"ஹலோ தலைவரே, இந்தமுறை சென்னை மழை, தலைநகரவாசிகளின் பயத்தையும் கவலையையும் ஓரளவு கரைச்சிக்கிட்டு இருக்குது.''”
"ஆமாம்பா, மழை நாள் வர்றதுக்கு முன்னதாகவே, தி.மு.க. அரசு சுதாரிச்சதன் பலன்தான் இது.''”
"உண்மைதாங்க தலைவரே, பொதுவா, சென்னைல ஒரு மணி நேரம் மழை பெய்தாலே, ஊர் வெள்ளக்காடா மாறிடும். ஆனா கடந்த 4 நாளா சென் னையில் மழை கொட்டித் தீர்த்தும், கடந்த ரெண்டு நாள்ல மட்டும் 15 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தும், பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படலை. இதுக்கெல்லாம் காரணம், முதல்வர் ஸ்டாலின் இதில் அதிக கவனம் வைத்து, அதிகாரிகளை விரட்டிக்கிட்டே இருந்த தாலதான்னு சென்னைவாசிகளே பாராட்டறாங்க.''’
"ஆமாம்பா, இந்த விசயத்தில் முதல்வரின் வேகத்துக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு ஈடு கொடுத்ததை சென்னை மக்கள் மறக்கமாட் டாங்களே.''”
"முதல்வரால் முடுக்கிவிடப்பட்ட இறையன்பு, மாநகராட்சி அதிகாரிகளை விரட்டி வேலை வாங்கினார். வார இறுதி நாள்களான சனி, ஞாயிறுகள்ல, சென்னை முழுக்க விசிட் அடித்து, மழை நீர் வடிகால் வாய்க்கால்களை சரிசெய்யும் பணிகளை, ஆய்வு செய்தபடியே இருந்தார். நிலவரத்தை அவ்வப்போது முதல்வரின் கவனத்துக்கும் எடுத்துச் சென்றார். சென்னை மேயர் பிரியாவின் ஒருங்கிணைப்புப் பணியும் முக்கியம். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், தூர்ந்து போயிருந்த வடிகால்களை எல்லாம், இந்த தி.மு.க. ஆட்சி அசுரவேகத்தில் சரி செய்ததை எல்லோராலும் பார்க்க முடிந்தது. ஆனாலும், முதல்வரின் கொளத்தூர் தொகுதி உள்பட வடசென்னையில் தேங்கியுள்ள மழைத் தண்ணீர், இன்னும் அதிக கவனம் செலுத்தணும்ங் கிறதை உணர்த்துது.''”
"சர்ச்சை நாயகராக மாறிவிட்ட தமிழக கவர்னரைத் திரும்பப் பெறணும்னு, ஜனாதிபதியிடம் வலியுறுத்த தி.மு.க. தயாராகுதே?''”
"ஆமாங்க தலைவரே, மதவாதத்தைத் தூண்டும் விதமாகப் பேசிவரும் கவர்னர் ரவி ராஜினாமா செய்யணும்னு தி.மு.க.வின் தோழமைக் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டது குறித்து, போனமுறை நாம் பேசிக் கிட்டோம். அதேபோல், அவரா ராஜினாமா பண்ணமாட் டார். ஜனாதிபதியிடம் போய், அவரைத் திரும்பப் பெறணும்னு கோரிக்கை வச்சாத்தான் எதிர்பார்த்தது நடக்கும்னு, சீனியர் அதிகாரிகள் பேசிக்கிட்டதையும் நாம் பேச்சில் வெளிப்படுத்தினோம். இந்தத் திட்டத்தை இப்போது கையில் எடுத்து பரபரத்துக் கொண்டு இருக்கிறது அறிவா லயம். இதற்காக, கவர்னர் ரவியைத் திரும்பப் பெறணும் என்கிற கோரிக்கைக் கடிதத்தைத் தயாரித்திருக்கிறது தி.மு.க. அதில் தோழமைக் கட்சிகளிடம் கையெழுத்து வாங்கிவரு கிறார் தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலு. இந்தக் கடிதத்தை தி.மு.க. எம்.பி.,க்கள் தற்போதைய ஜனாதிபதி முர்முவிடம் கொடுத்து, தமிழகத்தின் கருத்தை வலியுறுத்தப் போறாங் களாம் . இதற்கிடையே, கவர்னருக்கு எதிராக, சட்டரீதியான போராட்டத்தையும் தி.மு.க. கையில் எடுக்க இருக்குதாம்.''”
"ம்...''”
"கோவை கார் வெடிகுண்டு விவகாரத்தில் உளவுத் துறைக்கும் சட்டம் ஒழுங்கு துறைக்கும் புகைச்சல் ஏற்பட்டிருக்கே?''”
"இந்த விவகாரத்தில் சிறப்பான முறையில் துப்பு துலக்கியதாக சட்டம் ஒழுங்கு போலீஸாருக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி இருக்கிறார். இது உளவுத்துறையினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உளவுத்துறை இந்த விவகாரத்தை முன்கூட்டியே ஸ்மெல் செய்யாமல் கோட்டை விட்டுவிட்டது என்ற சர்ச்சை எழுந் துள்ள நிலையில், உளவுத்துறையிலேயே உள்நாட்டுப் பாது காப்புப் பிரிவை கவனிக்கும் ஐ.ஜி.யான ஈஸ்வரமூர்த்தி, சில எச்சரிக்கைகளை முன்கூட்டியே செய்தும், அதை உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் கண்டுகொள்ளவில்லை என்ற டாக்கும் அடிபடுகிறது. இதனால் அப்செட்டில் இருக்கும் அவர், இந்தப் பொறுப்பில் இருந்து வேறு பொறுப்புக்குப் போய்விடலாம் போலிருக்கிறது என்று புலம்புகிறாராம்.''”
