மூன்று ரவுண்டு மூன்றாவது துப்பாக்கி! -தொடரும் சர்ச்சை!

mla

நில ஆக்கிரமிப்பு தொடர்பான தகராறின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது செய்யப்பட்டிருப்பது. தி.மு.க.வின் துப்பாக்கி கலாச்சாரம் என ஆளு ந்தரப்பால் விவாதமாக்கப்பட்டுள்ளது.

mla

இந்த சம்பவத்தில் தொடர்புடைய எதிர்த்தரப்பினரான இமயம் குமாரும், அவரது சகோதரர் தாண்டவமூர்த்தியும் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், இவர்களுக்கு ஆதரவாகவும், எம். எல்.ஏ. இதயவர்மன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு, இவ்விருவரின் கட்சி கடந்த செல்வாக்குதான் காரணம் என்கிற

நில ஆக்கிரமிப்பு தொடர்பான தகராறின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது செய்யப்பட்டிருப்பது. தி.மு.க.வின் துப்பாக்கி கலாச்சாரம் என ஆளு ந்தரப்பால் விவாதமாக்கப்பட்டுள்ளது.

mla

இந்த சம்பவத்தில் தொடர்புடைய எதிர்த்தரப்பினரான இமயம் குமாரும், அவரது சகோதரர் தாண்டவமூர்த்தியும் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், இவர்களுக்கு ஆதரவாகவும், எம். எல்.ஏ. இதயவர்மன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு, இவ்விருவரின் கட்சி கடந்த செல்வாக்குதான் காரணம் என்கிறார்கள்.

சிறுதாவூர் பங்களாவில் காட்டிய விசுவாசத்தின் மூலம் கிடைத்த சசிகலாவின் அறிமுகத்தால், குறுகிய காலத்திலேயே ரியல் எஸ்டேட் தொழிலில் இமயம் குமாருக்கும், தாண்டவமூர்த்திக்கும் அசுர வளர்ச்சி கிடைத்தது. இமயம் குமாரின் திருமணத்தில் 27 அமைச்சர்கள் கலந்துகொள்ளும் அளவுக்கு செல்வாக்கும் உயர்ந்திருக்கிறது. இதுவே, உறவினர்களாக இருந்தும், உள்ளூர் செல்வாக்கை விட்டுக்கொடுக்காத எம்.எல்.ஏ. இதயவர்மனின் தந்தை லட்சுமிபதிக்கு புகைச்சலைக் கிளப்பி இருக்கிறது. இருதரப்புக்கும் இடையே தொடர் உரசலுக்கும் காரணமாகி யிருக்கிறது.

எம்.எல்.ஏ. இதயவர்மன்மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பதைக் கண்டித்தும், அவரை விடுவிக்கக்கோரியும் திருப்போரூர் தொகுதி தி.மு.க.வினரும், பொதுமக்களும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட நிலையில், விசாரணையின் போக்கு குறித்து போலீசாரிடம் பேசினோம்.

“சம்பவம் நடந்தபோது கண்ணகி நகரைச் சேர்ந்த ரவுடிகளான அப்பு, இட்லி வெங்கடேசன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட் டோர் பயங்கர ஆயுதங்களுடன், 12 கார்கள் மற்றும் 20 பைக்குகளில் இமயம் குமாருடன் வந்துள்ளார்கள். இந்த ரவுடிகள்தான் இமயம் குமாரின் நில விவகாரங்களில் பல விதங்களில் உதவியாக இருப்பவர்கள். இந்தத் தகவலையறிந்து, விவரம் கேட்பதற்காகச் சென்ற லட்சுமிபதியின் ஆட்கள் மீது அரிவாள் வெட்டு விழுந்தபிறகே, லட்சுமிபதி தனது கைத்துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதன்பிறகு, எம்.எல்.ஏ. இதயவர்மன் தனது பிஸ்டலுடன் சென்றிருக்கிறார்.

முதற்கட்ட விசாரணையில் இரண்டு துப்பாக்கிகள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டதாக தகவல். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, சம்பவத்தின்போது மூன்று துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு தரப்பிலுமே மாறிமாறி சுட்டுக் கொண்டுள்ளனர். மூன்றுக்கும் மேற்பட்ட ரவுண்டுகள் சுடப்பட்டுள்ளன. அதில் ஏற்பட்ட கண்ணாடிச் சிதறலால், அந்த வழியே வந்த சீனிவாசன் என்பவருக்குக் காயமேற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

இதற்கிடையே, எம்.எல்.ஏ. தரப்பின் இரண்டு துப்பாக்கி களுக்கான லைசன்ஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே காலாவதி ஆகியிருந்த நிலையில், லைசன்ஸ் புதுப் பிக்கும் வரை காவல்துறையிடம் ஒப்ப டைத்திருக்க வேண்டும். ஆனால், ஊரடங்கு போன்ற காரணங்களால் அதைச் செய்யாமல் விட்டிருக்கிறார்கள். இதுபற்றி அறிந்திருந்தும் தகவல் கூறாததால், 26 ஆண்டுகளாக திருப்போரூர் பகுதியிலேயே உளவுத்துறை அதிகாரியாக இருந்த சந்திரசேகரன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்யப் பட்டிருக்கிறார்.

-அரவிந்த்

nkn180720
இதையும் படியுங்கள்
Subscribe