டலூர் மாவட்ட தி.மு.க. பிரமுகர் ஒருவரின் மோசடி விவகாரம், பலத்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இங்குள்ள நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 21 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் தி.மு.க. 7, அ.தி.மு.க. 7, பா.ம.க. 2, சுயேச்சைகள் 5. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது வெற்றி பெற்ற இவர்களில், அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க.வைச் சேர்ந்த செல்வி என்பவர் சேர்ம னாகத் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் துணை சேர்மனாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜான்சிமேரி செலக்ட் ஆனார்.

இப்போது தி.மு.க. ஆட்சி வந்திருக்கும் நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரை சேர்மன் பதவியில் உட்கார வைக்கப்போகிறேன் என்றபடி, நல்லூர் வடக்கு தி.மு.க. ஒ.செ.வான பாவாடை கோவிந்தசாமி களத்தில் குதித்தார்.

Advertisment

ss

சேர்மன் பதவிக்கு தகுதியான ஆள் என்று அவர் தேர்ந்தெடுத்தது பசைப் பார்ட்டியான, வேப்பூர் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக் கண்ணுவைத்தான். இவர் தி.மு.க. கிளைச் செயலாளராக இருந்தவர்.

Advertisment

"உங்களை சேர்மன் பதவியில் அமர்த்துவது எனது பொறுப்பு''’ என்று அவரிடம் உறுதி கூறி, அவரின் ஆசையைத் தூண்டியிருக்கிறார் கோவிந்த சாமி.

பிறகு?

அங்குள்ள தி.மு.க. வினரே விவரிக்கிறார்கள்...

"ஏற்கனவே, மற்ற கட்சி கவுன்சிலர்களை பர்ச்சேஸ் செய்கிறேன் என்று முத்துக் கண்ணுவிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தை வாங்கியிருக்கிறார் பாவாடை கோவிந்தசாமி. அப்போது ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இருந்ததால், கதை நடக்க வில்லை. அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் முத்துக்கண்ணுவிடம் ஆசை வார்த்தை கூறிய கோவிந்தசாமி, நாம் ஆளும்கட்சி ஆகிவிட்டோம். இப்போது அதிகாரம் நம் கையில். அதனால் நினைத் ததை சாதிக்கலாம். சுயேட்சை கவுன்சிலர்களிடமும் அ.தி. மு.க. கவுன்சிலர்கள் சிலரிடமும் பேசிவிட்டேன். அவர்கள் நம் கட்சியில் சேரத் தயாராக உள்ளனர். எனவே நீதான் சேர்மன் என்று கூறி, அதற்கான செலவுக்கு என்று மேலும் ஒன்றரைக் கோடி ரூபாய் பணத்தை முத்துக்கண்ணுவிடமிருந்து பெற்றுள்ளார். இதன்பின் தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேருடன் சுயேட்சை கவுன்சிலர்கள் இருவரை பிடித்து ஒன்பது பேருடன் விருத்தாசலம் கோட்டாட்சிய ரிடம் சென்று, பா.ம.க. சேர்மன் செல்வி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று மனு கொடுக்க வைத்தார் கோவிந்தசாமி. அதோடு அ.தி.மு.க. கவுன்சிலர்களின் ஆதரவு நமக்கு உள்ளது என்று கூறி, போலியான ஆட்களை அழைத்துச் சென்று, தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க.விலிருந்து அவர்கள் தி.மு.க.வில் இணைந்ததாக நம்பவைத்தார் கோவிந்தசாமி. இவரது ஏமாற்று வித்தையைக் கண்டு கொதித்துப் போன, அ.தி.மு.க. மா.செ.வான அருண் மொழித்தேவனோ, எங்கள் கட்சியில் இருந்து யாரும் தி.மு.க.வுக்கு செல்லவில்லை என்றபடி, ஊடகத்தினர் முன்பு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏழு பேரையும் கொண்டு வந்து நிறுத்தினார்.

dd

அதன்பிறகும் விடாக்கண்டனாக புறப்பட்ட கோவிந்தசாமி 7 தி.மு.க. கவுன்சிலர்கள் உட்பட மொத்தம் 13 கவுன்சிலர்களை மட்டும் தன் கையில் வைத்துக்கொண்டு, சேர்மன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரச் செய்தார். இதன் அடிப்படையில் கடந்த ஏழாம் தேதி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. அதில் 13 ஒன்றிய கவுன்சிலர்கள் மட்டுமே சேர்மன், துணைச் சேர்மன் பதவிகளை மாற்ற வேண்டுமென ஓட்டளிக்க சென்றனர். ஓட்டெடுப்பு முடிந்தபிறகு கோட் டாட்சியர் ராஜ்குமார், எந்தவித முடிவையும் அறிவிக்காமல் "இது சம்பந்தமாக உயரதிகாரி களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அவர்கள் முடிவு செய்வார்கள்' என்று கூறி அனுப்பி விட்டார்.

வெளியே வந்த கோவிந்தசாமி, வேப்பூர் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கண்ணுவுக்கு மாலை போட்டு, இவர்தான் சேர்மன். 11 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தாலே சேர்மன் பதவியை மாற்றமுடியும் என்று, பத்திரிகை ஊடகத்தினர் முன்பு பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், 17 கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தால்தான், தான் சேர்மனாக முடியும் என்பதைத் தெரிந்துகொண்ட தோடு, கோவிந்தசாமி யால் தான் ஏமாற்றப் பட்டதையும் அறிந்து கொண்ட முத்துக் கண்ணு, கோவிந்த சாமியிடம் "நான் கொடுத்த மூன்றரைக் கோடியைத் திருப்பிக் கொடுங்கள்'’என்று கேட்க, இந்த விவகாரம் கட்சித் தலைமை வரை போயிருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் இது குறித்து, முத்துக்கண்ணுவிடம் விசாரித்திருக்கிறார்''’என்று விரிவாகவே விவரித்தனர்.

இந்த நிலையில், முத்துக்கண்ணு, கோவிந்த சாமியை ஏமாற்றியது பற்றிப் புலம்பும் ஆடியோ ஒன்று வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து முத்துக்கண்ணுவிடம் நாம் கேட்டபோது, "காலையில் பேசுகிறேன்... மாலையில் பேசுகிறேன்...' என்று பேசத் தயங்கினார். அதேபோல், பாவாடை கோவிந்தசாமியை நாம் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும், அவரும் போனை எடுக்கவில்லை.

இந்த நிலையில் தன் மீது நடவடிக்கை பாயுமோ என்று பயந்த பாவாடை கோவிந்தசாமி, நெஞ்சுவலி என்று கூறி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் படுத்துக் கொண்டி ருக்கிறாராம்.

பாவாடை கோவிந்தசாமி பற்றி அவரை அறிந்த கட்சிக்காரர்கள் சிலரிடம் விசாரித்த போது, "அவர் கட்சிக்காரர்களை மதிக்கவேமாட்டார். கடந்த 2006-11-ல் திமுக ஆட்சிக் காலத்தில் தனது மனைவி ஜெயசித்ராவை நல்லூர் ஒன்றிய சேர்மனாக்கினார். அவர் மூலம் நிறைய சம்பாதித்தார். இவரை ஒ.செ. பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று அதிக எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும் அவரே அந்தப் பதவியில் தொடர்கிறார். கட்சிக்காரரிடமே, மூன்றரைக் கோடி ரூபாயை சுருட்டிய கோவிந்தசாமி மீது, கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?'' என்கிறார்கள் ஆதங்கமாய்.

இந்த விவகாரத்தில் அறிவாலயம் கவனம் செலுத்துமா?