"திருச்சி ராமஜெயம் கொலை விவகாரத்தில், சசிகலாவுக்கு நெருக்கமான சிலர் விசாரணை வளையத்தில் சிக்கி இருக்காங்களே?''”
"ராமஜெயம் கொலை விவகாரத்தில் இப்போது, சந்தேகத்திற்கு இடமான 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனையை நடத்த முடிவெடுத்த விசாரணைக்குழு, இதற்காக திருச்சி செஷன்ஸ் நீதிமன்றத்தில், அனுமதி கேட்டிருக்கிறது. பெரும்பாலும் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இவர்களில், சாமி ரவி என்பவர், திவாகரனின் சம்பந்தி யான ஜெயச்சந்திரனின் பிசினஸ் பார்ட்னராம். இந்தக் கொலை வழக்கின் விசாரணைப் போக்கு, தன் பக்கம் நகர்வதாகக் கருதும் சசிகலா அலர்ட் டாகி, தனது வழக்கறிஞர்கள் டீமை அழைத்து ஆலோசித்ததோடு, அவர்களுக்கு பெரும் வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, மனம் குளிரவைத்திருக்கிறாராம்.''”
"பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகைகளை தி.மு.க. பேச்சாளர் ஒருவர் இழிவு செய்துவிட்டார் என்று, சென்னையில் பா.ஜ.க. மகளிரணியினர் நடத்திய கண்டனப் போராட்டத்தில், சம்பந்தப் பட்ட நடிகைகள் எவரும் தலையைக் காட்டவில்லையே?''”
"பா.ஜ.க.வில் இருக்கும் குஷ்பு, கௌதமி உள்ளிட்ட நடிகைகளைப் பற்றி தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், ஆபாசமாக இழிவுபடுத்திப் பேசியதற் காக பா.ஜ.க. மகளிரணியினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப் பாட்டத்தை நடத்தினர். இதற்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. தங்களுக்காக நடத்தப்பட்ட அந்தக் கண்டனப் போராட்டத்தில் கலந்துகொள்ள, நடிகைகளான குஷ்பு, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் தயாரான நிலையில், ’நீங்கள் போராட் டக் களத்துக்கு வரவேகூடாது, வந்தால் ஆபத்து’ என்று அவர்களைக் கறாராகத் தடுத்துவிட்டாராம் பா.ஜ.க. மாநிலத் தலைவரான அண்ணாமலை. இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, மீடியாக்களின் லைம் லைட்டுக்கும் வந்தார். அண்ணாமலை. சம்பந்தப்பட்ட நடிகைகளை ஏன் தடுத்தார் என்று விசாரித்தபோது, அந்த நடிகைகள் களத்துக்கு வந்தால், எல்லோரின் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பிவிடும். எல்லோரும் தன்னைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள் என்று கருதிதான், அவர்களை அண்ணாமலை தடுத்துவிட்டார் என்கிறார்கள் கமலாலயத் தரப்பினரே.''”
"அண்மைக்காலமாக சசிகலா தரப்புக்கு ஆதரவாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், இப்ப அப்செட்டில் இருக்கிறார்னு சொல்லப்படுதே?''”
"தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்கு பசும்பொன் சென்ற சசிகலா, அங்கே பண்ருட்டி ராமச் சந்திரனையும் வரச் சொன் னார். இதற்காக தென் மாவட்டம் சென்ற ராமச் சந்திரன், மதுரை ஏர் போர்ட்டில் நின்று சசிகலாவை வரவேற்றி ருக்கிறார். எம்.என்.னின் சகோதரர் எம்.ஆர்., சசியின் அண்ணன் மகன் விவேக் உள்ளிட்ட அவரது சொந்தபந்தங்களும் ஏர்போர்ட்டில் வர வேற்றாங்க. அவர்கள் அனைவரோடும் பசும் பொன் சென்ற சசிகலா, பண்ருட்டியை வெளியே இருக்க வைத்துவிட்டு, தேவர் நினைவிடத்திற்குள் தனது சொந்தங்களை மட்டும் அழைத்துச் சென்றார். இதனால் அவர் வெளியிலேயே சங்கடத்தோடு காத்திருந்தாராம். இது அவரை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டதாம். அ.தி.மு.க. வில் உள்ள வன்னியர் சமூகப் பிரமுகர்களோ, பண்ருட்டிக்கு இந்த அசிங்கம் தேவையா?ன்னு, காட்டமாக விமர்சித்து வருகிறார்களாம்.”
’"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சென்னை சூளைமேட்டில் வசித்துவந்த சுதிர்ஜெயின் என்பவர், தற்போது மேலிட சப்போர்ட்டில் கோபாலபுரத்துக்கு குடிபெயர்ந்து இருக்கிறார். கோடிகளில் கல்லா கட்டும் இவரை, அனைத்து காண்ட் ராக்டர்களும் டெண்டர் விஷயமாக மொய்க்கிறாங்களாம். மந்திரிகளா லேயே முடிக்க முடியாத காரியத்தை எல்லாம், இவர் சுலபமாக முடித்துக் கொடுக்கிறாராம். இதனால் பொருளாதார ரீதியாக அதிக ஹெல்த்தி யாகிவிட்ட இந்த சுதிர் ஜெயின், ஜெ., சசிக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையை விலைக்கு வாங்குவதற்காக இப்போது டீலிங் நடத்தி வருகிறாராம்.''’