மு.க. சீனியர்கள் பலரும் காய் நகர்த்தறாங் களாம். ஆனாலும், கலைஞர் ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டும்தான் வாய்ப்புன்னும், அதிகமாகவே புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பதவி கொடுக்கலாம் என்றும் அறிவாலயம் நினைக்குதாம்.''”
"இன்னும் என்னென்ன ஆலோசனைகள் இருக்குதாம்?''”
"துறைகள் சிலவற்றை நிர்வாக வசதி கருதி பிரிக்கிற ஐடியாவும் தி.மு.க. தலைமைக்கு இருக்குதாம். கலைஞர் ஆட்சியில், கல்வித்துறையைக், பள்ளிக் கல்வித்துறை என்றும் உயர் கல்வித்துறை என்றும் இரண்டாகப் பிரித்ததுபோல், பொதுப்பணித் துறையை, நீர்வளத்துறை என்றும் கட்டிடங்கள் பராமரிப்புத் துறை என்றும் இரண்டாகப் பிரிக்கலாமான்னு ஸ்டாலின் ஆலோசிக் கிறாராம். இதற்கிடையே கிச்சன் கேபினெட்டின் உறவுகள் மூலமாக சுகாதாரத்துறையை கைப்பற்ற திருச்சிக்கு தெற்கே உள்ள ஒரு டாக்டர் முயற்சிக்கிறார் என்றும் சொல்லப்படுது. இவர், அரசுப் பணியில் இருந்தவராம். துறை அனுபவமும் அவருக்கு அதிகமாம். அதனால் சித்தரஞ்சன் சாலை உறவுகளிடம் இருக்கும் நெருக்கத்தால், அவர் இப்பவே தீவிரமாகக் காய் நகர்த்தறாராம். இப்படிப்பட்ட செய்திகள்தான் அறிவாலயத்தில் சுவாரஸ்யமாக அடிபடுது.''”
"தி.மு.க. சைடில் எதிர்பார்ப்பு அதிகமாகும் நேரத்தில், ஓட்டு எண்ணிக்கை தள்ளிப் போகுமோங்கிற பயம் கடைசி நேரம்வரை நீடிக்கத்தானே செய்யுது. தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கே பதிவு செய்யலாம்னு உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்திருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, வாக்கு எண்ணிக்கையின்போது, கரூரில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யணும் என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, "சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ததை தேர்தல் ஆணையம் தடுக்காததால்தான், கொரோனா ரெண்டாவது அலை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமான தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கையே பதிவு செய்ய முடியும்'னு எச்சரிச்சிருக்கு. அதோட நிறுத்தாமல், "கொரோனா தடுப்பு நடுப்பு நடவடிக்கையில் உரிய கவனம் செலுத்தாவிட்டால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து, அதனை ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்குத் தள்ளி வைத்துவிடுவோம்' என்றும் அது எச்சரிக்கை செய்து, 30-ஆம் தேதி, இது தொடர்பான அறிக்கையைக் கேட்டிருக்கு. நெற்றிக்கண் திறந்த நீதிமன்றத்தால், தேர்தல் ஆணையமே ஆடிப்போய்விட்டது.''”
"ஆமாம்பா... சரியான சாட்டை. அதேநேரம் வாக்கு எண்ணும் பணி எக்காரணம் கொண்டும் தள்ளி வைக்கப்பட மாட்டாதுன்னு, தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு சொல்லியிருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, நீதிமன் றத்தின் அதிரடியைக் கண்டதும் மிரண்டுபோன தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, உடனே தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை உயரதிகாரிகளுடன் தீவிரமாக இதுகுறித்து ஆலோசிச்சார். அப்போது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை எப்படியெல்லாம் கடுமை யாகக் கடைபிடிக்கிறதுன்னு விவாதிக்கப்பட்டிருக்கு. மேலும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களும் பொது ஊரடங்கை அமல் படுத்துவது பற்றியும் ஆலோசிச்சிருக்காங்க. வாக்கு எண்ணும் மையத்தில் பிரதான கட்சிகளின் வேட் பாளர்களுடன் தலைமை ஏஜெண்ட் மற் றும் சீனியர் வழக்கறிஞர்கள் உடனிருப்பார்கள். இவர்கள் தங்கள் தரப்புக்காக சின்னப் பிரச்சினை என்றாலும் வாதாடுவார்கள். அத்தகைய விவாதங்களை எப்படித் தடுப்பதுன்னும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கு.''”
"வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தமிழக தேர்தல் அதிகாரி சத்யப் பிரதா சாகு, மத்திய அரசுப்பணிக்குப் போகப் போகி றாராமே?''”
"அதுவும் உண்மைதாங்க தலைவரே, சத்யப்பிரதா சாகு, தமிழக தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவர். உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு இவர் மிகவும் நெருக்கமான அதிகாரி. அதனால்தான் தேர்தல் நேரத்தில் தி.மு.க. தரப்பு வைத்த புகார்களை அதிகம் கண்டுகொள்ளாமல், அ.தி.முக.வுக்கு ஆதரவாகவே அவர் செயல்பட்டார்னு அதிகாரிகள் தரப்பிலேயே குமுறல் இருக்குது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நடந்தால், தி.மு.க. தனது விவகாரங்களைக் கிளறலாம்னு யோசிக்கும் சத்யப்பிரதா சாகு, மத்திய தேர்தல் கமிஷனுக்குச் சென்று விடலாம்னு நினைக்கிறாராம். அதனால் அது தொடர்பான முயற்சிகளில் அவர் இப்போதே இறங்கிட்டாராம்.''”
"கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செல்வாக்குமிக்கவராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக்வரதன் ஷெட்டி பற்றியும், கோட்டை வட்டாரத்தில் பரபரப்பா டாக் அடிபடுதேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, அசோக்வரதன் ஷெட்டி கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பவர்ஃபுல் அதிகாரியாக இருந்தார். தி.மு.க. ஆட்சி அமைந்தால், இப்போது முதல்வர் எடப்பாடியின் ஆலோசகராக இருக்கும், முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகத் தின் இடத்திற்கு, ஷெட்டி வருவார்ங்கிற எதிர்பார்ப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் பலமாகவே இருந்தது. இந்த நிலையில், ஷெட்டி மீண்டும் பவர்ஃபுல் பதவியில் அமர்ந்தால், இப்போதுள்ள அ.தி.மு.க. ஆட்சிக்கு தோதாக நடந்துகொண்ட அதிகாரிகளுக்கு, சங்கடம் வரும் என்பதால், அவர்கள் அதை விரும்பவில்லையாம். அதிகாரிகள் டிஸ்டர்ப் ஆனால் நிர்வாகம் ஸ்மூத்தா இருக்காது. இதையெல்லாம் உணர்ந்த தி.மு.க. தரப்பு, ஷெட்டியை முன்புபோல் முன்னிலைப்படுத்த வேண்டாம்னு நினைக்குதாம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தேர்தல் ரிசல்ட் எப்படி இருந்தாலும், மே 3-ந் தேதி சசிகலாவைச் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளாராம் துணை முதல்வரும் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ். சசிகலாவின் உதவியோடு எடப்பாடிக்கு எதிராக, தனது உரிமையையும் முக்கியத்துவத் தையும் நிலைநாட்ட அவர் நினைக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க. வழிகாட்டுக் குழுவில் இருக்கும் சிலர். ஆனால், சசிகலாவிடமிருந்து இதுவரை ஓ.பி.எஸ்.சை சந்திக்க சிக்னல் காட்டப்படவில்லையாம்.''”