"தமிழகத்தின் கல்வி மற்றும் சமூகச் சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்டகாலமாக ஆழமாக வேரூன்றியுள்ளது. அதைப் பின்பற்றுவதில் தமிழகம் எப்போதும் உறுதியாக உள்ளது' என முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு சொன்னதும், "கல்வியை அரசியலாக்க வேண்டாம். தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராயுங்கள், இல்லாவிட்டால் தமிழகம் 5000 கோடியை இழக்கும்' என்கிறார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் பழ.செல்வகுமார், ""மொழிக்காக எனது தந்தை போராடினார். இப்போது நானும் போராடு கிறேன். இதேபோல் தலைமுறையை கடந்து மொழிக்காக போராடுபவர்கள் தமிழ்நாட்டு மக்கள். எப்படி தமிழ் நமக்கு தாய்மொழியோ, இந்தி அவர்களுக்கு தாய்மொழி. அந்த மொழி மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் அதனை திணிக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம். விருப்பப்பட்டு படிப்பது என்பது வேறு. திட்டமிட்டு ஏன் திணிக்கிறீர்கள். இந்தியை கட்டாயம் கற்கவேண்டும், பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது. என் எதிர்கால வாரிசுகளை இந்தி பேசும் மக்களாக மாற்றவேண்டிய அவசியம் என்ன? இதில் மிகப்பெரிய அஜெண்டா இருக் கிறது என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு.
ராஜஸ்தான் மாநில தாய் மொழியான ராஜஸ்தானி சிதைக்கப் பட்டுள்ளது. அதேபோல் போஜ்பூரி, கடுவாலி, மைதிலி, ஒரியா, மராட் டிய மொழிகளை அழித்து இந்தியை பரப்பியுள்ள னர். இன்று அவர் கள் இந்தி வாலாக் களாக மாறிவிட் டார்கள். தமிழர்களையும் இந்திவாலாக்களாக மாற்றுவது தான் அவர்களது நோக்கம். அதனால்தான் எச்சரிக்கிறோம், போராடுகிறோம்.
"மும்மொழிக் கொள்கையை ஏற்கும்வரை, தமிழகத்துக்கு நிதி விடுவிக்க முடியாது' என்கிறார் மத்திய கல்வித்துறை அமைச்சர். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்ட மாநிலத்திற்கு தந்துவிட்டீர்களா? இவர்கள் நிதி கொடுப்பது கல்வி சார்ந்து இல்லை. இவர்களுக்கு பிடிக்காத மாநிலத்திற்கு, இவர்கள் ஆளாத மாநிலத்திற்கு கொடுக்கமாட்டார்கள். அதுதான் உண்மை... அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே கிடையாது. ஆனால் சமஸ்கிருதம் படிக்க ஆசிரியரை நியமிக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை என்பது மறைமுகமாக இந்தியையும், சமஸ்கிருதத் தையும் திணிக்கும் முயற்சி. ஒன்றிய அரசு நடத்துகிற பள்ளிகளே அதற்கு எடுத்துக்காட்டு.
தற்போது தமிழக அரசு எடுக்கும் பல்வேறு முயற்சிகளால் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. மும்மொழிக் கொள்கை வந்தால் இடைநிற்றல் அதிகமாகும். அப்போது அவர்கள் நினைக்கிற விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த தொடங்கு வார்கள். "பள்ளிக்குப் போக வேண்டாம், நிதி உதவி அளிக்கிறோம், உங்களது முன்னோர்கள் செய்த தொழிலை செய்யுங்கள்' என மூளைச் சலவை செய்வார்கள். இதேபோல் "அக்னிபாத்' திட்டத்தை செயல்படுத்துவார்கள். இதுதான் மும்மொழிக் கொள்கையின் சதித்திட்டம்.
