ஜூன் 20-ஆம் தேதி நள்ளிரவு 11:45 மணி. சென்னை -விமான நிலையம். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன், வழக்கொன்றிற்காக டெல்லி சென்று திரும்புகிறார். அவரை ஏர்போர்ட்டிலேயே வைத்து மடக்குகிறார் மஃப்டியில் வந்த கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்துக்கு இரவோடு இரவாகக் கொண்டு செல்லப்படுகிறார்.

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வாதாடிய வாஞ்சிநாதன், மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமனத்துக்கு எதிரான வழக்கிலும் வாதாடி வெற்றிபெற்றவரும்கூட..

sterlite

""திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினருமே என பலிகடா ஆக்கும் முயற்சி நடக்கிறது. ஊபா (UAPA) மற்றும் குண்டர் சட்டத்தில் போராட்ட முன்னணியினரை கைது செய்து மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட் டுள்ளன''’என்கின்றனர் அரிராகவன், தங்கப்பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள்.

Advertisment

இதனைத்தான் நக்கீரன் ஜூன் 13-15 இதழில் "போராடினால் போட்டுத் தள்ளு'’என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தோம். ""எதிர்பார்த்தது போலவே வாஞ்சிநாதனைக் கைது செய்திருக்கிறார்கள். மத்திய-மாநில அரசுகள் தூத்துக்குடியில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை நடத்திக்கொண்டிருக்கின்றன''’என்கிறார் மனித உரிமை மையத்தின் மற்றொரு வழக்கறிஞரான பார்த்தசாரதி.

vanchinadhanஇது ஒருபுறமிருக்க... ஸ்டெர்லைட் ஆலையில், ஜூன் 17-ஆம் தேதி நிகழ்ந்த ரசாயனக் கசிவால் தூத்துக்குடியெங்கும் அச்ச அலைகள் பரவின. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாது காப்பு நடவடிக்கைகளை எடுத்தது. ஸ்டெர்லைட் நிர்வாகம் உடனே, பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட எங்களது பணியாளர்களை அனுமதிப்ப தோடு, குறைந்தளவு மின்சாரமும் விநியோகிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தது. இது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டக்காரர்களிடம், கொல்லைப்புற வாசல் வழியாக ஆலையைத் திறக்கும் முயற்சியோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் பாதுகாப் புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் போலீஸ் டீமின் ஆய்வாளர் தினமும் ஆலைக்குள் சென்று ஆய்வுசெய்வது வழக்கம். கடந்த ஜூன் 17 அன்று, அப்படிச் சென்றபோது கனத்த இரும்பு டேங்கரிலிருந்து ஒருவித வாயு கசிவதையும் மூச்சு முட்டுவது போலிருப்பதையும் உணர்ந்து, அவர் அவசரமாக கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

சப்-கலெக்டர் பிரசாந்த் தலை மையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் லிவிங்ஸ்டன், தாசில்தார் சிவகாமசுந்தரி, மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமரேசன், தொழிற் சாலை ஆய்வாளர்கள் ராஜ்குமார், சரவணன் உள்ளிட்டோர் ஆலையை ஆய்வுசெய்து கசிவை உறுதிசெய்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ரசாயனக் கசிவுக்கு காரணமான அமிலத்தை அகற்ற துரிதமான ஏற்பாடுகளைச் செய்தார்.

ஏனிந்த ரசாயனக் கசிவு? விஷயம் தெரிந்தவர்களிடம் விசாரித்தோம். ""காப்பர் தயாரிப்பின் மூலப்பொருட்களில் கந்தக அமிலம் முக்கியமானது. இந்த அமிலத்தை மெகா சைஸ் இரும்புத் தகடுகளைக் கொண்ட டேங்கரில்தான் ஸ்டாக் வைத்திருக்கிறது ஸ்டெர்லைட். இந்த அமிலம் 24 மணிநேரமும் நன்கு குளிர்நிலையில் வைக்கப்பட்டால்தான் பாதுகாப்பானது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து 19 நாட்களான நிலையில், மின்சாரத் துண்டிப்பால் இந்த டேங்கை குளிர்ந்த சூழலில் வைக்கமுடியாமல் போனது. இதனால் டேங்கை அரிக்க ஆரம்பித்த கந்தக அமிலத்தின் ஆரம்பகட்ட கசிவைத்தான் அந்த போலீஸ்காரர் பார்த்திருக்கிறார்.

""ஆலைக்கு கலெக்டர் சீல் வைக்க வந்தபோது, ஸ்டெர் லைட்டின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியான சுமித் பர்மன் உடனிருந்தார். கலெக்டருக்குத் தெரியாமல் போனா லும் அவராவது இத்தகைய அபாயங்கள் குறித்து எச்சரித் திருக்கவேண்டும். ஏன் அப்படிச் செய்யவில்லை?'' என்கிறார் கள் இந்த திடீர் ரசாயனக் கசிவைச் சந்தேகிப்பவர்கள்.

collectorகாப்பர் தயாரிப்புக்கு கந்தக அமிலம் மட்டுமின்றி, ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரஜன் பயன்பாடும் உண்டு. காப்பர் தயாரிப்பின்போது வெளியேறும் கழிவுகளில் ஜிப்ஸம், பாஸ்பாரிக் அமிலம், சல்பர் டை ஆக்ஸைட், சைட்டோ ப்ளாஸா போன்றவையும் உண்டு. தவிர காப்பர் தயாரித்த பின் எஞ்சும் மூன்றாம் காப்பர் ஸ்லாக் கழிவுகளும் ஆலைக்குள்தான் இருப்பு வைக்கப்படும். இந்த அமிலக் கசிவை யாரும் கவனிக்காமல்போய், பிற அமிலங்களோடு கலந்து பெரிய விபத்து ஏற்பட்டிருந்தால்?

இந்த விபத்து குறித்து ஸ்டெர்லைட்டின் தரப்பறிய, ஆலையின் பி.ஆர்.ஓ.வான ஜோமன் மேத்யூவைத் தொடர்பு கொண்டோம். ""ஆலையில் 80 லாரி லோடுகள் அளவிலான கந்தக அமிலம் ஸ்டாக்கில் இருப்பதோடு, வெளியேற்றப்பட வேண்டிய சல்ப்யூரிக் ஆசிட் கழிவுகளும் உள்ளன. முன் னறிவிப்பின்றி ஆலை சீல்வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. சீல் வைக்கும் சூழலில் நாங்கள் என்ன காரணம் சொன்னாலும் எடுபடாது என்பதால் நிலைமையை விளக்கி அரசுக்கு கடி தம் கொடுத்தோம். அதற்குப் பதில் கிடைக்கவில்லை'' என்றார்.

போராட்டத்துக்குப் பின்னும் நடக்கும் கைது, கெடுபிடிகள், அத்துமீறல்கள், ஸ்டெர்லைட்டில் நடந்தது விபத்தா... ஆலை இயங்காவிட்டாலும் ஆபத்து என மக்களை உளரீதியாக அச்சுறுத்த நடந்த சதியா என்று சந்தேகிக்க வைக்கிறது.

-பரமசிவன், நாகேந்திரன்

படங்கள்: ப.இராம்குமார்