சென்றமுறை பிரதமர் மோடி தமிழர் களுடைய உரிமைகளைப் பறிக்க முயற்சித்தபோது, தமிழ்நாட்டு மக்கள் 'ஏர்இஹஸ்ரீந்ஙர்க்ண்' என்று சொல்லி துரத்தியடித்தார்கள். இந்தமுறை 'ஏர் இஹஸ்ரீந் ஙர்க்ண்' கிடையாது. 'ஏங்ற் ஞன்ற் ஙர்க்ண்' என்று சொல்லி மக்கள் துரத்துவார்கள் என்று சொன்னார் உதயநிதி ஸ்டாலின். இதனைக் கூட ஒழுங்காக மொழி பெயர்க்காமல், பிரதமரை அவமரியாதை செய்திருக்கிறார் பா.ஜ.க. மா.தலைவர்.
பிறக்கும்போதே கன்னடத்தில் பேசிக்கொண்டே பிறந்தாரா பா.ஜ.க. மா.தலைவர். அவர் கர்நாடகத்தில் பணியாற்றியதால் தேவையிருந்தது, கன்னட மொழியை கற்றுக்கொண்டார். அதேபோல் தேவையிருந்தால் எல்லோரும் படித்துக்கொள்வார்கள்'' என்றார்.
கல்வியாளர் இராம.சுப்பிரமணி யம் நம்மிடம் பேசுகையில், ""முதல்வர் ஸ்டாலின் சொன்னதுபோல் பிளாக்மெயில் பண்ணுகிறார் மத்திய அமைச்சர். நிதி கொடுக்க முடியாது என்று சொல்ல உங்க ளுக்கு என்ன உரிமை இருக் கிறது. தமிழ் நாட்டில் இருந்து கேள்வி கேட்டால் உங்களுக்கு கொதிக்கிறதா? அப்படித்தான் கேள்வி கேட்போம். புதிய தேசிய கல்விக் கொள்கைக்காக வெளிநாடு போனோம், பார்த்தோம் என்று கதைவிடுகிறார்கள். எல் லோரும் சொல்லுவது அமெரிக்காதான். அங்கு இரண்டு மொழிதான். ஒன்று ஆங்கிலம், இன்னொன்று ஸ்பேனிஷ் அல்லது பிரெஞ்சு அல்லது சீனமொழி. இதுபோல் இரண்டு மொழிதான் இருக்கும்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இருமொழிக் கொள்கையை தி.மு.க. அரசு பின்பற்றுகிறது என்று முட்டாள்தனமாக பேசுகிறார் பா.ஜ.க. மாநிலத் தலைவர். எல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்டது, தமிழ்நாடு மட்டும்தான் ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார்கள்.
"வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில், "எல்லோரும் பணிந்த பின்பு நீ மட்டும் பணியாமல் இருப்பது உனக்கு என்ன லாபமா?' என ஜாக்சன் துரை கேட்பார். அதற்கு வீரபாண்டிய கட்டபொம்மன்,"எல்லோரும் பணிந்த பின்பு நான் மட்டும் பணியாமல் இருப்பது உனக்கு என்ன நஷ்டமா?' என எதிர்த்து கேட்பார். அதுபோல உனக்கு என்ன நஷ்டம்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாதனைகளுக்கு காரணமானவர் அண்ணா. இருமொழிக் கொள்கையில் அவர் உறுதியாக இருந்த தால் தமிழோடு, ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்களாக தமிழர்கள் உள்ளனர். அதனால் உலகம் முழுவதும் உன்னத நிலையில் உள்ளார்கள் என்று மிகச்சிறந்த பொருளாதாரத்துறை ஆய்வாளர் சுவாமிநாதன் 15 வருடங்களுக்கு முன்பு கட்டுரை எழுதியிருக்கிறார்.
மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளதாக பா.ஜ.க. தெரிவிக்கிறது. அப்படிச் சென்றால் பா.ஜ.க.வினரை மக்கள் அடித்து விரட்டு வார்கள்'' என்றார் கொதிப்பாக.
-வே.ராஜவேல்